search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennimalai"

    • தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நாளை இரவு நடக்கிறது.
    • இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்வார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் பல்லாக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகன காட்சி, பஞ்சமூர்த்தி புற ப்பாடு, திருத்தேரோட்டம், குதிரை வாகன காட்சி, பரி வேட்டை ஆகிய விழாக்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தொடர்ந்து இன்று இரவு தெப்போற்சவம், பூச வாகன காட்சி திருவீதி உலா நடக்கிறது. தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) இரவு நடக்கிறது.

    முன்னதாக காலை 10 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடடர்ந்து மலர் அபிஷேகம் நடைபெறுகிறது.

    அப்போது டன் கணக்கில் மலர்களால் அபிஷேகம் செய்யப்படும். இரவு 8 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா நடக்கும்.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்வார்கள். இரவு 9 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் நான்கு ராஜா வீதிகளிலும் சாமி வலம் வந்து அதிகாலை 5 மணிக்கு கைலாசநாதர் கோவி லுக்குள் சென்றடையும்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் 15 நாள் தேர் திருவிழா நிறைவுக்கு வருகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் சரவணன்,மற்றும் பணியாளர்கள், அர்ச்ச கர்கள் செய்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நாளை மாலை 4 மணிக்கு மேல் சென்னிமலை டவுன் பகுதிக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டது.

    ஈரோடு, பெருந்துறை மார்கமாக செல்லும் பஸ் களுக்கு பிராட்டியம்மன் கோவில் அருகில் தற்காலிக பஸ் நிறுத்தமும், அரச்சலூர், கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கு அரச்சலூர் ரோட்டிலும், ஊத்துக்குளி மார்க்க பஸ்களுக்கு மேலப்பாளையத்திலும் தற்காலிக பஸ் நிறுத்தமும் அமைக்கப்படுகிறது.

    • பக்தி பரவசத்துடன் மேள தாளம் முழுங்க சென்னிமலை நகரை வலம் வந்து சென்னிமலை மலை மீதுள்ள முருகனை வணங்கி செல்வர்.
    • சென்னிமலை நகரில் 4 ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து நேற்று மாலை 5.45-க்கு நிலை சேர்ந்தது.

    சென்னிமலை

    ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற முருகன் தலமாக திகழம் சென்னிமலையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் தைப்பூச விழா தான் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

    15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கரூர், திருப்பூர், கோவை உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக காவடி, பால், தயிர் சுமந்து வந்து முருகனை வணங்கி செல்வர்.

    பக்தி பரவசத்துடன் மேள தாளம் முழுங்க சென்னிமலை நகரை வலம் வந்து சென்னிமலை மலை மீதுள்ள முருகனை வணங்கி செல்வர்.

    இந்த ஆண்டு தைப்பூச விழா கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தேரோட்டம் கடந்த 5-ந் தேதி காலை தொடங்கி சென்னிமலை நகரில் 4 ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து நேற்று மாலை 5.45-க்கு நிலை சேர்ந்தது. இந்த நிலையில் இன்று இரவு பரிவேட்டை குதிரை வாகன காட்சி நடக்கிறது.

    நாளை இரவு தெப்போற்சவம் பூதவாகனக்காட்சி நடக்கிறது. நாளை மறுநாள் மகாதரிசனம் அன்று காலை 10 மணிக்கு வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடக்கிறது.

    அதை தொடர்ந்து இரவு 7.40 மணிக்கு நடராஜ பெருமானும். சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா காட்சி இரவு முழுவதும் நடக்கும்.

    இதை காண சென்னிமலை நகரில் லட்சக்க னக்காண பக்தர்கள் கூடுவர். தொடர்ந்து 10-ந் தேதி அதிகாலை 5 மணி வரை சுவாமி திருவீதி நடக்கும். இரவு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    • வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 42). தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    சுதாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் கடந்த 2 வாரங்களாக இவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி கொண்டு இருந்துள்ளார். இதனால் கடன் தொல்லை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.

    இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    ஆனால் செல்லும் வழியில் சுதாகரன் இறந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை முருகன் கோவிலில் 34-ம் ஆண்டு கந்தசஷ்டி விழா வரும் 26-ந் தேதி தொடங்குகிறது.
    • விழாவையொட்டி தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சென்னிமலை:

    கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான சென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா 6 நாட்கள் சிறப்பாக கொண்டாட ப்படுகிறது.

    இதையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் 34-ம் ஆண்டு கந்தசஷ்டி விழா வரும் 26-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. விழாவை யொட்டி வரும் 26-ந் தேதி காலை 6.30 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவி லில் இருந்து சுப்பி ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் மலை கோவிலு க்கு சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    இதை தொடர்ந்து மலை கோவிலில் காலை 9.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடக்கிறது. தொடர்ந்து 6 நாட்களுக்கு காலை 10 மணிக்கு யாக பூஜைகள், மகா பூர்ணாகுதி, உற்சவர் மற்றும் மூலவருக்கு அபி ேஷகமும் மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை நடக்கி றது.

