search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "damage"

    • ஒரு அறையில் இருந்த பொருட்கள் மட்டும் தீப்பிடித்து எரிந்தது.
    • முகுந்தன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தலக்காணிக்குப்பம் கிராமம் உள்ளது. இந்த ஊராட்சிக்கு மகாலட்சுமி தேவேந்திரன் தலைவராக உள்ளார். இவர் அக்கிராமத்திலேயே உள்ள, அவருக்கு சொந்தமான தளம் ஒட்டிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்த பொருட்கள் மட்டும் தீப்பிடித்து எரிந்தது. இத்தகவல் அறிந்த வானூர் தீயணைப்பு அலுவலர் முகுந்தன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி தேவேந்திரன் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், லேப்டாப், எல்.இ.டி. டிவி, இன்வெர்ட்டர் மற்றும் மின் சாதன பொருட்கள் எரிந்து நாசமாயின. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அலவலர் தெரிவித்தார். இது தொடர்பாக பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் வாய்க்காலில் புகுந்து வயல்களில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
    • நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சி தென்கரை வழியாக தென்கரை பாசன வாய்க்கால் வடக்கு புத்தாறு ஆற்றில் இருந்து பிரிந்து செல்கிறது.இந்த வாய்க்காலின் மூலம் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.

    இந்த நிலையில் தென்கரை பாசன வாய்க்காலில் தலைப்பில் உள்ள மதகில் உள்ள கதவனை சேதமடைந்து உள்ளது.இதனால் விவசாயத்திற்கு தேவையான நேரத்தில் தண்ணீரை திறந்து தேவையற்ற நேரத்தில் அடைத்து வைக்க முடியாத நிலை உள்ளது.மேலும் மழை வெள்ள காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களிலும் தண்ணீர் வாய்க்காலில் புகுந்து வயல்களில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.

    இதனால் விவசாய நிலங்கள் பாதிப்பு க்குள்ளாகும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த வாய்க்கால் கதவணையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமையான இன்று மனுக்கள் அளிப்பதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி ஏராளமான மாற்றுத்திறனாளிகள் குவிந்து இருந்தனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக 3-வது தளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் பொருட்கள் பாதுகாப்பு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்தை பார்த்தவுடன் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு முழுவதும் துண்டிக்கப்பட்டு, அலுவலக தரைத்தளம் உள்ளிட்ட மூன்று தளங்களில் இருந்த அனைவரும் பாதுகாப்பு கருதி அலுவலகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

    விரைந்து வந்து நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

    தீ விபத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் அலுவலக சேமிப்பு கிடங்கு அறையில் வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த சுமார் 5000 செட்டாப் பாக்ஸ் கருவிகள் பெரும்பாலானவை எரிந்து நாசமானது.

    நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அலுவலகத்தை பூட்டிவிட்டு ஓடிய அதிகாரிகளும், மனு அளிக்கவந்த பொதுமக்களும் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. இது குறித்து ேபாலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • 2 கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது.
    • ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர மோட்டார் வாகனங்களை வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் ஒரு கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்வழங்க வேண்டும் டி .கே .ஜி. நீலமேகம் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

    இந்த கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக ஒரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனம் வேண்டும் என உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து இன்று தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, சரவணன் ஆகிய இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேஸ்வரி, தி.மு.க. பகுதி செயலாளர் சதாசிவம், மண்டல குழு தலைவர் கலையரசன், பகுதி துணை செயலாளர் வினோத், வட்டக் கழக நிர்வாகிகள் செழியன், கிள்ளிவளவன் , ராஜேஷ், மகாலிங்கம், அரசு, சிவக்குமார், பாலாஜி, வினோத், இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மணிமுத்தாறு மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்டங்கள் உள்ளது.
    • இங்கு 800-க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே மணிமுத்தாறு மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்டங்கள் உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

    மேலும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து செல்கின்றனர். சில நாட்களாக மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் அவ்வப்போது சூறாவளி காற்றும் வீசுகிறது.

    இந்நிலையில் பலத்த சூறாவளி காற்றால், மாஞ்சோலை ஊத்து தேயிலை தோட்ட பகுதியில் இருந்த செல்போன் கோபுரம் திடீரென முறிந்து அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மீது விழுந்தது. இதனால் செல்போன் டவர் சேதமடைந்து அப்பகுதியில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    இதனால் அங்குள்ள பள்ளி மாணவ-மாணவிகள், பெரியவர்கள் என அனைவரையும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

    உடனடியாக நடவடிக்கை எடுத்து டவரை சரி செய்ய வேண்டுமென தேயிலை தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர். இதேபோல் 2 நாட்க ளுக்கு முன்பு அங்கு சாலையின் குறுக்கே ராட்சத மரமும் முறிந்து விழுந்த நிலையில் அதை அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களே அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீர் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சியில் வக்கீல் அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    • கோட்டை போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் அன்புச்செல்வன் (47). பிரபல வழக்கறிஞரான இவர் திருச்சி பெரியகடை வீதியில் அலுவலகம் வைத்துள்ளார். அங்கு வந்த ஐந்து பேர் சிசிடிவி கேமரா மற்றும் பொருள்களை சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து வக்கீல் அன்புச்செல்வன் கொடுத்த புகாரின் பெயரில் கோட்டை போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்கம்பிகள் சீரமைக்கபடாமல் மிகவும் தாழ்வான நிலையில் செல்கின்றன.
    • போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடி,மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இந்த மழையில் திட்டச்சேரி, திருமருகல்,போலகம்,இடையாத்தங்குடி,ஏனங்குடி,கருப்பூர்,வடகரை,திருப்புகலூர், கணபதிபுரம்,நெய்குப்பை, மருங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்து மின்கம்பிகள் அருந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதமடைந்தது.

