search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவிற்கு புதுவை அரசு சார்பில் ரூ.1 கோடி நிதி- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
    X

    கேரளாவிற்கு புதுவை அரசு சார்பில் ரூ.1 கோடி நிதி- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #KeralaRain #PondicherryCM #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதுவரை 29 பேர் இறந்துள்ளனர். 22-க்கும் மேற்பட்ட அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் டெலிபோனில் பேசினேன். அப்போது கேரள மாநிலத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினேன். இதற்காக புதுவை மாநில அரசின் நிதியிலிருந்து ரூ. 1 கோடி வழங்க உள்ளோம்.


    மேலும் கேரள மாநில மக்களுக்கு உதவும் விதமாக தனி கணக்கு ஒன்றை தொடங்க இருக்கிறோம். இந்த தனிக்கணக்கில் புதுவை பொதுமக்களும் வியாபாரிகளும் அதிக அளவில் நிதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க துணிகள், அரிசி, மருந்து மற்றும் நிவாரண பொருட்கள் ஆகியவற்றை தாராளமாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இதனை கேரள மாநில மக்களுக்கு அனுப்பி வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KeralaRain #PondicherryCM #Narayanasamy
    Next Story
    ×