search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspects development projects in person"

    • பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மரவள்ளிகிழங்கு பயிரிடுவதற்காக ரூ.40 ஆயிரம் மானியத்திலான உபகரணங்களை வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினையும் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதையும்,

    அஞ்சூர் ஊராட்சி, அஞ்சூரில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும்,

    கொந்தளம் ஊராட்சி தட்டம்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.46 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்று சுவர் அமைக்கப்ப–ட்டுள்ளதையும்,

    கொந்தளம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் நர்சரி மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் நர்சரிக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கம்பி வலை மற்றும் பசுமைவிரிப்பு அமைக்கப்பட்டுள்ளதையும்,

    கொந்தளம் ஊராட்சி கள்ளிபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.21 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும்,

    அதேபகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.18.15 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இருப்பு கிடங்கு கட்டப்பட்டு வருவதையும்,

    கொளத்துப்பாளையம் ஊராட்சி கொம்பனைப்புதூரில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும்,

    அதே பகுதியில் ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கான கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் மற்றும் கொளத்துப்பாளையம் சந்தை வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை மற்றும் பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து கொந்தளம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் 1 விவசாயிக்கு சுமார் 2 எக்டர் பரப்பளவில் பரப்பு விரிவாக்கும் மரவள்ளிகிழங்கு பயிரிடுவதற்காக ரூ.40 ஆயிரம் மானியத்திலான உபகரணங்களை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், கல்பனா, கொடுமுடி தாசில்தார் முத்துகிருஷ்ணன், சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×