search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர் அட்டை"

    • இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
    • 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர்.

    தாராபுரம் :

    வாக்காளர் பட்டியலை முறைப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் முதல் வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு தொடங்கியது.

    'Voter Help Line' செயலி, nvsp.in என்கிற தேர்தல் கமிஷன் இணையதளம் வாயிலாக ஆதார் எண் இணைக்க வழிவகை செய்யப்பட்டது. வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்றபோது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விவரங்களை பெற்றனர். ஆதார் இணைப்புக்கு இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர். இவர்களில் இதுவரை 55.84 சதவீதம் பேர் அதாவது 12 லட்சத்து 90 ஆயிரத்து 837 பேர் மட்டுமே ஆதார் எண் இணைத்துள்ளனர்.வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் 36.13 சதவீதத்துடன் திருப்பூர் வடக்கு தொகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர் 3.84 லட்சம் பேரில் 1.38 லட்சம் பேர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர். பல்லடம் தொகுதியில் 52.13 சதவீதம் பேர், திருப்பூர் தெற்கில் 53.80 சதவீதம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். ஆதார் இணைப்பு விகிதத்தில் மடத்துக்குளம், உடுமலை தொகுதிகள் முந்துகின்றன.

    2.29 லட்சம் வாக்காளரில் 1.58 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதனால் 69.04 சதவீதத்துடன் ஆதார் இணைப்பில் மடத்துக்குளம் முன்னிலை வகிக்கிறது. உடுமலையில் 63.21 சதவீதம், தாராபுரத்தில் 62.68,அவிநாசியில் 61.47, காங்கயத்தில் 60.76 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.போலிகளை களைந்து செம்மையான வாக்காளர் பட்டியல் உருவாக வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு மிகவும் அவசியமாகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் மொத்த வாக்காளரில் 44 சதவீதம் அதாவது 10.20 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண் இணைக்கவி ல்லை. தேர்தல் கமிஷன், ஆதார் இணைப்புக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி 100 சதவீத ஆதார் இணைப்பை எட்ட செய்யவேண்டும் என்பது பெரும்பாலான அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம் இப்பணியை கடந்த 2021ல் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நிறைவடைகிறது.

    இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் 2024, மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    • தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க உத்தரவிட்டுள்ளது .
    • பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க உத்தரவிட்டுள்ளது . இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் வாகனத்தில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சியினரின் இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் பெற்றுள்ளது.  

    • வீடு வீடாக சென்று ஆதார் கருடா செயலி மூலமாக இணைப்பையும் மேற்கொள்கின்றனர்.
    • வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்ணையும், மார்ச் 31-ந் தேதிக்குள் இணைத்துவிட வேண்டும்.

    திருப்பூர் :

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடுமுழுவதும் நடந்து வருகிறது. இதற்காக 6பி என்ற படிவத்தை அறிமுகம் செய்துள்ள தேர்தல் ஆணையம், வீடு வீடாக வாக்காளர் பதிவு அலுவலரை அனுப்பி விவரங்களை பெற்று வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் வீதம் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது இவர்களே வீடு வீடாக சென்று ஆதார் கருடா செயலி மூலமாக இணைப்பையும் மேற்கொள்கின்றனர்.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- பலரும் வங்கிக்கணக்கு, ஆதார் எண் இணைப்பது என தவறான புரிதலில் உள்ளனர்.சில வீடுகளில், எல்லாரும் வேலைக்கு போய்ட்டாங்க என்றும் கூறுகின்றனர்.எவ்வளவு பிரச்னை என்றாலும், வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்ணையும், மார்ச் 31-ந் தேதி 2023க்குள் இணைத்துவிட வேண்டும். பள்ளி வேலைநாட்களில் சுழற்சி முறையில் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆசிரியருக்கும் குறைந்தது 800 முதல் 1500 பேருக்கு மேல் இணைக்க வேண்டி வரும்.இந்நிலையில், பாடக்குறிப்பேட்டை தயார் செய்ய வேண்டும். காலாண்டு தேர்வுக்கான பாடம் நடத்த வேண்டும். ஓராசிரியர், இரண்டு ஆசிரியர் மட்டுமே இருக்கும் பள்ளிகளில் சுழற்சி முறையில் மாற்று ஆசிரியர் கற்பிக்கவும் வழியில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வாக்காளர்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைக்க நாளை அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்.
    • வாக்காளர்கள் படிவம் 6B-னை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 1-8-2022 முதல் இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கி செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. வாக்காளர்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    அப்போது வாக்காளர்கள் படிவம் 6B-னை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த வாய்ப்பை அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி 1.8.2022 தொடங்கி 31.3.2023 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆகஸ்டு 1-ந்தேதியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இந்த பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி, ஆதார் விவரங்களை வாக்காளர்கள் படிவம் 6பி என்ற படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் நேரடியாகவோ அல்லது என்.வி.எஸ்.பி, வி.எச்.ஏ என்ற ஆன்லைன் மூலமோ வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி 1.8.2022 தொடங்கி 31.3.2023 வரை (8 மாதம்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களே வீட்டுக்கு நேரடியாக வந்து, விண்ணப்ப படிவத்தை வழங்கி, வாக்காளர்களின் விவரங்களை பூர்த்தி செய்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் இந்த பணி ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும், தற்போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு அதிகம் பேர் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 கோடியே 66 லட்சத்து 48 ஆயிரத்து 608 பேர் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பதிவு செய்துள்ளனர்.

