search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caner"

    புற்று நோயால் புதுவையில் ஆண்டுக்கு ஆயிரம் பேர் இறப்பதாக சட்டசபையில் இன்று நடைபெற்ற கேள்விநேரத்தின் போது முதலமைச்சர் நாராயணசாமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

    வையாபுரிமணிகண்டன்:- புதுவை மாநிலத்தில் புற்றுநோயினால் பொது மக்களின் இறப்பு அதி ரிப்பது அரசுக்கு தெரியுமா? சுகாதாரத்துறை இதை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கை என்ன?

    முதல்-அமைச்சர் நாராயணசாமி:- புதுவை அரசு புற்று நோய் சிகிச்சைக்காக இலவச பரிசோதனை, சிகிச்சை மற்றும் மருந்துகளை அரசு மருத்துவமனை வாயிலாக வழங்குகிறது. ஜிப்மரில் பிராந்திய புற்று நோய் மையத்தின் ஆதரவோடு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

    மேலும் தேசிய திட்டத்தின் கீழ் ஆரம்பநிலையிலேயே கண்டுபிடிக்க முகாம்கள் நடத்தி வருவதால் ஆரம்ப சிகிச்சை தொடங்கவும், இறப்பு விகிதத்தை குறைக்கவும் வழி செய்துள்ளோம். பிராந்திய மருத்துவமனைகளில் பிரத்யேக பராமரிப்பு வார்டுகள் தொடங்கப்பட்டு, மருத்துவ நிபுணர்கள் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகிறது.

    அன்பழகன்:- புற்று நோயால் புதுவையில் அதிகளவில் இறப்பு நிகழ்கிறது. அனுமதி பெறாமல் நகர பகுதி முழுவதும் செல்போன் டவர் அமைத்துள்ளதே புற்றுநோய் அதிகரிக்க காரணம். இதன் அலைவரிசையை கணக்கிடக்கூட நம்மிடம் கருவிகள் இல்லை. செல்போன் டவர்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செல்வம்:- பெண்கள் தான் அதிகளவில் புற்று நோயால் இறக்கின்றனர். இதற்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டறிய முடியவில்லை. இதனால் நோய் அதிகளவில் பரவி இறக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அரசு ஆஸ்பத்திரியிலேயே தனி பிரிவு உருவாக்க வேண்டும்.


    ஜெயமூர்த்தி:- பொது மக்களிடம் நாள்தோறும் பழகுகிறோம். பல இறப்புகளுக்கு செல்கிறோம். அப்போது பலர் புற்று நோயால் இறந்ததாக கூறுகின்றனர். இதற்கு சிகிச்சை பெற கால தாமதம் ஏற்படுவதே இறப்பிற்கு காரணம்.

    நாராயணசாமி: புற்று நோயால் புதுவையில் ஆண்டுக்கு ஆயிரம் பேர் இறக்கின்றனர். ஜிப்மரில் தனி பிரிவு இயங்குவதால் மத்திய அரசு, அரசு ஆஸ்பத்திரியில் புற்று நோய்க்கு தனி பிரிவு உருவாக்க அனுமதி அளிப்பதில்லை. இருப்பினும் புற்று நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான பிரிவை உருவாக்குவோம். புற்று நோய் சிகிச்சை மையம் உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #Narayanasamy #Cancer
    ×