search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் கிருஷ்ணனுண்ணி"

    • பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மரவள்ளிகிழங்கு பயிரிடுவதற்காக ரூ.40 ஆயிரம் மானியத்திலான உபகரணங்களை வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினையும் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதையும்,

    அஞ்சூர் ஊராட்சி, அஞ்சூரில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும்,

    கொந்தளம் ஊராட்சி தட்டம்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.46 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்று சுவர் அமைக்கப்ப–ட்டுள்ளதையும்,

    கொந்தளம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் நர்சரி மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் நர்சரிக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கம்பி வலை மற்றும் பசுமைவிரிப்பு அமைக்கப்பட்டுள்ளதையும்,

    கொந்தளம் ஊராட்சி கள்ளிபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.21 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும்,

    அதேபகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.18.15 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இருப்பு கிடங்கு கட்டப்பட்டு வருவதையும்,

    கொளத்துப்பாளையம் ஊராட்சி கொம்பனைப்புதூரில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும்,

    அதே பகுதியில் ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கான கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் மற்றும் கொளத்துப்பாளையம் சந்தை வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை மற்றும் பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து கொந்தளம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் 1 விவசாயிக்கு சுமார் 2 எக்டர் பரப்பளவில் பரப்பு விரிவாக்கும் மரவள்ளிகிழங்கு பயிரிடுவதற்காக ரூ.40 ஆயிரம் மானியத்திலான உபகரணங்களை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், கல்பனா, கொடுமுடி தாசில்தார் முத்துகிருஷ்ணன், சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
    • மாணவ- மாணவிகள் தங்கி உள்ள அரசு விடுதிகளையும் ஆய்வு செய்து குறைகளை கேட்டு அறிந்தார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ரூ4.54 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதேபோல் குருவரெட்டியூர் ஊராட்சியில் பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் கோணார்பாளையம் அரசு பள்ளிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

    மேலும் குருவரெட்டியூரில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் ஆகியவற்றையும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களிடம் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவல் குறித்தும் அதனை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    பின்னர் பிற்படுத்தப்பட்ட மாணவ- மாணவிகள் தங்கி உள்ள அரசு விடுதிகளையும் ஆய்வு செய்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்தார்.

    குருவரெட்டியூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலை தொட்டியில் குளோரி நேட்டர் பொருத்தப்பட்டு உள்ளதையும், ஒலகடம் பேரூராட்சி நாகிரெட்டிபாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி கட்டிடங்களையும் பார்வையிட்டார்.

    ஆய்வின் போது அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.குகானந்தன், பஷீர் அகமது, குருவரெட்டியூர் ஊராட்சி மன்ற தலைவர் டி.அசோக்குமார் மற்றும் துறை அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • தொடர்ந்து காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ. சி. பூங்கா மைதானத்தில் நடைபெற்ற 74 -வது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து காவல் துறை, மருத்துவம், வேளாண்மை, பள்ளிக்கல்வி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட துறைகளில் சாதனை புரிந்த 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

    இதனையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வழக்கமாக குடியரசு தின விழாவில் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

    ஆனால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    குடியரசு தின விழாவையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், காளை மாட்டு சிலை, மணிக்கூண்டு, பஸ் நிலைய,ம் ஸ்வஸ்திகார்னர், ஜி.எச். ரவுண்டானா, ரெயில் நிலையம் போன்றவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் கோபி, பவானி, அந்தியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்திலும் பயணிகள் உடமை தீவிர பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 

    • ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு காமராஜர் அரசு மேல் நிலைப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அனைத்து பள்ளிகளிலும் 100 மாணவ, மாணவிகளுக்குஒரு நபர் என்ற வீதத்தில் பணி யாளர்கள் நியமிக்கப்பட்டு உணவு பரிமாறப்பட உள்ளது.

    ஈரோடு:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ந் தேதி (வியாழக்ழமை) முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு காமராஜர் அரசு மேல் நிலைப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அலுவலர்களுக்கு ஆலோ சனைகள் வழங்கினார்.

    முதல்-அமைச்சர் வரும் 15-ந் தேதி காலை உணவுத் திட்டத்தினைதொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாநக ராட்சிக்குட்பட்ட பகுதி களில் அமைந்துள்ள 26 தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 2649 மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

    மேலும் இத்திட்டத்தின் கீழ் அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படி ஈரோடு மாநகராட்சி காமராஜ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தில் காலை உணவு சமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் 100 மாணவ, மாணவிகளுக்குஒரு நபர் என்ற வீதத்தில் பணி யாளர்கள் நியமிக்கப்பட்டு உணவு பரிமாறப்பட உள்ளது.

    இத்திட்டம் வரும் 16-ந் தேதி முதல் ஈரோடு மாநகராட்சிக் குட்பட்ட 26 தொடக்கப்பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது என கலெக்டர் கூறினார். மேலும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அறி வுரை வழங்கினார்.

    ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்மு கஉதவியாளர் (சத்துணவு) மணிவண்ணன், ஈரோடு மா வட்ட கல்வி அலுவலர் ஜோதிசந்திரா உள்பட பலர் உடனிருந்தனர்.

    • மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப் படும் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இச்சிப் பாளையம் ஊராட்சி தாமரைப் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்து மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளத்துப்பாயைம்;, இச்சிப்பாயைம், வள்ளிபுரம், அஞ்சூர் மற்றும் கொந்தளம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் இன்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, கலெக்டர் கொளத்துப் பாயைம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4.03 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும், அதே ஊராட்சி பகுதியில் பாரத பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் கட்டப்பட்டு வரும் 3 வீடுகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.0.82 லட்சம் மதிப்பீட்டில் கொளத்துப் பாளைம் நூலகம் சீரமைப்பு பணியினை பார்வையிட்டு புத்தகம் வைத்திருக்கும் இடத்தினை தூய்மையாக வைத்திருக்கவும், போதுமான புத்தகங்கள் இருப்பது குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் அப்பகுதியில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப் படும் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து இச்சிப் பாளையம் ஊராட்சி தாமரைப் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்து மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    மேலும் சமூக மாற்றம் என்பது மாணவர்களாகிய உங்களிடம் இருந்து தொடங்க வேண்டும், மாணவர்களால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். சுகாதாரம் என்பது நம் வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும்.

    குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளார்களிடம் வழங்க முன்வரவேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து இச்சிப் பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கருத்திப்பாளையம் முதல் தாமரைப்பாளையம் வரை ரூ.36.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலையினை பார்வை–யிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் அஞ்சூர் ஊராட்சி, காரவலசு, அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.5.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையலறை கூடத்தினை ஆய்வு செய்து, காலியாக உள்ள இடத்தில் சிறு தோட்டம் அமைக்க ஆசிரியர்களுக்கு உத்தர–விட்டார்.

    மேலும் அதே பகுதியில் சொரியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தனது விளைநிலத்தில் இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி செய்து குர்குமின் வேதிப்பொருள் தன்மை மாறாமல் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்து வருவதை பார்வையிட்டார்.

    தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வரும் இச்சிப்பாளையம் நியாய விலைக்கடையினை ஆய்வு செய்து பதிவேடுகள், எடை இயந்திரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

    மேலும் அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருவது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 3 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 3 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும் என ரூ.89.67 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், பணிகளை உரிய காலத்தில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    முன்னதாக கொந்தளம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 0.82.0 எக்டர் பரப்பளவில் விவசாயி முருகேசன் அமைத்துள்ள நுண்ணீர் பாசன கருவிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விவசாயிடம் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முன் நீர்ப்பாசனம் மற்றும் சாகுபடி விவரங்கள், சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பின் நீர்ப்பாசனம் குறித்து கேட்டறிந்தார். இது 100 சதவீத மானியத்தில் அமைக்கப்பட்ட ரூ.1,21,091 மதிப்பீட்டில் அமைக்க–ப்பட்டது எனவும் வேலையாட்கள் மற்றும் நேரம் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து வள்ளிபுரம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 2021-22-ம் ஆண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் 0.25 எக்டர் பரப்பளவில் விவசாயி கவின்குமார் என்பவர் தனது நிலத்தில் நிரந்திர காய்கறிப் பந்தல் அமைக்க ப்பட்டுள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    0.25 எக்டர் பரப்பளவில் கல்தூண்கள் நட்டு கம்பிகள் இழுத்து கட்டி பந்தல் அமைக்க ரூ.1,91,300 செலவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.50,000 மானியம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் தனது வயலில் பீர்க்கன் சாகுபடி செய்துள்ளார். 0.25 எக்டர் சாகுபடி செய்ததற்கு சாகுபடி செலவு சுமார் ரூ.30,000 செலவாகும் என்றும் நிகர லாபமாக ரூ.60,000 கிடைக்கும் எனவும் கலெக்டரிடம் தெரிவித்தார்.

    மேலும் அங்கக வேளாண்மை முறையில் பீர்க்கன் சாகுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிதிட்டத்தின கீழ் 50 சதவீத மானியத்தின் கீழ் ரூ.2000 மானியத்தில் மருந்தடிக்கும் கருவியினை 1 விவசாயிக்கும், ரூ.722.50 மானியத்தில் தார்ப்பாயினை 1 விவசாயிக்கும் வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது கொடுமுடி வருவாய் வட்டாட்சியர் மாசிலாமணி, வேளாண் உதவி இயக்குநர் பி.யசோதா, உதவி இயக்குநர் (தோட்டக்க லைத்துறை) தியாகராஜன், கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, பத்மனாபன் (கி.ஊ), மண்டல துணை தாசில்தார் பரமசிவம், வட்ட வழங்கல் அலுவலர் கலைச்செல்வி உள்பட அலு வலர்கள் பலர் உடனிருந்தனர்.

    ×