search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corporation commissioner"

    • தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரோச் பார்க் அருகே தற்காலிகமாக ஒரு படகு குழாம் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தனர்.
    • ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி நல்ல பெருமாள் பூங்கா மற்றும் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிப்பறை அமைப்பது குறித்தும், பழைய மாநகராட்சி அருகில் இருந்து ெரயில்வே நிலையம் செல்வதற்கு மக்களின் பயன்பாட்டில் ஏற்கனவே இருந்த பாதையை செப்பனிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறந்து விடுவது குறித்தும் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரோச் பார்க் அருகே தற்காலிகமாக ஒரு படகு குழாம் மற்றும் ஏற்கனவே கயாக்கியில் உள்ள படகு குழாமில் மாலை நேரத்திலும் பயன்படுத்தும் வகையில் மின் கோபுரம் அமைக்கும் பணிகளையும், முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன.
    • நடப்பு நிதியாண்டில் சொத்து வரி ரூ. 83.34 கோடி நிலுவை உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், காலியிடங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியன மாநகராட்சிக்கு பல்வேறு இனங்களில் வரி செலுத்துகின்றன. இவை தவிர மாநகராட்சி கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் ஏலம், குத்தகை அடிப்படையில் உரிமம் பெற்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    நடப்பு நிதியாண்டில் சொத்து வரி ரூ. 83.34 கோடி நிலுவை உள்ளது. காலியிட வரியில் ரூ. 7.97 கோடி, தொழில் வரி ரூ.3.30 கோடி,குடிநீர் கட்டணம்ரூ. 18.81 கோடி, குத்தகை இனத்தில் ரூ. 15.05 கோடி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் ரூ. 13.61 கோடி மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ. 1.81 கோடி நிலுவை உள்ளது. மொத்தம் 143.89 கோடி ரூபாய் வரியினங்கள் நிலுவையில் உள்ளது. பல கோடி ரூபாய் வரிகள் செலுத்தப்படாமல் உள்ளன. நிர்வாகத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டப்பணிகள்,குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, அலுவலக பராமரிப்பு மற்றும் ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், ரோடுகள் பராமரிப்பு, கடன்களுக்கான வட்டி, தவணை செலுத்துதல் என மாநகராட்சி நிர்வாகம் கடுமையாகத் தள்ளாடிக் கொண்டுள்ளது.

    எனவே மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய வகையில் பொதுமக்கள் செலுத்தி சீரான நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கமிஷனர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். வரி செலுத்துவோர் வசதிக்காக மைய அலுவலகம், வரி வசூல் மையங்கள் ஆகியன ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தவிர அனைத்து நாட்களிலும் காலை 9:30 மணி முதல் மாலை5 மணி வரை செலுத்தலாம். மேலும் ஆன்லைன் வாயிலாகhttps://tnurbanepay.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை மாநகரத்தில் உள்ள மேம்பால தூண்களில் பசுமை செடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • செடிகளை பராமரிப்பதற்காக சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டு, மேல்நிலை தொட்டியில் இருந்து குழாய்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    நெல்லை:

    சென்னை மாநகரத்தில் உள்ள மேம்பால தூண்களில் பசுமை செடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது பெரிய அளவில் தடுக்கப்படுகிறது.

    அதேபோல் நெல்லை மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதியில் உள்ள தூண்களில் பசுமை செடிகள் அமைக்க மாநகராட்சி கமிஷன் சிவகிருஷ்ணமூர்த்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இதன் முதல் கட்டமாக தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பசுமை செடிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மேம்பால தூண்களில் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு அதில் பசுமை செடிகள் நடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செடிகளை பராமரிப்பதற்காக சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டு, மேல்நிலை தொட்டியில் இருந்து குழாய்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    விரைவில் அனைத்து தூண்களிலும் செடிகள் அமைக்கப்படும் என கமிஷனர் தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு வகையான மூலிகை செடிகளும் நட்டு பராமரிக்கப்படும் என்றும், வண்ணார்பேட்டை எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளதால் சுற்றுச்சூழலை பராமரிக்கும் வண்ணம் பசுமை செடிகள் நடப்பட்டுள்ளதாக கமிஷனர் தெரிவித்துள்ளார். மாநகராட்சி கமிஷனரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • நெல்லை மாநகர பகுதியில் தற்போது ஓரளவு குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது.
    • பாளை மண்டலத்தில் சட்ட விரோத குடிநீர் இணைப்புகள் பெரும் அளவில் கண்டுபிடிக்கப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி யில் உள்ள 4 மண்டலங்களிலும் சுமார் 5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

    குடிநீர் தட்டுப்பாடு

    இங்குள்ள மக்களுக்கு தினமும் சராசரியாக 75 முதல் 79 எம்.எல்.டி. குடி தண்ணீர் தேவைப்படுகிறது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு மாநகரப் பகுதியில் ஓடி தூத்துக்குடி மாவட்டத்தை அடைகிறது.

