என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cm narayanasamy"
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதுவரை 29 பேர் இறந்துள்ளனர். 22-க்கும் மேற்பட்ட அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் டெலிபோனில் பேசினேன். அப்போது கேரள மாநிலத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினேன். இதற்காக புதுவை மாநில அரசின் நிதியிலிருந்து ரூ. 1 கோடி வழங்க உள்ளோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க துணிகள், அரிசி, மருந்து மற்றும் நிவாரண பொருட்கள் ஆகியவற்றை தாராளமாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இதனை கேரள மாநில மக்களுக்கு அனுப்பி வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #KeralaRain #PondicherryCM #Narayanasamy
கவர்னர் கிரண்பேடி அடிக்கடி அதிகாரிகளை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பிக்கிறார்.
உத்தரவுகளை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சமீபத்தில் கூறி இருந்தார்.
இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்து நேற்று பேட்டி அளித்தார். கவர்னருக்கு அதிகாரிகளை கூட்டி ஆலோசனை நடத்த அதிகாரம் இல்லை. அவர் அதிகாரிகளை மிரட்டுகிறார். இந்த போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்.
இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளம் மூலமாக கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கவர்னர் அலுவலக பணிகள், கடமைகள், பொறுப்புகள் தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து எதிரான கருத்துக்களை கூறுகிறார்.
கவர்னர் அலுவலகத்துக்கு என்னென்ன பொறுப்புகள் உள்ளது என்பது சட்டத்திலும், விதிகளிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் படித்து பார்க்கலாம்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பது டெல்லி மாநிலத்துக்காக சொல்லப்பட்டது. அந்த தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது.
எல்லா நிலைகளிலும் புதுவையை நம்பர்-1 யூனியன் பிரதேசமாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் எனது திட்டம். கவர்னர் மாளிகையை பொறுத்த வரை சட்டத்தின்படியும், விதிகள்படியும் எங்கள் பணிகளை மக்களுக்காக அதிகபட்ச அளவுக்கு செய்வோம்.
இந்த பணி எப்போதும் தொடரும். மக்கள் மாளிகையாக கவர்னர் மாளிகை இருக்கும். அதிகாரிகளும் கவர்னரின் பணிகளை உணர்ந்து இருக்கிறார்கள்.
முதல்-அமைச்சரின் தகவல்கள் அதிகாரிகளை குழப்பத்தில் தள்ளுகிறது. இது, மாநில வளர்ச்சிக்கு சாதகமாக இருக்காது.
கவர்னரின் உத்தரவு என்பது தனிப்பட்ட கிரண்பேடியின் உத்தரவு அல்ல. அது, கவர்னர் மாளிகையின் உத்தரவு. அரசியல் சாசன சட்டத்தின்படி செயல்பாடுகள் தொடரும்.
அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சிகளை ஏற்படுத்துவோம். பழைய குறைபாடுகளை களைந்து முன்னேற்றுவதே நோக்கமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். #PuducherryGovernor #Kiranbedi #Narayanasamy
புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான அதிகாரப்போட்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசின் செயல்பாடுகளை ஆளுநரின் தலையீடு இருக்கக்கூடாது என முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு முன்னேற்றம் ஏற்படவேண்டும் என விரும்பினால் முதலமைச்சர் என்னைப்பற்றி விமர்சிக்கக் கூடாது. ஆளுநர் மாளிகை மற்றும் ஆளுநரின் அதிகாரங்களை குறைத்து மதிப்பீடு செய்வதன் மூலம் மாநில வளர்ச்சியின் வேகம்தான் குறையும்.
புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #PudhucherryGrowth #KirenBedi #CMNarayanasamy
புதுவையில் மாநில அரசின் சிபாரிசு இல்லாமலேயே மத்திய அரசு பாரதிய ஜனதா நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.
