search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயில்கள் வருவதால் பயிர்கள் நாசம்
    X

    மயில்கள் வருவதால் பயிர்கள் நாசம்

    • ஏராளமான மயில்கள் வந்து கொத்தி தின்பதால் பயிர்கள் நாசமடைகின்றன
    • மயில்கள் வராமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

    கரூர்,

    கரூர் நொய்யல், அத்திப்பாளையம், குப்பம், கோம்புப்பாளையம், ஓலப்பாளையம், நல்லிக்கோவில், ஒரம்புப்பாளையம் பேச்சிப்பாறை, நடையனூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, பழமாபுரம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இந்த பகுதிகளில் ஏராளமான மயில்கள் வருவதால் பயிர்களை மயில்கள் கொத்தி நாசப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே மயில்கள் இப்பகுதிக்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×