    இதன் காரணமாக மாநகரப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்கக் கூடாது. ஆனால் ஆற்றின் கரையை ஒட்டி அமைந்திருக்கும் கொக்கிரகுளம் பகுதியில் கூட வாரம் ஒரு முறை தான் தண்ணீர் கிடைக்கிறது என்ற நிலைதான் தற்போது நெல்லை மாநகராட்சியில் நிலவி வருகிறது.

    அரியநாயகிபுரம் திட்டம்

    மொத்த தேவையான 79 எம்.எல்.டி. தண்ணீருக்கு இதுவரை பழைய திட்டத்தின்படி 47 முதல் 48 எம்.எல்.டி. குடிநீர் மட்டுமே மாநகரப் பகுதி மக்களுக்கு கிடைத்து வந்தது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட அரியநாயகிபுரம் திட்டத்தின் மூலம் இந்த குடிநீர் தேவை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தற்போது 65 எம்.எல்.டி. தண்ணீர் கிடைப்பதால் மாநகர பகுதியில் ஓரளவு குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது. குறிப்பாக நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம் மண்ட லங்களில் சமீப காலமாக குடிநீர் தட்டுப்பாடு பெரு மளவுக்கு குறைந்துள்ளது.

    பாளை மண்டலம்

    ஆனால் பாளை மண்ட லத்தில் மட்டும் குறிப்பாக அந்த மண்டலத்துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளில் மட்டும் குடிநீர் தட்டுப்பாடு என்பது இன்னும் தீரவில்லை.

    இதற்காக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

    ஆனாலும் தொடர்ந்து அந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

    மின்மோட்டார்கள்

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:-

    பாளை மண்டலத் துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் குடிநீரை மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுக்கிறார்கள். இது தொடர்பாக பலமுறை மனு அளித்து இருக்கிறோம்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சட்ட விரோத குடிநீர் இணைப்புகள் பெரும் அளவில் பாளை மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. 2 நாட்களுக்கு முன்பு குடிநீர் உறிஞ்சிய 59 மின் மோட்டார்கள் அந்த மண்டலத்தில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    செயற்கை தட்டுப்பாடு

    இந்த பகுதியில் செயற்கையாக தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது. ஒரு சில குடிநீர் வால்வு ஆபரேட்டர்கள் அரசியல் பிரமுகர்களுக்கு சாதகமாக செயல்பட்டு அவர்களுக்கு தேவையான நபர்கள் உள்ள தெருக்களுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது.

    எனவே செயற்கை குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் கண்டுபிடித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்று ஆதங்கமாக கூறினர்.

    இது தொடர்பாக கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, பாளை பகுதியில் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதாக தகவல் கிடைத்ததால் அங்கு சிறப்பு குழு மூலமாக அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சுமார் 59 சட்ட விரோத மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இது போன்ற செயற்கை குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக முழுமையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கம்ப்யூட்டர் மூலம் தண்ணீர் சப்ளை மேற்கொள்ள திட்டம் செயல்படுத்த உள்ளோம். முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்கல் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வார்டுக்கும் எத்தனை மணிக்கு தண்ணீர் திறந்து விடப்படும், எத்தனை மணிக்கு தண்ணீர் நிறுத்தப்படும், எவ்வளவு தண்ணீர் ஒரு வார்டுக்கு தேவை என்று அனைத்து விபரங்களும் கம்யூட்டரில் ஏற்றப்பட்டு அதன் மூலம் எவ்வித தட்டுப்பாடும் இன்றி குடிநீர் சப்ளை செய்ய ஒரு திட்டத்தை பரிசீலனை செய்து வருகிறோம்.

