என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவிற்கு புதுவை அரசு சார்பில் ரூ.1 கோடி நிதி- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
Byமாலை மலர்11 Aug 2018 7:28 AM GMT (Updated: 11 Aug 2018 7:28 AM GMT)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #KeralaRain #PondicherryCM #Narayanasamy
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதுவரை 29 பேர் இறந்துள்ளனர். 22-க்கும் மேற்பட்ட அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் டெலிபோனில் பேசினேன். அப்போது கேரள மாநிலத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினேன். இதற்காக புதுவை மாநில அரசின் நிதியிலிருந்து ரூ. 1 கோடி வழங்க உள்ளோம்.
மேலும் கேரள மாநில மக்களுக்கு உதவும் விதமாக தனி கணக்கு ஒன்றை தொடங்க இருக்கிறோம். இந்த தனிக்கணக்கில் புதுவை பொதுமக்களும் வியாபாரிகளும் அதிக அளவில் நிதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க துணிகள், அரிசி, மருந்து மற்றும் நிவாரண பொருட்கள் ஆகியவற்றை தாராளமாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இதனை கேரள மாநில மக்களுக்கு அனுப்பி வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #KeralaRain #PondicherryCM #Narayanasamy
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதுவரை 29 பேர் இறந்துள்ளனர். 22-க்கும் மேற்பட்ட அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் டெலிபோனில் பேசினேன். அப்போது கேரள மாநிலத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினேன். இதற்காக புதுவை மாநில அரசின் நிதியிலிருந்து ரூ. 1 கோடி வழங்க உள்ளோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க துணிகள், அரிசி, மருந்து மற்றும் நிவாரண பொருட்கள் ஆகியவற்றை தாராளமாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இதனை கேரள மாநில மக்களுக்கு அனுப்பி வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #KeralaRain #PondicherryCM #Narayanasamy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X