search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worth"

    • வளர்ச்சிப் பணிகளை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை ெதாடங்கி வைத்தார்.
    • வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை ஏ.ஜி வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் 33 மலை கிராமங்கள் உள்ளன. மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை ெதாடங்கி வைத்தார்.

    இதில் கொங்காடை ஆதிதிராவிடர் நல பள்ளிக்கூடம் முதல் மாதேஸ்வரன் வீடு வரையிலும், தாமரைக்கரை கொங்காடை சாலை முதல் பட்டய பாளையம் வரை உள்ள சாலை, ஒன்னகரை முதல் முத்தூர் வன எல்லை வரையிலும் தாமரைக்கரை பெஜில் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைத்தல் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    மேலும் தாமரைக்கரை பஸ் நிறுத்தம், பர்கூர் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பயணியர் நிழற்குடை, கடையிரட்டி பகுதியில் ஆழ்துளைக்கிணறு, தட்ட கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் மேலும் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பகுதியில் வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை ஏ.ஜி வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

    இதில் மைக்கேல் பாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வேளாண்மை உதவி இயக்குனர் கார்த்திகேயன், வேளாண்மை அலுவலர் ஜெயக்குமார், உதவி செயற்பொறியாளர் மரியதாஸ் செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் பர்கூர் சிவக்குமார் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி செயலாளர் ராமதாஸ் மற்றும் விவசாயிகள் மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜே.சி.பி. வாகனத்தின் ரூ.5 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் மாயமாகி இருந்தது.
    • தாலுகா போலீசார் சுற்றுப்புற பகுதியில் பொருத்தப்ப ட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஜே.சி.பி. வாகனத்தின் உதிரிபாகங்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்

    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளை யத்தில் அரசு சார்பில் தரை மட்டம் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தனியார் நிறுவனத்தினர் டெண்டர் எடுத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த கட்டுமான பணிகளுக்காக ஜே.சி.பி., பொக்லைன் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 5-ந் தேதி மாலை முதல் 6-ந் தேதி அதிகாலை சுமார் 2 மணி வரை 2 ஜே.சி.பி. ஆப்ரேட்டர்கள் வேலை செய்து விட்டு ஜே.சி.பி. வாகனத்தை அப்பகுதியிலேயே விட்டு சென்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு பணியாளர்கள் வந்து பார்த்த போது ஜே.சி.பி. வாகனத்தின் ரூ.5 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் மாயமாகி இருந்தது. பல இடங்களில் தேடி ப்பார்த்தும் கிடைக்காததால், யாரோ திருடி சென்றிருப்பதை அறிந்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து தாலுகா போலீசார் சுற்றுப்புற பகுதியில் பொருத்தப்ப ட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஜே.சி.பி. வாகனத்தின் உதிரிபாகங்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்

    ×