search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முன்னேற வேண்டுமானால் என்னைப்பற்றி விமர்சிக்க வேண்டாம் - முதல்வருக்கு ஆளுநர் வேண்டுகோள்
    X

    புதுவை முன்னேற வேண்டுமானால் என்னைப்பற்றி விமர்சிக்க வேண்டாம் - முதல்வருக்கு ஆளுநர் வேண்டுகோள்

    புதுச்சேரி மாநிலம் முன்னேற வேண்டும் என்றால் தன்னைப்பற்றி முதலமைச்சர் விமர்சிக்கக்கூடாது என துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார். #PudhucherryGrowth #KirenBedi #CMNarayanasamy
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான அதிகாரப்போட்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசின் செயல்பாடுகளை ஆளுநரின் தலையீடு இருக்கக்கூடாது என முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறியதாவது:-



    புதுச்சேரி மாநிலத்திற்கு முன்னேற்றம் ஏற்படவேண்டும் என விரும்பினால் முதலமைச்சர் என்னைப்பற்றி விமர்சிக்கக் கூடாது. ஆளுநர் மாளிகை மற்றும் ஆளுநரின் அதிகாரங்களை குறைத்து மதிப்பீடு செய்வதன் மூலம் மாநில வளர்ச்சியின் வேகம்தான் குறையும்.

    புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PudhucherryGrowth #KirenBedi #CMNarayanasamy
    Next Story
    ×