    இது தவிர பாளை மண்டலம் விரிவாக்கப் பகுதிகளில் மாற்று ஏற்பாடாக முறப்பநாட்டில் இருந்து வரும் குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் சப்ளை செய்வதற்கு ஒரு திட்டம் பரிசீலனையில் உள்ளது.

    விரைவில் அந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் விரிவாக்கப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறைக்கப்படும். வால்வு ஆபரேட்டர்கள் குறித்து தொடர்ந்து புகார் வந்ததால் முருகேசன், மந்திரம் என்ற 2 பேரை வேறு இடத்துக்கு மாற்றம் செய்துள்ளோம். தொடர்ந்து வேறு எந்த பகுதியிலும் இது போல் புகார்கள் வந்தால் அங்கும் வால்வு ஆபரேட்டர்கள் மாற்றம் செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகர பகுதி சாலைகளில் மாடுகள் சுற்றிதிரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததது
    • மாடுகளை பிடித்து மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி அருகே உள்ள வாட்டர்டேங்க் பகுதிக்கு கொண்டு வந்து கட்டி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றிதிரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.

    அதிரடி உத்தரவு

    இதனால் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து அவற்றை ஏலம் விடுமாறு மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    நேற்று மேலப்பாளையம் மண்டலத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு அவை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வைத்து ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் வசூல் கிடைத்தது.

    2-வது நாள்

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக பாளை மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மண்டல உதவி கமிஷனர் ஜகாங்கீர் பாஷா மேற்பார்வையில் மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி அருகே உள்ள வாட்டர்டேங்க் பகுதிக்கு கொண்டு வந்து கட்டி வைத்தனர்.

    தொடர்ந்து அந்த மாடுகளை ஏலம் விடப்படுவதாக அறிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் அங்கு வந்து முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உதவி கமிஷனரிடம் மாட்டின் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாடுகள் தெருக்களில் தான் சுற்றிதிரிந்தது. சாலைகளில் நாங்கள் விடவில்லை. மேலும் நீங்கள் பிடித்து வந்திருப்பது அனைத்தும் பசுமாடுகள். எனவே அவைகளை ஏலம் விடாமல் அபராதத்தொகை மட்டும் விதித்து எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கூறினர்.

    ஆனாலும் ஏற்கனவே உத்தரவிட்டபடி ஏலம் தொடர்ந்து நடைபெற்றது. இதனையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

    • தேர்வு செய்யப்படும் இலச்சினை வடிவமைத்தவருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
    • திட்டத்துக்கான லச்சினை (லோகோ) வடிவமைக்கப்பட உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியை திறன்மிகு மாநகராட்சியாக மேம்படுத்தும் வகையில் 'திறன்மிகு திருப்பூர்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சியில் தொழில் வளர்ச்சி பெருக்கவும், பசுமை மாநகராட்சியாக வளப்படுத்தவும், தொழிலாளர் நலன் காக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும், மாநகரை அழகுபடுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்துக்கான லச்சினை (லோகோ) வடிவமைக்கப்பட உள்ளது. திறன்மிகு திருப்பூர் திட்டத்துக்கு இலச்சினை வடிவமைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இலச்சினையை வடிவமைத்து protiruppurcorp@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் இலச்சினை வடிவமைத்தவருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
    • வாக்காளர்கள் இணையதளத்தில் மற்றும் செயலி மூலமாக தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    இந்திய தேர்தல் ஆணையம் வருகிற 31-3-2023-க்குள் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் விவரங்களுடன் ஆதார் எண் விவரங்களை இணைக்க வழிவகை செய்துள்ளது. வாக்காளர்களின் விருப்பத்தின்படி ஆதார் எண் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலமாக ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரெ தொகுதிக்குள், ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியில் இடம்பெறாமல் தவிர்க்க முடியும். வாக்காளர்கள் இணையதளத்தில் NVSP மற்றும் voter portal மூலமாகவும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம். மாறாக வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆதார் எண் இணைப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கலாம்.

    இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் இணைப்பு தொடர்பாக படிவம் 6B என்ற விண்ணப்ப படிவத்தை அறிமுகம் செய்துள்ளது. சிறப்பு முகாமில் படிவம் 6B யை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை இணைத்து விண்ணப்பிக்கலாம். ஆதார் எண் இல்லாதவர்கள் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி, அஞ்சலக புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட அட்டை, கடவுசீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, சமூக நலத்துறையினரால் வழங்கப்பட்ட தனி அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ, இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை இணைக்கலாம். இந்த தகவலை தெற்கு தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரான மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். 

