search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய தார் சாலை அமைக்கும் பணி
    X

    ரூ.1 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. 

    புதிய தார் சாலை அமைக்கும் பணி

    • வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டைக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்தது.
    • இதனை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சி 2-வது வார்டு குலசேகரன் கோட்டைக்கு திண்டுக்கல்- மதுரை நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி நகர்புற சாலையில் இருந்து 1½ கிலோமீட்டர் தூரம் ராமநாயக்கன்பட்டி, பொன்மலை பொன் பெருமாள் கோவில், பத்திரப்பதிவு அலுவலகம், பெருமாள் கண்மாய் வழியாக செல்ல வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து காணப்பட்டது. இந்த சாலை யை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

    இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படியும், அமைச்சர் மூர்த்தி ஆலோசனையின்படியும் தற்போது நபார்டு வங்கி 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க பூமி பூஜை விழா நடந்தது. இந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உதவி பொறியாளர் கருப்பையா வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., தார் சாலை அமைக்கும் பணியை தொடக்கி வைத்தார். இதில் கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி மோகன், ஜெயகாந்தன், திருப்பணி குழு தலைவர் ஏடு.ராதா கிருஷ்ணன், முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா, பிரகாஷ், பிரபு, அரவிந்தன், முரளி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×