    இது 27.78 சதவீதம் ஆகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் 6.08 சதவீதம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக 21 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பம் அளித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது, 'இவர்களில் 90 சதவீதம் பேருக்கும் மேற்பட்டவர்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழியாக பதிவு செய்துள்ளனர். வருகிற நவம்பர் மாதம் 9-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெறும். அப்போது அதிகம் பேர், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு உள்ளது' என்றார்.

    • போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆதார் இணைப்பில் மந்தம் நிலவியது.
    • ஆர்.டி.ஓ., பண்டரிநாதன், ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில், 23.33 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி வாக்காளர் விவரத்துடன் ஆதார் இணைக்கும் பணி நடந்து வருகிறது.

    போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆதார் இணைப்பில் மந்தம் நிலவியது. அதன்பின் மாவட்ட அதிகாரிகளின் உத்தரவுப்படி, சட்டசபை தொகுதி வாரியாக, வாக்காளர் விழிப்புணர்வு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக, கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்தி, இளம் வாக்காளராகிய கல்லூரி மாணவ, மாணவிகள் ஆதார் இணைக்க வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. திருப்பூர் தெற்கு தொகுதி சார்பில், செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறப்பு முகாம் நடந்தது. ஒரு மணி நேரத்தில் 500க்கும் அதிகமான வாக்காளர்கள், தங்கள் ஆதார் விவரத்தை இணைத்துள்ளனர்.திருப்பூர் வடக்கு தாலுகாவில், பொதுமக்களுக்கு ஆதார் இணைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்டோ பிரசாரம் துவங்கியுள்ளது.

    ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ., பண்டரிநாதன், ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்தார்.தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், ஆதார் இணைப்பு என்பது, வாக்காளரின் விருப்பம் என்றாலும், ஆதார் இணைப்பின் மூலமாக செம்மையான பட்டியலை தயாரிக்க முடியும். எனவே தேர்தல் கமிஷன் அழைப்பை ஏற்று வாக்காளர் தங்களின் ஆதார் விவரத்தை இணைக்க முன்வர வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 2.60 லட்சம் வாக்காளர் ஆதார் இணைத்துள்ளனர். இது மொத்த வாக்காளரில் 10 சதவீதம். ஆதார் இணைக்க போதிய அவகாசம் இருந்தாலும் முன்கூட்டியே விவரத்தை இணைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    • 1-ந் தேதி முதல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • Voters Helpline App என்ற கைப்பேசி செயலி மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

    கோவில்பட்டி:

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நாளை ( சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவில் பட்டி தாசில்தார் சுசிலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் வாக்காளரை உறுதி செய்யவும், வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தவிர்க்கும் வகையில் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் பேரில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது.

    இப்பணியானது கடந்த 1-ந் தேதி முதல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடுகளுக்குச் சென்று ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் அனை வரும் பயன்பெறும் வகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி அலுவலர்க ளால் இப்பணி நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளிடம் உரிய ஆவ ணங்களை சமர்ப்பித்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

    மேலும் www.nvsp.in, Voters Portal என்ற இணையதளங்களின் மூலம் இணையவழியில் படிவம் 6பி உள்ளீடு செய்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். Voters Helpline App என்ற கைப்பேசி செயலி மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
    • ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகலையும் அளிக்க வேண்டியது இல்லை.

    சென்னை:

    நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரிசெய்யும் நோக்கில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

    நீதிமன்ற உத்தரவு இருப்பதால், ஆதார் எண்ணை கட்டாயம் தர வேண்டும் என்று அறிவுறுத்தாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில் ஆதார் அல்லது குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களையும் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் ஆவடி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வீடு வீடாக வரும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், '6பி' படிவத்தை அளித்து, அதில் விவரங்களை பதிவு செய்வதுடன், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல்களை கேட்பதாகவும், ஒரு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தனித்தனி செல்போன் எண்ணை கட்டாயம் தரவேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் புகார் எழுந்தது.

    இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

    நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி ஆதார் இணைப்பு பணிகள் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் இதுவரை 97 லட்சம் பேர் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க பதிவு செய்துள்ளனர். வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் பொதுமக்கள் "6பி" படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகலையும் அளிக்க வேண்டியது இல்லை.

    அதேபோல, தேசிய வாக்காளர் சேவை அமைப்பான 'என்.வி.எஸ்.பி. போர்ட்டல்' (https://www.nvsp.in ), வாக்காளர் சேவை எண் '1950' போன்றவற்றின் மூலமாகவும் வாக்காளர்கள் இந்த இணைப்பை மேற்கொள்ளலாம்.

    '6பி' படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களின்படி செல்போன் எண்ணை அளிக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் ஒரே ஒரு செல்போன் மட்டுமே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த எண்ணை மட்டுமே கொடுத்தால் போதும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வழங்கப்படும் 6 முதல் 8 வரையிலான படிவங்களுக்கு வழக்கமாக ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதை பயன்படுத்தி, விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.