    விழாவையொட்டி தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. 30-ந் தேதி மாலை 4 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் மலை கோவிலில் இருந்து அடிவாரத்தில் அருள் பாலிக்கிறார்.

    மேலும் இரவு 8 மணிக்கு சென்னிமலை 4 ராஜ வீதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி காலை சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    எனவே கந்த சஷ்டி விழாவில் கலந்து கொண்டு காப்பு கட்டி, சஷ்டி விரதம் இருக்க விரும்புவர்கள் 26-ந் தேதி மதியம் 12 மணிக்கு மலை கோவிலுக்கு வர வேண்டும். அப்போது தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராம நாதசிவாச்சாரியார் விரதம் இருப்பவர்களுக்கு காப்பு அணிவிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • வருகிற 25-ந் தேதி மாலை 5.23 மணிக்கு சூரியகிரகணம் தொடங்கி 6.23 மணிக்கு முடிவடைவதால் சென்னிமலை முருகன் கோவில் சுவாமி மூலஸ்தான நடை சாத்தப்படும்.
    • இந்நேரத்தில் மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசிக்கவோ அனுமதி இல்லை.

    சென்னிமலை:

    வருகிற அக்டோபர் மாதம் 25-ந் தேதி அன்று மாலை 5.23 மணிக்கு சூரியகிரகணம் தொடங்கி 6.23 மணிக்கு முடிவடைவதால் காலசந்தி பூஜை, உச்சிகாலம், சாயரட்சை பூஜை நடைபெற்று பகல் 2.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை சென்னிமலை முருகன் கோவில் சுவாமி மூலஸ்தான கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும்.

    இந்நேரத்தில் மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசிக்கவோ அனுமதி இல்லை. இரவு 7:35 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்ப–டுவர். அன்று மட்டும் இரவு வேங்கை மர ரதம் உலா நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னிமலை வட்டார விசைத்தறி நெசவாளர்களுக்கு சமூக பேச்சுவார்த்தை மூலம் போனஸ் வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்
    • இல்லை எனில் வருகிற 20 ம் தேதி முதல் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வட்டார விசைத்தறி நெசவாளர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தீபாவளி போனஸ், கூலி உயர்வு ஒப்பந்தம் சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும், அனைத்து கட்சி தொழில் சங்க கூட்டு குழுவிற்கும் போனஸ் ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படும்.

    கடந்த 2019 ம் வருடம் நடந்த மூன்றாண்டு ஒப்பந்த உடன்படிக்கை காலாவதியாகி விட்டதால் இந்த வருடம் புதிய ஒப்பந்தம் போட வேண்டும்.

    இது குறித்து தி.மு.க., தொழிற்சங்கமான எல்.பி.எப்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழில் சங்கமான ஏ.ஐ.டி.யு.சி., ஆகிய தொழில் சங்கங்கள் மட்டும் போனஸ் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் தீபாவளிக்கு 10 நாட்கள் தான் உள்ள நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் எந்த பேச்சுவார்த்தையும் தொடங்க வில்லை. மேலும் அனைத்து தொழில் சங்கமும் இணைந்து கூட்டு குழு ஏற்படுத்தி நோட்டீஸ் வழங்க வேண்டும் என முதலாளிகள் சங்கம் கூறி வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் ஏ.ஐ.டி.யு.சி., தொழில் சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக நேற்று வருகிற 19 ம் தேதிக்குள் சென்னிமலை வட்டார விசைத்தறி நெசவாளர்களுக்கு சமூக பேச்சுவார்த்தை மூலம் போனஸ் வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் இல்லை எனில் வருகிற 20 ம் தேதி முதல் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

    • ஏ.ஐ.டி.யு.சி. விசைத்தறி மற்றும் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சென்னிமலை வட்டார சிறப்பு பேரவைக் கூட்டம், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இந்த பேரவைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    ஏ.ஐ.டி.யு.சி. விசைத்தறி மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சென்னிமலை வட்டார சிறப்பு பேரவைக் கூட்டம், சங்க அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

    ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர் பொன்னுசாமி, கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் நாகப்பன், கட்டடத் தொழி லாளர் சங்க ஒன்றியத் தலைவர் ராஜ்குமார், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டக்குழு உறுப்பினர் பாபு உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

    சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இந்த பேரவைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் சென்னிமலை வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான விசைத்தறி நெசவாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது கூலி மற்றும் போனஸ் கோரிக்கைகள் தொடர்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவிற்கும், சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர்கள் சங்கத்திற்கும் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட 3 ஆண்டு கால ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது.

    ஆகவே இந்த ஆண்டு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வாழ்க்கை செலவுகள் கணிசமாக அதிகரி த்துள்ளதை கருத்தில் கொண்டு பின்வரும் கோரி க்கைகளை முன்வை ப்பதென ஏகமனதாக முடிவு செய்ய ப்பட்டது.

    அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் 2021, 2022-ம் ஆண்டுக்கான போனசாக அவர்கள் ஈட்டிய கூலியில் 25 சதவீதம் வழங்க வேண்டும். கூலி உயர்வாக தற்போது பெற்று வரும் கூலியில் 40 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.

    அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் தேசிய, பண்டிகை விடுமுறை நாட்கள் சட்டப்படி வருடத்திற்கு 9 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் வழங்க வேண்டும்.

    விசைத்தறி தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் மருத்துவ வசதி பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்கான பிரீமியத் தொகையை விசைத்தறி உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கை கள் மீது உடன டியாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்தி, தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே போனஸ் வழங்க வேண்டும் என சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர்கள் சஙகத்தை பேரவை கூட்டம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

    மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 12-ந் ேததி மாலை 4 மணிக்கு சென்னிமலையில் கோரிக்கை பேரணி - ஆர்ப்பாட்டம் நடத்துவ தென்று முடிவு செய்யப்பட்டது.

    சென்னிமலை பி.ஆர்.எஸ்.ரோடு சங்க அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. மேலும் 12-ந் தேதி மதியத்திற்கு மேல் விசைத்தறிகளை நிறுத்திவிட்டு அனைத்து தொழிலாளர்களும், பேரணி-ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

    • வெங்கமேடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இந்த மறியலால் அவ்வழியே சுமார் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ளது புஞ்சை பாலதொழுவு பஞ்சாயத்து.

    இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலமரம், வெங்க மேடு, ஓலப்பாளையம் உட்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு கொடு முடியில் உள்ள காவேரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக காங்கேயம் வழியாக கடந்த சில ஆண்டுகளாக காவிரி ஆற்று நீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 2 மாத காலமாக காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பம்பிங் நிலையம் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் ஆற்றில் இருந்து முறையாக தண்ணீர் சப்ளை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு வெங்கமேடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த அதிகாரிகள் சில நாட்களில் குடிநீர் சப்ளையை சரி செய்து முறையாக கிடைக்கச் செய்வதாக உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் கடந்த 40 நாட்களாக மீண்டும் முறையாக குடிநீர் சப்ளை செய்யப்படாமல் பல நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை நடைபெற்றதாக பொது–மக்கள் கூறினர். முறையாக குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரி–களிடம் பொது மக்கள் முறையிட்டனர். இருப்பினும் போதுமான அளவு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

    இதையடுத்து வெங்கமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று மதியம் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே ஊத்துக்குளி செல்ல வந்த அரசு டவுன் பஸ் மற்றும் வாகனங்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கவுன்சிலர் செல்வம், புஞ்சை பாலதொழுவு பஞ்சாயத்து தலைவர் தங்கமணி விஜயகுமார், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது 10 நாட்களில் முறையாக குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் அதுவரை லாரி தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். இதனையேற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த மறியலால் அவ்வழியே சுமார் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சென்னிமலை முருகன் கோவிலில் ஆவணி பவுர்ணமியையொட்டி ஆவணி அவிட்டம் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் முருகப்பெருமான் மூலவர், உற்சவர், விநாயகர், காசி விஸ்வநாதர் சாமிகளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் ஆவணி பவுர்ணமியையொட்டி ஆவணி அவிட்டம் விழா கொண்டாடப்பட்டது. விழாைவயொட்டி முருக பெருமானு க்கு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    விழாவில் முருகப்பெரு மான் மூலவர், உற்சவர், விநாயகர், காசி விஸ்வநாதர் சாமிகளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. முன்தாக சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தது.

    விழாவில் சென்னிமலை, காங்கயம், வெள்ளோடு, ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை முருகன் கோவில் சிவாச்சாரியர்கள் சென்னிமலை டவுன் கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி பூணூல் மாற்றி அணி வித்தனர்.

    • சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை, பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம், திப்பம் பாளையம், அம்மா பாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, மு.பு.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு, பி.என்.நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
    • இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் இண்டேன் கேஸ் ஏஜென்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இரவு வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். நள்ளிரவில் நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    பின் தரைத்தளத்தில் உள்ள கேஸ் ஏஜென்சியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனையடுத்து மறுநாள் காலை பணிக்கு வந்த ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தியதில் இச்சம்பவத்தில் 3 வாலிபர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    மேலும் அஸ்சூரன்ஸ் அலுவலகத்தில் பல ஆயிரமும், கேஸ் ஏஜென்சியில் பல ஆயிரமும் கொள்ளை அடிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விட்டனர். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவங்களை வைத்து வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த சென்னி மலை வட்டாரத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதன் அடிப்படையில் சென்னிமலை அருகில் உள்ள எம்.பி.என். நகரில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது உறுதியானது.

    விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த அனோவார்ஹுசைன் (21), சைக்குள் இஸ்லாம் (29), மன்சூர் அலி (23) ஆகிய 3 வாலிபர்கள் கியாஸ் ஏஜென்சி மற்றும் அஸ்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் இருந்து மொத்தம் ரூ.45 ஆயிரம் கொள்ளையடித்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    சென்னிமலை துணை மின் நிலையம் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்நிறுத்தம் செய்யபட்டுள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை துணை மின் நிலையம் பராமரிப்பு பணி காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை டவுன் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி.என்.நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ×