search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பு"

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.
    • போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் துணை மேயர் சாரதா தேவி, கமிஷனர் (பொறுப்பு) அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் கவுன்சிலர் இமயவரம்பன் பேசுகையில் பட்டியலின மக்களுக்கு திருமணம் நடத்த சேலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேயர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    அந்த மண்டபத்தின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.

    அதற்கு பதிலளித்து மேயர் ராமச்சந்திரன் பேசுகையில் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கவுன்சிலர் திருஞானம் பேசுகையில் எனது வார்டில் மழை நீர் அதிக அளவில் தேங்குகிறது. மேலும் அம்மாபேட்டையில் இருந்து டவுன் வரை சாலையோர கடைகள் அதிக அளவில் உள்ளன. இதனால் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் மூர்த்தி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடிகள் வெகு தூரத்தில் உள்ளன. இதனால் அந்தந்த பகுதி மக்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் சையத் மூசா பேசுகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். இதற்கு சாக்கடை நீரும், மழை நீரும் அதிகளவில் தேங்குவது தான் காரணம். அதனை சீரமைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் பி.எல்.பழனிச்சாமி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட மணியனூர் பகுதியில் சுடுகாடு தண்ணீர் மற்றும் கழிவறை தண்ணீர் அதிக அளவில் தேங்குகிறது. இதனால் மக்கள் தவித்து வருகிறார்கள். நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் விபத்தும் அடிக்கடி நடக்கிறது, சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனையும் சீரமைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் ஏ.எஸ்.சரவணன் பேசுகையில் களரம்பட்டி 4-வது தெருவில் சாலை, சாக்கடை வசதி, பாலப்பணி செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 45-வது கோட்டத்தில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். 56-வது வார்டு கலைஞர் நகரில் 4-வது வார்டு மற்றும் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். 60 வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும். அப்போது தான் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக திகழும் என்றார்.

    கவுன்சிலர் கோபால் பேசுகையில் அம்பாள் ஏரி ரோடு கடந்த 1 1/2 ஆண்டாக மிக மோசமான நிலையில் உள்ளது. தாதகாப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் தண்ணீர் வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குடி தண்ணீர் வசதி வழிப்பாதைகள் அமைக்க வேண்டும் என்றார்.

    இதை தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தைகள் திருமணம் இல்லாத, மாவட்டமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து கல்விக்கு அடித்தளமிடப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை, தோழமை அமைப்பு மற்றும் யுனிசெப் அமைப்புகள் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில், சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதா பேசியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 111 குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டு, 90 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 வழக்குகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் திருமணம் இல்லாத, மாவட்டமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரியாஸ் அகமது பாட்ஷா பேசியதாவது:- புலம்பெயர் தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாவட்டத்தில் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து குழந்தைகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி அருகே கடைகளில் போதை பொருட்கள் விற்றால், அவற்றை உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து கல்விக்கு அடித்தளமிடப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    • டெங்கு காய்ச்சல் பாதிப்பு யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்தல் வேண்டும்.
    • தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புடன் ஒருவர் அனுமதியானால் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    திருப்பூர்,செப்.26-

    டெங்கு காய்ச்சல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விடும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகராட்சி, நகராட்சி அளவில், ஏற்கனவே வகைப்படுத்தப்பட்ட தொற்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஹாட்ஸ்பாட் ஆக கண்டறிந்து அப்பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து, காய்ச்சல் பாதித்தவர் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். செல்போன் குழுக்கள் மூலம் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புடன் ஒருவர் அனுமதியானால் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    தெரியப்படுத்தாத மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

    • சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சீர்குலைந்தது. இதனை அடுத்து பாலம் சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகன போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • பல இடங்களில் தடுப்பு களில் இரும்பு கம்பிகள் இல்லாமல் காட்சியளிக்கிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் காவிரி பாலம் மிகவும் பழமையான பாலம் ஆகும். இந்த பாலத்தின் வழியாக தான் ஆரம்ப காலத்தில் பஸ் போக்கு வரத்து மற்றும் கனரக போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த பாலம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சீர்குலைந்தது. இதனை அடுத்து பாலம் சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகன போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    கனரக வாகனங்கள், பஸ் உள்ளிட்டவை மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள புது பாலம் வழியாக சென்று, வருகிறது.

    இந்தப் பாலத்தின் இருபுறத்திலும் கம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு சுற்றுலா வருப வர்கள் மற்றும் அந்த வழி யாக செல்பவர்கள், இந்த பாலத்தின் மீது நின்று காவிரி ஆற்றின் அழகினை ரசித்து செல்வர். இந்த நிலையில், பாலத்தின் தடுப்புகளில் உள்ள இரும்பு கம்பிகள் தற்போது சேதம் அடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் தடுப்பு களில் இரும்பு கம்பிகள் இல்லாமல் காட்சியளிக்கிறது.

    எனவே சிறுவர்கள், பாலத்தின் மீது நின்றி ருக்கும்போது தவறி ஆற்றில் விழ வாய்ப்புகள் உள்ளது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் இதில் தவறி விழ வாய்ப்புள்ளது.

    நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இந்த பாலத்தை உடனடியாக சீரமைத்து பொதுமக்களின் பாது காப்பினை உறுதி செய்ய வேண்டும் என, அந்த பகு தியைச் சேர்ந்தபொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலாளர் தலைமை தாங்கினார்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது, இங்கு சமையல் கேஸ் சிலிண்டரில் நிரப்பப்பட்டு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்பட பல்வேறு ஆகிய மாவட்ட மக்களுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

    இங்கு கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலா ளர் சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ஓசூர் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலத்துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலை துணை மேலாளர் சரத் சந்திரா, சேலம் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர், அதனைத் தொடர்ந்து கேஸ் நிரப்பும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே அதிநவீன தண்ணீர் வெளியேறி அணைக்கும் பயிற்சியும் மற்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்ல பயிற்சி அளிக்கப்பட்டது,

    தொழிற்சாலை பாதுகாப்பு துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அலுவ லர்கள், தொழி லாளர்கள், ஊழியர்களுக்கு விபத்து ஏற்படும்போது விழிப்பு ணர்வுடன் துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்கப்பட வேண்டும் உயிர் காக்கும் கருவிகள் அணிந்து கொண்டு பணி புரிய வேண்டும் என்றார், முகாமில் கேஸ் ஏஜென்சி மேலாளர் முருகேசன்,கருப்பூர் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அன்பழகன், தீயணைப்பு வீரர்கள், பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் தொழிற்சாலை மேலாளர் சிவராம கிருஷ்ணன் பயிற்சி அளித்த போது எடுத்த படம் அருகில் இணை இயக்குனர் சபீனா, உள்ளார்.

    • போக்குவரத்து காவல்துறை சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்டன.
    • விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலை பொள்ளாச்சி சாலையில் கணபதிபாளையம் பிரிவு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு் உயிரிழப்புகள் நிகழ்ந்து வந்த வந்த அதனை தடுக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்டன. இதனால் அதி வேகமாக வரும் வாகனங்கள் இப்பகுதியில் வரும் போது வேகத்தை குறித்து சென்று வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். இந்நிலைநில் தற்போது திடிரென்று தடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. இதனால் அந்த மீண்டும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆகவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் சாலை தடுப்புகளை அமைத்து விபத்து பகுதி என அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • பாதாள சாக்கடை பணி இன்று தொடங்கியது
    • மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 95 சதவீதம் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இதையடுத்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட அதிகாரிகளை அழைத்து பணியை துரிதமாக முடிக்க அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் நாகர்கோவில் நகரின் பிரதான சாலையாக கருதப்படும் பீச்ரோட்டில் இருந்து செட்டிகுளம் வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடை பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும் அந்தப் பணியை இன்று தொடங்கி ஒரு மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் நடைபெறுவதை யடுத்து அந்த சாலையில் போக்குவரத்தை மாற்றிவிட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இன்று காலை 11 மணி முதல் அந்த சாலையில் பஸ் போக்கு வரத்து மாற்றி விடப்பட்டது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் பீச்ரோடு பகுதியில் இருந்து செட்டிகுளம் வரும் சாலையை தடுப்பு வைத்து அடைத்தனர்.

    தொடர்ந்து பஸ்கள் அனைத்தும் மாற்றி விடப்ப ட்டன. கன்னியாகுமரியில் இருந்து வந்த பஸ்கள் அனைத்தும் ராமன்புதூர் ஜங்ஷன் வழியாக செட்டி குளத்திற்கு வந்தது.

    இதே போல் செட்டி குளத்தில் இருந்து பீச்ரோடு செல்லும் பஸ்களும் மாற்று பாதையில் விடப்பட்டது. செட்டிகுளம் பகுதியில் சாலைகள் தடுப்பு வைத்து மூடப்பட்டது. இந்த வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் கம்பளம் ஜங்ஷன், ஈத்தாமொழி பிரிவு ரோடு, பீச்ரோடு ஜங்ஷன் வழியாக இயக்கப்பட்டது.

    பஸ் போக்குவரத்து மாற்றப்பட்டதையடுத்து ராமன்புதூர், செட்டிகுளம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீ சார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

    பஸ் போக்கு வரத்து மாற்றி விடப்பட்டாலும் இருசக்கர வாகனங்கள் மட்டும் அந்த சாலை வழி யாக வந்தது. பாதாள சாக்கடை பணி தொடங்கிய பிறகு முழுமையாக அந்த வழியாக வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்படும்.