    ஆனால், ஆதார் இணைப்புக்கான '6பி' படிவத்துக்கு ஒப்புகைச் சீட்டு தரப்படுவது இல்லை. ஒப்புகைச்சீட்டு தராவிட்டால், ஆதார் இணைப்பு குறித்த நிலையை எப்படி அறியமுடியும் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்ற படிவம்போல, ஆதார் இணைப்புக்கும் ஒப்புகைச் சீட்டு தரவேண்டும் என்று கோரியுள்ளனர்.

    • வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்தது.
    • கலெக்டர் அனீஷ்சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1-ம் தேதி முதல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வாக்காளர்களுக்கு உதவி யாக மாவட்டம் முழுவதும் இன்று 2,718 மையங்களில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொண்டனர். அங்கு அவர்களுக்கு www.nvsp.in மற்றும் www.voterportal.eci.gov.in இணையதளம் வாயிலாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது.

    இதுதவிர வாக்குச்சாவடி பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கும் சென்று படிவம் 6பி மற்றும் கருடா கைப்பேசி செயலி மூலம் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மதுரை வாக்கு பதிவு மையங்களில் ஆதார் கார்டு எண் இணைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • சிறப்பு முகாம்களில் படிவம் 6 பி பூர்த்தி செய்து ஆதார் எண் இணைக்க விண்ணப்பிக்கலாம்.
    • வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கருடா செயலி மூலமாக ஆதார் இணைக்க தகுந்த ஒத்துழைப்பு வழங்கலாம்.

    திருப்பூர் :

    இந்திய தேர்தல் ஆணையமானது 1950 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தம் செய்யப்பட்டு 17-6-2022 அரசிதழ் பிரசுரிப்பின்படி எதிர்வரும் 31-3-2023-க்குள் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண் விவரங்களை இணைக்க வழிவகை செய்துள்ளது. வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் விவரங்களை பெறுதல் என்பது முழுவதும் வாக்காளர்களின் தன் விருப்பத்தின் அடிப்படையிலானது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 1-8-2022 முதல் 31-3-2023-க்குள் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்தல் என்பது வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் செம்மைபடுத்துவதற்கும், வாக்காளர்களின் தனித்தகவல்களை உறுதிபடுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதிக்குள், ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியில் இடம்பெறாமல் இருப்பதற்காவும் ஆகும். வாக்காளர்கள் இணையதளத்தில் என்.வி.எஸ்.பி. போர்டல் மற்றும் வோடர் போர்டல் மூலமாகவும், வோடர் ஹெல்ப் லைன் ஆப் செயலி மூலமாகவும் தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம். மாறாக வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆதார் எண் இணைப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கலாம். இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் இணைப்பு தொடர்பாக படிவம் 6பி என்ற விண்ணப்பத்தினை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

    சிறப்பு முகாம்களில் படிவம் 6 பி பூர்த்தி செய்து ஆதார் எண் இணைக்க விண்ணப்பிக்கலாம். தங்களது பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கருடா செயலி மூலமாக ஆதார் இணைக்க தகுந்த ஒத்துழைப்பு வழங்கலாம். ஆதார் எண்ணுக்கு பதிலாக, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி அஞ்சலக புகைப்படத்துடன் கூடிய புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட அட்டை, கடவு சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, சமூக நலத்துறையினரால் வழங்கப்பட தனி அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றியை சமர்ப்பிக்கலாம்.

    எனவே வருகிற 31-3-2023க்குள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தங்களது, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ இணைக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி, தெற்கு சட்டமன்ற தொகுதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரியில் சிறப்பு முகாம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்தது. கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தல் தாசில்தார் கலைவாணி மற்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
    • வாக்காளர்கள் இணையதளத்தில் மற்றும் செயலி மூலமாக தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    இந்திய தேர்தல் ஆணையம் வருகிற 31-3-2023-க்குள் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் விவரங்களுடன் ஆதார் எண் விவரங்களை இணைக்க வழிவகை செய்துள்ளது. வாக்காளர்களின் விருப்பத்தின்படி ஆதார் எண் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலமாக ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரெ தொகுதிக்குள், ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியில் இடம்பெறாமல் தவிர்க்க முடியும். வாக்காளர்கள் இணையதளத்தில் NVSP மற்றும் voter portal மூலமாகவும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம். மாறாக வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆதார் எண் இணைப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கலாம்.

    இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் இணைப்பு தொடர்பாக படிவம் 6B என்ற விண்ணப்ப படிவத்தை அறிமுகம் செய்துள்ளது. சிறப்பு முகாமில் படிவம் 6B யை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை இணைத்து விண்ணப்பிக்கலாம். ஆதார் எண் இல்லாதவர்கள் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி, அஞ்சலக புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட அட்டை, கடவுசீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, சமூக நலத்துறையினரால் வழங்கப்பட்ட தனி அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ, இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை இணைக்கலாம். இந்த தகவலை தெற்கு தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரான மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். 

    ×