அவர்களை அங்கீகரிக்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால் அவர்களை சட்டசபைக்குள் அனுமதிக்கவில்லை.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் 3 எம்.எல்.ஏ.க்களின் நியமனமும் செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதன்பிறகும் அவர்களை சபாநாயகர் அனுமதிக்க மறுத்துவிட்டார்.
சுப்ரீம் கோர்ட்டில் இதன் அப்பீல் வழக்கு நடந்து வருகிறது. அதில் நீதிபதிகள் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை எதுவும் விதிக்கப்படாததால் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்கலாம். அதற்கு சபாநாயகர் அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இந்த நிலையில் புதுவை சட்டசபை கூட்டம் கடந்த 19-ந்தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் பட்ஜெட்டுக்கு அனுமதி தராததால் பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படவில்லை.
அதன்பிறகு கவர்னர் பட்ஜெட்டுக்கு அனுமதி அளித்தார். அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து இருந்தார்.
அதன்படி இன்று சட்டசபை கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் பங்கேற்க செய்வது என்றும் முடிவெடுத்தனர்.
இதற்காக சட்டசபை செயலாளர் மூலம் 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
சட்டசபையில் பட்ஜெட் மசோதாவை நிறைவேற்ற ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. குரல் ஓட்டெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் சபை காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டது.
3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் அனுமதி அளித்ததன் மூலம் புதுவையில் ஒரு ஆண்டாக நீடித்து வந்த அரசியல் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. #NominatedMLAs #PondicherryAssembly
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-
நடந்த முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தவிர அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கும்படி வலியுறுத்தினோம்.
அதுபோல் துணை ஜனாதிபதி உள்பட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து இது தொடர்பாக பேசினோம். அவர்கள் அனைவரும் புதுவைக்கு மாநில அஸ்தஸ்து பெற்று தருவதாக உறுதி அளித்தனர்.
டெல்லி பயணம் வெற்றி என கூற முடியாவிட்டாலும் திருப்திகரமாக அமைந்தது. மாநில அந்தஸ்தை பெற்றால் மட்டுமே வெற்றி என்று கூற முடியும்.
புதுச்சேரியில் 4 பிராந்தியங்களான புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகியவற்றை ஒருங் கிணைத்துதான் மாநில அந்தஸ்து கேட்டுள்ளோம். இதில், எந்தவொரு பிராந்தியத்தையும் மற்றொரு மாநிலத்துடன் சேர்த்து மாநில அந்தஸ்து அளித்தால் அதனை ஏற்க மாட்டோம்.
புதுவைக்கு மத்திய அரசு போதிய நிதி அளிக்காததாலும் மத்திய நிதி கமிஷனில் புதுவை சேர்க்கப்படாததாலும் புதுவை மாநில நிதி ஆதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் மாநில அந்தஸ்து பற்றி கவர்னர் கிரண்பேடி கூறிய கருத்து குறித்து நாராயணசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
அவரவர்கள் தங்களது அதிகாரத்துக்குட்பட்டு செயல்பட வேண்டும். கவர்னர் கிரண்பேடி என்ன அரசியல்வாதியா? மாநில மக்களின் விருப்பத்தை டெல்லியில் கூறி உள்ளோம்.
மாநில அந்தஸ்து தேவையில்லை என கூறுவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அவர் அரசியல்வாதி என்றால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-
ஜெயமூர்த்தி:- அரசு பொதுமருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி எவ்வளவு மதிப்பீட்டில் எப்போது வாங்கப்பட்டது?
தற்போது எவ்வளவு காலமாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செயல்படவில்லை? இதை செயல்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? சுகாதாரத்துறையில் முதுநிலை மருத்துவர் முதல் கடைநிலை ஊழியர் வரை எந்தெந்த பதவி எவ்வளவு காலியாக உள்ளது? இதை நிரப்ப அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
முதல்- அமைச்சர் நாராயணசாமி: அரசு மருத்துவமனைக்கு 2001-ம் ஆண்டு ரூ.5 கோடியே 37 லட்சம் செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் வாங்கப்பட்டது. இதை பராமரிக்க தனியார் நிறுவனத்தோடு 2007-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு டிசம்பர் முதல் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயங்கவில்லை.
