search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cottage house"

    • வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
    • அக்கம் - பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி ஊஞ்சபாளையம் பகுதியில் வசிப்பவர் சிவக்குமார்(வயது 42). இவர் அந்தப் பகுதியில் குடிசை வீட்டில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. லேசாக பற்றிய தீ குடிசை வீடு என்பதால் மளமளவென பற்றி எரியத் துவங்கியது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள், கட்டில் போன்றவை எரிந்து சாம்பலாகின. இதற்குள் அக்கம் - பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சிவக்குமாருக்கு பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.

    திருச்செங்கோடு அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பைக் ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது.
    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு சித்தாளம்பூர் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் அந்த பகுதியில் உள்ள குடிசை வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலையில் தூங்கிக்கொண்டிருக்கும் போது வீட்டை சுற்றி புகை மண்டலமாக காட்சி அளித்ததால் வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது அவர் வீட்டின் மேற்கூறை தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார் ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார் மற்றும் குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பைக் ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது. #tamilnews
    ×