search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேதமடைந்த ரெயில்வே கீழ்பால சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    சேதமடைந்த ரெயில்வே கீழ்பால சாலை.

    சேதமடைந்த ரெயில்வே கீழ்பால சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

    • பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் சைக்கிளில் இந்த வழியாக செல்கின்றனர்.
    • சாலையில் முன்பகுதி சேதம் அடைந்து உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் ரெயில்வே கீழ் பாலத்தில் உள்ள சுரங்கப்பாதை சாலை பூக்கார தெருவுக்கு எளிதாக செல்லலாம். இதன் வழியாக சைக்கிள், மோட்டார் சைக்கிள், சிறிய ரக வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.

    சாந்த பிள்ளை கேட்டில் இருந்து மேரிஸ் கார்னர் வழியாக பூக்கார தெருவுக்கு செல்லும்போது கிலோமீட்டர் சற்று அதிகரிக்கும். ஆனால் இந்த ரெயில்வே கீழ் பாலம் வழியாக செல்லும்போது கிலோமீட்டர் குறையும்.

    இதனால் இந்த சாலை வழியாக தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் சைக்கிளில் இந்த வழியாக செல்கின்றனர்.ஆனால் சாந்தபிள்ளை கேட்டியிலிருந்து செல்லும் சாலையில் முன்பகுதி சேதம் அடைந்து உள்ளது. இதனால் இந்த வழியை கடக்க வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

    சில நேரங்களில் தடுமாறி விபத்தை சந்திக்கின்றனர். பள்ளி மாணவர்களும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே ரயில்வே கீழ்பாலம் சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×