ஸ்கேன் வழங்கிய நிறுவனத்தை பழுதுநீக்கவும், செயல்படுத்தவும் அழைத்தோம். அவர்கள் பழுதிற்கு அப்பாற்பட்டது என சான்றளித்து விட்டனர். சுகாதாரத்துறையில் குரூப் ஏ 108, பி மற்றும் சி 216, டி பிரிவில் 318 பதவிகள் என மொத்தம் 642 பதவிகள் காலியாக உள்ளது.
மத்திய தேர்வாணையம் மூலமாக காலி மருத்துவ பணிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப் பினும் அனைத்து காலி பணியிடங்களும் ஒப்பந்த அடிப்படையில் சிறப்பு மருத்துவ அதிகாரிகளால் நிரப்பப்பட்டு வருகிறது.
குரூப் பி, சி, டி காலி பணியிடங்களை நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஸ்கேன் எந்திரம் பழுதடைந்துள்ளதால் ஒப்பந்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து வருகின்றனர்.
ஆண்டுக்கு ரூ.25 லட்சம் இதற்காக செலவாகிறது. தனியார் பங்களிப்புடன் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் நிறுவி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களில் சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசமாக டெல்லியும், புதுவையும் திகழ்கிறது.
தலைநகராக உள்ள டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் இருந்தாலும் அதிகாரம் குறைவு. நிலம், சட்ட ஒழுங்கு, பாதுகாப்பு ஆகியவை மத்திய அரசின் வசம் உள்ளது. ஆனால் புதுவை சட்டமன்றத்திற்கு டெல்லியை விட கூடுதல் அதிகாரம் உள்ளது.
இந்த நிலையில் புதுவை கவர்னராக கிரண்பேடி நியமிக்கப்பட்ட பிறகு அவர் தனக்கே அதிகாரம் இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார்.
அதோடு அரசின் அன்றாட பணிகளிலும் அவர் தலையிட்டு வருகிறார். கவர்னருக்கு அனுப்பும் கோப்புகளுக்கு உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை. அதேநேரத்தில் மக்களால் தேர்வு செய்த அரசு இருக்கும் போது கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என ஆளும் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம்ஆத்மி கட்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கோர்ட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என தீர்ப்பளித்தது.
இதையடுத்து யூனியன் பிரதேசமான புதுவைக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் என ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால், கவர்னர் கிரண்பேடி டெல்லி யூனியன் பிரதேச சட்ட விதிகள் வேறு, புதுவை சட்ட விதிகள் வேறு. கோர்ட்டின் தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என கூறி வருகிறார்.
அதோடு தொடர்ந்து அரசின் நிர்வாக பணிகளில் தலையிட்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருகிறது.
இதுதொடர்பாக சட்டசபையில் விவாதம் நடந்தது. அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், தி.மு.க. உறுப்பினர் சிவா ஆகியோர், இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
கூட்டத்தொடரை பாதியில் நிறுத்திவிட்டு டெல்லிக்கு அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களை அழைத்து செல்லுங்கள். அங்கு பிரதமர், உள்துறை மந்திரி, அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்து முறையிடுவோம்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து கோருவோம். அப்போதுதான் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க முடியும் என சட்டசபையில் வலியுறுத்தினர். இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி சம்மதம் தெரிவித்தார்.
டெல்லியில் தலைவர்களை சந்திக்கும் தேதி வருகிற 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை இருக்கும். இதில் தாங்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என கையெழுத்திட்டு அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் நாராயணசாமி கொடுத்துள்ளார்.
சட்ட சபைக்கு வந்த முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறும்போது, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நான் டெல்லிக்கு செல்கிறேன்.