    இதனால் ஒன்றிய பகுதிகளில் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சேதம் அடைந்த மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    ஆனால் ஒன்றிய பகுதிகளில் பல இடங்களில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள் சீரமைக்க ப்படாமலும், மின்கம்பிகள் முழுவதுமாக சீரமைக்காமல் மிகவும் தாழ்வாகவும் உள்ளன.

    இதனால் காற்று சற்று வேகமாக வீசும்போது மின்கம்பிகள் அறுந்து கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நேரிடுகிறது.

    இதனால் மனிதர்கள் உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடி க்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்க ளை சீரமைப்பதுடன், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயரத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 4 வழிச்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை வாடிப்பட்டி 4 வழிச்சாலை நடுவில் சிமெண்டால் தடுப்பு அமைக்கப்பட்டு அரளிப்பூ செடிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் வளர்க்கப் பட்டு வருகிறது. அதனை தண்ணீர் விட்டு பராமரிக்கா ததால் காய்ந்து சருகாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் குலசேகரன்கோட்டை பிரிவு அருகே 4 வழிச்சாலை தடுப்பில் காய்ந்த அரளிப்பூ செடிகள் திடீரென தீப்பி டித்து எரியத்தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவியது. இதனால் 4 வழிச்சாலை முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதிய டைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதக் அப்துல்லா தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    • வாலிகண்டபுரத்தில் பா.ஜ.க. கொடிக்கம்ப கல்வெட்டு சேதமடைந்துள்ளது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா கொடி மற்றும் கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து மஙகமேடு அருகேயள்ள வாலிகண்டபுரத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பா.ஜனதா கட்சியின் 30 அடி உயர கொடிக்கம்பம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை மர்ம ஆசாமிகள் கழட்டி சென்றதுடன், டிஜிட்டல் பேனர் மற்றும் கல்வெட்டுகளையும் சேதப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ், மங்களமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா கொடி மற்றும் கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகுதியில் நேற்று திடீரென சூறாவளி காற்று வீசியது.
    • குடியிருப்பில் மின் இணைப்பில் இருந்த யு.பி.எஸ்., டிவி உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் பழுதாயின. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகுதியில் நேற்று திடீரென சூறாவளி காற்று வீசியது. பலத்த காற்றினால் அப்பகு தியில் உள்ள மரக்கிளையில் மின் கம்பி உரசியது. இத னால் அப்பகுதி குடியி ருப்பில் மின் இணைப்பில் இருந்த யு.பி.எஸ்., டிவி உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் பழுதாயின. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து, அங்கு வந்த மின்வாரிய ஊழி யர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் மின் கம்பியில் உரசிய மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். பேட்டை, நல்லியாம்பா ளையம் மற்றும் சக்ரா நகர் பகுதிகளில் மின் கம்பிகளில் மரக்கிளை உரசி வருவதால் அப்பகுதியில் உள்ள மரக்கி ளைகளை மின்வாரியத்தி னர் அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
    • அக்கம் - பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி ஊஞ்சபாளையம் பகுதியில் வசிப்பவர் சிவக்குமார்(வயது 42). இவர் அந்தப் பகுதியில் குடிசை வீட்டில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. லேசாக பற்றிய தீ குடிசை வீடு என்பதால் மளமளவென பற்றி எரியத் துவங்கியது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள், கட்டில் போன்றவை எரிந்து சாம்பலாகின. இதற்குள் அக்கம் - பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சிவக்குமாருக்கு பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.

    • திருமங்கலம் அருகே மரம் விழுந்து அரசு பள்ளிகட்டிடம் சேதமடைந்துள்ளது.
    • இன்று காலை இந்த கட்டிடத்தின் பின்புறமுள்ள பகுதியில் பள்ளி வழக்கம்போல் செயல்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது.

    ஒரு சில இடங்களில் மழைக்கு மரங்கள் கீழே விழுந்தன. திருமங்கலம் அருகே பெரிய ஆலங்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு இருந்த பழமையான மரம் நேற்று பெய்த மழைக்கு பெயர்ந்து பள்ளி கட்டிடத்தின் மீது விழுந்தது.

    இரவு நேரம் என்பதால் ஆசிரியர்கள், மாணவர்கள் இல்லை. இதனால் பெரிய அளவில் அசாம்பாவிதங்கள் எதும் ஏற்படவில்லை.

    இன்று காலை இந்த கட்டிடத்தின் பின்புறமுள்ள பகுதியில் பள்ளி வழக்கம்போல் செயல்பட்டது. கட்டிடத்தின் மீது விழுந்த மரத்தை ஊழியர்கள் அகற்றினர்.

    ×