    சென்னை வடபழனி சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி கட்டிட தீவிபத்து தொடர்பான வழக்கில் மாநகராட்சி கமிஷனர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    வடபழனி சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மே 8-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மீனாட்சி, சந்தியா உள்ளிட்ட 4 பேர் உடல் கருகி பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

    அந்த கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், கட்டிடத்தை இடிக்க கோரியும், அந்த கட்டிடத்தை கட்டுவதற்கு அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி பொது நல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘விபத்து நடந்த கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு விட்டது. அந்த கட்டிடத்தில் பலர் குடியிருக்கின்றனர். கட்டிட உரிமையாளருடன், அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘அதிகாரிகள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? அந்த கட்டிடத்தை ஏன் இடிக்கவில்லை?’ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மாநகராட்சி ஆணையர் நேரில் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் மத்திய மண்டல துணை ஆணையர் சுபோத்குமார் நேரில் ஆஜரானார். இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. மாநகராட்சி ஆணையர் ஏன் ஆஜராகவில்லை? என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜகோபால், ‘மாநகராட்சி ஆணையர் வேறு ஒரு பணியில் உள்ளார். அதனால், அவரால் ஆஜராக முடியவில்லை’ என்றார். அதற்கு நீதிபதிகள், ஆணையர் நாளை (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தீ விபத்து நடந்த கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். ஜே.சி.பி. எந்திரம் மூலம் அடுக்கு மாடி கட்டிடத்தை இடித்தனர்.

    இதில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று இரவுக்குள் கட்டிடம் முழுவதும் இடிக்கப்படும் என்று தெரிகிறது.

    சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #MadrasHC
    மதுரை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் மரு.அனீஷ்சேகர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    மதுரை:

    மதுரை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் மரு.அனீஷ்சேகர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    வார்டு எண்.96 எஸ்.ஆர்.வி. நகர் குறுக்குத் தெரு, ஓம் சக்தி நகர் 4 வது மற்றும் 5 வது குறுக்குத் தெரு சூரவள்ளிமேடு ஆகிய பகுதிகளில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பது தொடர்பாகவும், வார்டு திருநகர் மண்டி தோப்பு முதல் மற்றும் குறுக்குத் தெரு, ஜோசப் நகர் 4-வது தெரு, நெல்லையப்பர் தெரு, அமலா கான்வென்ட் குறுக்குத் தெரு, காந்திஜி 5வது மற்றும் 6வது குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.42.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு செய்தார்.

    ஜோசப் நகர் 1 முதல் 4 வரை வரையுள்ள குறுக்குத் தெருக்கள், விளாச்சேரி சாலை மற்றும் குறுக்குத் தெருக்களில் ரூ.44.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைப்பது தொடர்பாகவும், திருநகர் 1வது நிறுத்தம் முதல் 3வது நிறுத்தம் வரை சாலையில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறங்களிலும் அகலப்படுத்தி தார் சாலை அமைப்பது தொடர் பாகவும், திருநகர் 3வது நிறுத்தம் முதல் 5 வது நிறுத்தம் வரை ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறங்களிலும் அகலப் படுத்தி தார் சாலை அமைப்பது தொடர்பாகவும், திருநகர் 5-வது நிறுத்தம் முதல் 7-வது நிறுத்தம் வரை ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறங்களிலும் அகலப் படுத்தி தார் சாலை அமைப்பது தொடர்பாகவும், மகாலட்சுமி காலனியில் ரூ.8.25 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பது தொடர்பாகவும், கோவலன் நகர் ரமண கார்டன் பகுதியில் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவினையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து மதுரை ஒர்க்ஷாப் சாலையில் உள்ள மாநகராட்சி பொது பண்டக சாலையில் ஆய்வு செய்து மாநகராட்சியில் வாங்கப்படும் பொருட்களின் இருப்பு பதிவேடு, பொருட்கள் உள்வரும் பதிவேடு, வெளி செல்லும் பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளையும், பண்டக சாலையில் உள்ள பொருட்களையும் ஆணையாளர் அனீஷ்சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் நகர்நல அலுவலர் சதீஷ்ராகவன், உதவி ஆணையாளர் பிரேம்குமார், செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×