வருகிற திங்கட்கிழமை (23-ந்தேதி) பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். உறுப்பினர்கள் அனைவரும் வரும்படி அழைப்பு விடுத்துள்ளேன். அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களோடு பிரதமரை சந்திக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #Narayanasamy
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
ஜெயமூர்த்தி: கடந்த காலங்களில் வலை, பைபர் கட்டுமரம் வாங்க தரப்பட்ட மானியம் இப்போது அரசால் நடைமுறைபடுத்தப்படவில்லை. இதை வழங்க அரசு முன்வருமா?
முதல்-அமைச்சர் நாராயணசாமி: மத்திய அரசு நீல புரட்சி என்ற திட்டத்தை கொண்டுவர உள்ளனர். இதன்கீழ் புதுவையில் மீனவர்களுக்கு காப்பீடு, படகு, மீன்பிடி துறைமுகம் உள்ளிட்டவற்றை வழங்க ரூ.174 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பியுள்ளோம். மத்திய அரசு இதற்கு ஒப்புதல் தருவதாகவும் கூறியுள்ளது. இந்த நிதி வந்தவுடன் பைபர் படகு வாங்க நிதிஅளிப்போம்.
அன்பழகன்: பட்ஜெட்டில் மீனவர்களுக்கு ரூ.38 கோடி தான் நிதி ஒதுக்குகிறீர்கள். துறையின் ஊழியர்களுக்கு சம்பளம், தடை கால நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு ரூ.25 கோடி செலவாகிவிடும். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. இதனால் இலவச திட்டங்களை நிறுத்திவிட்டு வாழ்வாதார திட்டங்களை செயல்படுத்துங்கள். படகு, வலை வாங்க கடன், மானிய திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்.
நாராயணசாமி: மீனவர்களுக்கு தனி கவனம் செலுத்தவுள்ளோம். மத்திய அரசின் நிதி கிடைத்தவுடன் அவர்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
அன்பழகன்:- புதுவையில் ஜி.எஸ்.டி. வரி எப்போது கொண்டுவரப்பட்டது? வரி விதிப்பிற்கு முன், வரி விதிப்பிற்கு பின் நமக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு? ஜி.எஸ்.டி. வரியை முறையாக செயல்படுத்த விற்பனை வரித்துறையில் போதிய பணியாளர்கள் உள்ளனரா?
முதல்-அமைச்சர் நாராயணசாமி: 1.7.2017 முதல் புதுவை மாநிலத்தில் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது.
2017-18-ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்னர் உள்ள மாதங்களில் வாட் மற்றும் ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டிய 4 மாத வரி ரூ.609 கோடியே 36 லட்சம்.
ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பின்னர் 1718-ம் நிதியாண்டில் ஆகஸ்டு முதல் மார்ச் வரை வாட், சிஎஸ்டி, ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டிய வருவாய் ரூ.1252 கோடியே 23 லட்சம். ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பின்னர் ஏற்கனவே உள்ள 49 பணியிடங்களுடன் கூடுதலாக 13 பணியிடங்களை உருவாக்கி உள்ளோம்.
புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களையும் சேர்த்து காலியாக உள்ள 24 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அன்பழகன்:- ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியதால் வருவாய் அதிகரித்துள்ளதா? இல்லையா? மத்திய அரசு வரி இழப்பு ஏற்பட்டால் தருவதாக கூறினார்களே?
நாராயணசாமி:- ஜி.எஸ்.டி. அமலுக்கு முன்பு ரூ.1565 கோடி வரி வருவாய் இருந்தது. ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பிறகு ரூ.1861 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஜி.எஸ்.டி.யால் வரி வருவாய் உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. அமல்படுத்திய இடைப்பட்ட 3 மாத காலத்தில் ஏற்பட்ட வரி இழப்பு ரூ.333 கோடி. இதை மத்திய அரசு தருவதாக உறுதியளித்துள்ளது.
அன்பழகன்:- வணிக வரித்துறையில் 30 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் முறையாக வரியை வசூலிக்க முடியவில்லை. நகை கடையில் மதிப்பீட்டு ரசீது மட்டுமே தருகின்றனர். இதை கண்காணிக்க போதிய ஆட்கள் இல்லை. இதனால்தான் வரி குறைகிறது. ரெடிமேடு துணி கடைகளில் 50 சதவீத வரியை பில்லில் காட்டுவதே கிடையாது.
