என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "damage"
- வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
- அக்கம் - பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி ஊஞ்சபாளையம் பகுதியில் வசிப்பவர் சிவக்குமார்(வயது 42). இவர் அந்தப் பகுதியில் குடிசை வீட்டில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. லேசாக பற்றிய தீ குடிசை வீடு என்பதால் மளமளவென பற்றி எரியத் துவங்கியது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள், கட்டில் போன்றவை எரிந்து சாம்பலாகின. இதற்குள் அக்கம் - பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சிவக்குமாருக்கு பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.
- காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் வாைழ மரங்கள் சாய்ந்தன
- பாதிக்கப்பட்ட விவசாயிளுக்கு நிவாரணம் வழங்கிட கோரிக்கை
தொட்டியம்,
திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகுளம், சித்தூர், சீனிவாசநல்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுருந்தனர். இந்நிலையில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் காற்றில் வேருடன் சாய்ந்து வாழை மரங்கள் பாதியாக உடைந்ததால் விவசாயிகளுக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஏராளமான மயில்கள் வந்து கொத்தி தின்பதால் பயிர்கள் நாசமடைகின்றன
- மயில்கள் வராமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
கரூர்,
கரூர் நொய்யல், அத்திப்பாளையம், குப்பம், கோம்புப்பாளையம், ஓலப்பாளையம், நல்லிக்கோவில், ஒரம்புப்பாளையம் பேச்சிப்பாறை, நடையனூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, பழமாபுரம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இந்த பகுதிகளில் ஏராளமான மயில்கள் வருவதால் பயிர்களை மயில்கள் கொத்தி நாசப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே மயில்கள் இப்பகுதிக்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முத்தாள், சங்கர் ஆகியோரது கூரை வீடு மின் கசிவின் காரணத்தால் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.
- மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு அரசு வழங்கிய 5 ஆயிரம் பணம், மற்றும் நிவாரணம் வழங்கிஆறுதல் கூறினார்.
விழுப்புரம்:
மயிலம் அருகே கொடிமா கிராமத்தை சேர்ந்த முத்தாள், சங்கர் ஆகியோரது கூரை வீடு மின் கசிவின் காரணத்தால் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்த மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு அரசு வழங்கிய 5 ஆயிரம் பணம், மற்றும் அரிசி ,மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பு, பிளாஸ்டிக் குடம், பக்கெட் பாய், தலையணை, வேட்டி, சேலை பெட்ஷீட், காய்கறி கள், மற்றும் ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில் ரூ. 3 ஆயிரம் பணம் நிவாரணமாக வழங்கி ஆறுதல் கூறினார்.
நிகழ்ச்சியில் பா.ம.க. மயிலம் ஒன்றிய செயலாளர் சண்முகம் ஒன்றிய தலைவர் இளவழகி மற்றும் கட்சி நிர்வாகிகள் செங்கேணி, ஆட்டோ தேசிங்கு, ஜீவா, பாலு, தனசேகர் தன்ராஜ், ராஜா, முனுசாமி, ஜெய மூர்த்தி சரவணன், சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சீர்குலைந்தது. இதனை அடுத்து பாலம் சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகன போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
- பல இடங்களில் தடுப்பு களில் இரும்பு கம்பிகள் இல்லாமல் காட்சியளிக்கிறது.
மேட்டூர்:
மேட்டூர் காவிரி பாலம் மிகவும் பழமையான பாலம் ஆகும். இந்த பாலத்தின் வழியாக தான் ஆரம்ப காலத்தில் பஸ் போக்கு வரத்து மற்றும் கனரக போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த பாலம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சீர்குலைந்தது. இதனை அடுத்து பாலம் சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகன போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கனரக வாகனங்கள், பஸ் உள்ளிட்டவை மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள புது பாலம் வழியாக சென்று, வருகிறது.
இந்தப் பாலத்தின் இருபுறத்திலும் கம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு சுற்றுலா வருப வர்கள் மற்றும் அந்த வழி யாக செல்பவர்கள், இந்த பாலத்தின் மீது நின்று காவிரி ஆற்றின் அழகினை ரசித்து செல்வர். இந்த நிலையில், பாலத்தின் தடுப்புகளில் உள்ள இரும்பு கம்பிகள் தற்போது சேதம் அடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் தடுப்பு களில் இரும்பு கம்பிகள் இல்லாமல் காட்சியளிக்கிறது.
எனவே சிறுவர்கள், பாலத்தின் மீது நின்றி ருக்கும்போது தவறி ஆற்றில் விழ வாய்ப்புகள் உள்ளது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் இதில் தவறி விழ வாய்ப்புள்ளது.
நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இந்த பாலத்தை உடனடியாக சீரமைத்து பொதுமக்களின் பாது காப்பினை உறுதி செய்ய வேண்டும் என, அந்த பகு தியைச் சேர்ந்தபொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு போதை ஆசாமிகள் அட்டகாசம் உள்ளது.
- மர்ம நபர்கள் கல் மற்றும் காலி மது பாட்டில்களை கொண்டு எறிந்து உடைத்திருப்பது தெரிந்தது.
உடுமலை:
கோவை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் உடுமலை கிளை பசுபதி வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளவர்கள் நகை கடன் ,பயிர் கடன் பெறவும் பரிவர்த்தனை மேற்கொள்ளவும் ஏராளமான வாடிக்கையாளர் வந்து செல்கின்றனர்.
