search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொட்டியம் பகுதியில் மழையால் வாழைகள் சேதம்
    X

    தொட்டியம் பகுதியில் மழையால் வாழைகள் சேதம்

    • காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் வாைழ மரங்கள் சாய்ந்தன
    • பாதிக்கப்பட்ட விவசாயிளுக்கு நிவாரணம் வழங்கிட கோரிக்கை

    தொட்டியம்,

    திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகுளம், சித்தூர், சீனிவாசநல்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுருந்தனர். இந்நிலையில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் காற்றில் வேருடன் சாய்ந்து வாழை மரங்கள் பாதியாக உடைந்ததால் விவசாயிகளுக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×