    அந்த சாலையில் 5 மீட்டர் அளவிற்கு சாலை பணிக்காக தோண்டும்போது மணல்கள் சாலையின் இருபுறமும் குவித்து வைக்கப்படும். பொதுமக்கள் நலன் கருதி வாகனங்கள் அந்த வழியாக செல்லக்கூடாது என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சேலம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் நட்சத்திர ஓட்டல்களில் தீ தடுப்பு மற்றும் தீ விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • ஓட்டல்களில் உள்ள செக்யூரிட்டி, மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வேலு உத்தரவின் பேரில், நட்சத்திர ஓட்டல்களில் தீ தடுப்பு மற்றும் தீ விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி, சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் தீ விபத்து ஏற்படும் போது, அதை தடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து, ஓட்டல்களில் உள்ள செக்யூரிட்டி, மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

    • ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 55 வயதுடைய மங்களம் என்ற பெண் யானை உள்ளது.
    • ரூ. 8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், நீச்சல் குளம் அமைக்கப்பட்டு, பாதுகாப்பான இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 55 வயதுடைய மங்களம் என்ற பெண் யானைக்கு கோவில் வளாகத்திலேயே நன்கொடையாளர் ஏற்பாட்டில் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், நீச்சல் குளம் அமைக்கப்பட்டு கான்கீரிட் தளமும், நீச்சல் குளம் கட்டப்பட்டு பாதுகாப்பான இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நீச்சல் குளத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்யாணசுந்தரம் எம்.பி, அரசு கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் உமாதேவி, கோவில் செயல் அலுவலர்கள் ஆறுமுகம், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகள் உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
    • வாகனங்களை வேகமாக இயக்கி அடிக்கடி விபத்து ஏற்படுத்தி வந்தனர்.

    கோத்தகிரி

    நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையதில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு சென்று விட்டு மீண்டும் சமவெளிப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கோத்தகிரி மார்க்கமாகவே செல்கின்றனர்.

    இப்படி கோத்தகிரி பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சில நேரங்களில் மலைப்பாதைகளில் உள்ள வளைவுகளில் வாகனங்களை வேகமாக இயக்கி அடிக்கடி விபத்து ஏற்படுத்தி வந்தனர்.

    இதனை முழுமையாக தடுக்க வேண்டும் என்ற நோக்கில் நெடுஞ்சா–லைத்துறை சார்பில் கோத்த–கிரியில் இருந்து குஞ்சப்பனை வரையிலான மலைப்பா–தையின் வளைவுகளில் உள்ள சாலைகளை அகலப்படுத்தியும், வாகனங்கள் வேகமாக செல்லக்கூடிய பகுதிகளில் வேகத்தடை அமைக்கும் பணியும் கடந்த 3 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்தது.

    ஆனால் பெரும்பாலான பகுதிகளில் சாலை பணி மற்றும் வேகத்தடை அமைக்கும் பணி 90 சதவிகிதம் முடிந்த பின்னரும் மீதமுள்ள 10 சதவிகித பணிகளை முடிக்காமலேயே உள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மேல் தட்டப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடை பணி 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமலேயே உள்ளது.

    இதனால் சிறிய வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் நேற்று வரை கடைபிடிக்கப்பட்டது.
    • ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் நேற்று வரை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மண்டல தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் கன்னியாகுமரியில் ஊழல் தடுப்புவிழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியை கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரியில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரையில் சென்று நிறைவடைந்தது. அங்கு ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    இந்தநிகழ்ச்சிக்கு நெல்லை மண்டல உதவி பொதுமேலாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.இதில்வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றுலா காவலர்கள் திரளாக கலந்து கொண்டு ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேச்சு
    • பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் பழக்க த்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாவட்டம் முழுவதும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி கள் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து தற்போது கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனை ஓரளவு கட்டுக்குள் இருந்து வருகிறது. இருப்பினும் கொரியர் மூலமாகவும் ரெயில் மூலமாகவும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா பொருட்கள் குமரி மாவட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.

    இதை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்கும் வகையில் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிர சாத் நடவடிக்கை மேற்கொண்டார். கஞ்சா மற்றும் குட்கா புகையிலை குறித்து தகவல் தெரிவிக்க வசதியாக மாவட்ட போலீஸ் சார்பில் வாட்ஸ்அப் எண் உருவாக்கப்பட்டுள்ளது.

    7010363173 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடி நட வடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரித்து உள்ளார்.

    இது தொடர்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விழிப்பு ணர்வு பேனர்களும் வழங்க ப்பட்டு உள்ளது. நாகர்கோ வில் பொன்ஜெஸ்லி பொறி யியல் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு பேசிய தாவது:-

    போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாணவ மாணவிகளின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். சைபர் குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாலை விதிகளை மாணவ மாணவிகள் கடைபிடிக்க வேண்டும்.

    செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டக் கூடாது. ஒரு வழி பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஒரே மோட்டார் சைக்கிளில் 3 செல்லக் கூடாது. அதிவேக மாக சென்றால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். ஹெல்மெட் அணிவதன் மூலம் உயிரை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும்.போதை பொருட்கள்விற்பனை குறித்து தெரிந்தால் உடனடி யாக எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதை இல்லாத மாவட்ட மாக குமரி மாவட்டத்தை மாற்ற மாணவ-மாணவி களின் பங்கு முக்கியமானது ஆகும். அதற்கு நீங்கள் அனை வரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×