நேற்று முன் தினம் வங்கி அலுவலர்கள்வங்கியை பூட்டி சென்றனர். நேற்று காலை வங்கியைத் திறக்க வந்த போது வங்கி முன் உள்ள ஏடிஎம். மையத்தின் கண்ணாடி உடைந்து கிடந்தது. மர்ம நபர்கள் கல் மற்றும் காலி மது பாட்டில்களை கொண்டு எறிந்து உடைத்திருப்பது தெரிந்தது. இது குறித்து வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வங்கிக்கு எதிரில் வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பிரதான ரோடான பசுபதி வீதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு இரவிலும் மது விற்பனை முறைகேடாக நடந்து வருவதால் போதை ஆசாமிகளின் புகலிடமாக மாறி உள்ளது. பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு போதை ஆசாமிகள் அட்டகாசம் உள்ளது.
எனவே இந்த கடையை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது ஏடிஎம். மையத்தை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளதால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மது கடையை உடனடியாக மாற்று அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகரம்சீகூர்,
அகரம்சீகூர் அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வசிஷ்டபுரம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்திற்கும், அங்கனூர் கிராமத்திற்கும் இடையே ஓடும் சின்னாற்றில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் சில மாதங்களாக இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இரவு நேரங்களில் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்து விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை உடனடியாக இந்த பாலத்தின் சேதமடைந்த பகுதிகளை சரி செய்து தர இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இளங்கோவன். இவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென்று தீ பிடித்து எரிந்தது.
- இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர், சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த காட்டுவன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் இளங்கோவன். இவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர், சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீடு மற்றும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
தீவிபத்துக்கான காரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையே தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவியை சங்காரபுரம் தாசில்தார் சரவணன் வழங்கினார்.
- வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டைக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்தது.
- இதனை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூராட்சி 2-வது வார்டு குலசேகரன் கோட்டைக்கு திண்டுக்கல்- மதுரை நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி நகர்புற சாலையில் இருந்து 1½ கிலோமீட்டர் தூரம் ராமநாயக்கன்பட்டி, பொன்மலை பொன் பெருமாள் கோவில், பத்திரப்பதிவு அலுவலகம், பெருமாள் கண்மாய் வழியாக செல்ல வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து காணப்பட்டது. இந்த சாலை யை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படியும், அமைச்சர் மூர்த்தி ஆலோசனையின்படியும் தற்போது நபார்டு வங்கி 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க பூமி பூஜை விழா நடந்தது. இந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி பொறியாளர் கருப்பையா வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., தார் சாலை அமைக்கும் பணியை தொடக்கி வைத்தார். இதில் கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி மோகன், ஜெயகாந்தன், திருப்பணி குழு தலைவர் ஏடு.ராதா கிருஷ்ணன், முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா, பிரகாஷ், பிரபு, அரவிந்தன், முரளி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சில நாட்களுக்கு முன்பு கஞ்சங்கொள்ளையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றிருந்தார்.
- சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த அணைக்கரை விநாயகன் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 40). விவசாய கூலி தொழிலாளி.
இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் சில நாட்களுக்கு முன்பு கஞ்சங்கொள்ளையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், திடீரென இன்று காலை அவரது வீடு மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
இதனை கண்ட கிராமமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த நகை, பணம், முக்கிய ஆவணங்கள் மற்றும் தளவாட சாமான்கள் என சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குபதிவு செய்து கூரை வீட்டில் தீ வைத்தது யார்? எப்படி தீ பிடித்தது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்றஇரவு2 அரசு பஸ்கள் நின்று கொண்டி ருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பஸ்களின் கண்ணாடி மீது கல் வீசினார்.
- அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் 2 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று இரவு சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு ஒரு அரசு பஸ்சும், கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் செல்வதற்காக ஒரு பஸ்சும் நின்று கொண்டி ருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பஸ்களின் கண்ணாடி மீது கல் வீசினார். இதனால் 2 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்
. விசாரணையில் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பதும், மது போதையில் பஸ்சின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்ததும் தெரிய வந்தது. அவரை இன்ஸ்பெக்டர் சத்திய சீலன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அரசு பஸ்சின் கண்ணா டியை உடைத்ததால் அதில் வந்த பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் சைக்கிளில் இந்த வழியாக செல்கின்றனர்.
- சாலையில் முன்பகுதி சேதம் அடைந்து உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் ரெயில்வே கீழ் பாலத்தில் உள்ள சுரங்கப்பாதை சாலை பூக்கார தெருவுக்கு எளிதாக செல்லலாம். இதன் வழியாக சைக்கிள், மோட்டார் சைக்கிள், சிறிய ரக வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.
சாந்த பிள்ளை கேட்டில் இருந்து மேரிஸ் கார்னர் வழியாக பூக்கார தெருவுக்கு செல்லும்போது கிலோமீட்டர் சற்று அதிகரிக்கும். ஆனால் இந்த ரெயில்வே கீழ் பாலம் வழியாக செல்லும்போது கிலோமீட்டர் குறையும்.
இதனால் இந்த சாலை வழியாக தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் சைக்கிளில் இந்த வழியாக செல்கின்றனர்.ஆனால் சாந்தபிள்ளை கேட்டியிலிருந்து செல்லும் சாலையில் முன்பகுதி சேதம் அடைந்து உள்ளது. இதனால் இந்த வழியை கடக்க வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
சில நேரங்களில் தடுமாறி விபத்தை சந்திக்கின்றனர். பள்ளி மாணவர்களும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே ரயில்வே கீழ்பாலம் சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்