நாராயணசாமி:- வரி ஏய்ப்பு தொடர்பாக புகார்கள் வந்தது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களுக்கு சென்று வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. துணை வணிக வரி அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுத்தோம்.
இதுதொடர்பாக ஒருவர் கோர்ட்டிற்கு சென்றுள்ளார். இதனால் உடனடியாக நியமிக்க முடியாமல் தடை ஏற்பட்டது. உதவி வணிக வரி அதிகாரியை நியமிக்க உள்ளோம். ஓட்டல்கள், துணி கடைகள், நகை கடைகளில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.
வணிகர்கள் முழுமையாக வரியை கட்ட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளேன். சோதனைக்கு சென்றால் வணிகர்கள் புகார் செய்கின்றனர்.
சிவா:- வரி ஏய்ப்பு சோதனைக்கு அதிகாரிகள் சில குறிப்பிட்ட கடைகளுக்கே மீண்டும், மீண்டும் செல்கின்றனர்.
ரூ.பல கோடி வரியை ஏப்பம் விட்டவர்கள் யார்? என்பது அதிகாரிகளுக்கு தெரியும். அவர்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் சிறியளவில் வியாபாரம் செய்பவர்களுக்கே தொல்லை தருகின்றனர்.
ரூ.ஒரு லட்சம் லாபம் பெறும் கடைக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கின்றனர். பெட்ரோல் பங்கில் ரூ.பலகோடி வரி பாக்கியை வசூலிக்காமல் விடுகின்றனர்.
நாராயணசாமி:- பெட் ரோல், டீசல் வரியை கட்டாத பல நிறுவனங்களுக்கு 200 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர்.
தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது. சில மாநிலங்களில் சமாதான திட்டம் என்ற பெயரில் வரியை வசூலிக்கின்றனர். அதேபோல வரியை வசூலிப்பது தொடர்பாக பரிசீலனை செய்ய உள்ளோம்.
வரி ஏய்ப்பு என்ற பெயரில் திட்டமிட்டு சில கடைக்கு செல்வதாக எங்களுக்கும் புகார்கள் வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளோம். வணிகர்கள் தாமாகவே முன்வந்து உரிய வரியை செலுத்த வேண்டும் என மீண்டும் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
வையாபுரிமணிகண்டன்:- புதுவை மாநிலத்தில் புற்றுநோயினால் பொது மக்களின் இறப்பு அதி ரிப்பது அரசுக்கு தெரியுமா? சுகாதாரத்துறை இதை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கை என்ன?
முதல்-அமைச்சர் நாராயணசாமி:- புதுவை அரசு புற்று நோய் சிகிச்சைக்காக இலவச பரிசோதனை, சிகிச்சை மற்றும் மருந்துகளை அரசு மருத்துவமனை வாயிலாக வழங்குகிறது. ஜிப்மரில் பிராந்திய புற்று நோய் மையத்தின் ஆதரவோடு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
மேலும் தேசிய திட்டத்தின் கீழ் ஆரம்பநிலையிலேயே கண்டுபிடிக்க முகாம்கள் நடத்தி வருவதால் ஆரம்ப சிகிச்சை தொடங்கவும், இறப்பு விகிதத்தை குறைக்கவும் வழி செய்துள்ளோம். பிராந்திய மருத்துவமனைகளில் பிரத்யேக பராமரிப்பு வார்டுகள் தொடங்கப்பட்டு, மருத்துவ நிபுணர்கள் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகிறது.
