என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்
    X

    தீ விபத்துக்குள்ளான குடிசை வீட்டை படத்தில் காணலாம். 

    பல்லடம் அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
    • அக்கம் - பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி ஊஞ்சபாளையம் பகுதியில் வசிப்பவர் சிவக்குமார்(வயது 42). இவர் அந்தப் பகுதியில் குடிசை வீட்டில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. லேசாக பற்றிய தீ குடிசை வீடு என்பதால் மளமளவென பற்றி எரியத் துவங்கியது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள், கட்டில் போன்றவை எரிந்து சாம்பலாகின. இதற்குள் அக்கம் - பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சிவக்குமாருக்கு பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.

    Next Story
    ×