search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கனூர் சின்னாற்று பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதம்
    X

    அங்கனூர் சின்னாற்று பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதம்

    நான்கு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது

    அகரம்சீகூர்,

    அகரம்சீகூர் அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வசிஷ்டபுரம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்திற்கும், அங்கனூர் கிராமத்திற்கும் இடையே ஓடும் சின்னாற்றில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் சில மாதங்களாக இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இரவு நேரங்களில் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்து விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை உடனடியாக இந்த பாலத்தின் சேதமடைந்த பகுதிகளை சரி செய்து தர இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×