அன்பழகன்:- புற்று நோயால் புதுவையில் அதிகளவில் இறப்பு நிகழ்கிறது. அனுமதி பெறாமல் நகர பகுதி முழுவதும் செல்போன் டவர் அமைத்துள்ளதே புற்றுநோய் அதிகரிக்க காரணம். இதன் அலைவரிசையை கணக்கிடக்கூட நம்மிடம் கருவிகள் இல்லை. செல்போன் டவர்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாராயணசாமி: புற்று நோயால் புதுவையில் ஆண்டுக்கு ஆயிரம் பேர் இறக்கின்றனர். ஜிப்மரில் தனி பிரிவு இயங்குவதால் மத்திய அரசு, அரசு ஆஸ்பத்திரியில் புற்று நோய்க்கு தனி பிரிவு உருவாக்க அனுமதி அளிப்பதில்லை. இருப்பினும் புற்று நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான பிரிவை உருவாக்குவோம். புற்று நோய் சிகிச்சை மையம் உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது. #Narayanasamy #Cancer
புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் பேசியதாவது:-
லோக்பால் சட்டத்தை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு 2013-ல் கொண்டு வந்தது.
இதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் லோக் பால் சட்டத்தை இயற்றி முதல்-அமைச்சர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் தொடர்பான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வழி உள்ளது.
நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் லோக்ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழகத்தில் லோக்ஆயுக்தா சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் மூலம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல், முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க வழி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று தமிழகத்தில் இந்த சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் புதுவை அரசு இந்த தீர்ப்பை ஏற்காதது வியப்பளிக்கிறது.
நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் என கூறும் புதுவை காங்கிரஸ் அரசு புதுவையிலும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவர அறிவிப்பு வெளியிட வேண்டும்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை புதுவை காங்கிரஸ் அரசு கொண்டுவராதது துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு அவர் பேசினார்.
சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி பல்வேறு மாநிலங்களில் லோக்ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுவையிலும் லோக்ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் என்பதால் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
ஏற்கனவே டெல்லியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் விளக்கம் பெற்ற பிறகு லோக்ஆயுக்தா சட்டம் புதுவையிலும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Lokayukta
சென்டாக் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு காமராஜர் கல்வி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை அரசு இதுவரை வழங்கவில்லை. இதனால் பெற்றோர்கள் கடன் வாங்கி கல்லூரி நிர்வாகத்திடம் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். இந்த ஆண்டாவது சென்டாக் கல்வி நிதியை காலத்தோடு வழங்க அரசு முன்வர வேண்டும்.
நீட் தேர்வில் 300 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் மட்டுமே சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர். 300 மதிப்பெண்ணுக்கு கீழ் பெற்ற தகுதியுள்ள பல மாணவர்கள் புதுவை பிராந்தியத்தில் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்காமல் போவதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உரிய இடம் பெற்று ஆண்டுதோறும் 350-க்கும் மேற்பட்ட மாணவர்களை கல்லூரிகளில் சேர்த்தோம். ஆனால் இந்த அரசு 4 நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் ஒரு இடத்தைக்கூட அரசு ஒதுக்கீடாக பெறவில்லை.
3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களையும் பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும் 50 சதவீத இடங்களை 7 தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் இருந்து பெற அரசாணை வெளியிட வேண்டும். இதன்மூலம் மாநில மாணவர்கள் கூடுதலாக மருத்துவ இடங்களை பெற்று பயனடைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் நாராயண சாமி பேசியதாவது:-
நிகர்நிலை பல்கலைக் கழகங்களை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது. அரசாணை வெளியிடுவது தொடர்பாக ஏற்கனவே நீங்கள் சட்டசபையில் வலியுறுத்தியுள்ளீர்கள். இதுதொடர்பாக சென்டாக் அதிகாரிகளிடம் நானும், சுகாதாரத்துறை அமைச்சரும் ஆலோசனை நடத்தினோம். அரசாணை வெளியிடுவதால் இதை தடுக்க முடியாது. இதற்கென சட்டம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தமிழகம், கர்நாடகாவில் சட்டம் கொண்டுவந்துள்ளனர். அதேபோல புதுவையிலும் சட்டம் கொண்டுவர சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்