search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் சாலை மறியல்"

    • சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • இதனால் அரைமணி நேரத்தில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    எழுமாத்தூர் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து வரும் பயனாளிகளுக்கு கடந்த 7 வாரங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இதனால் பயனாளிகள் தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனக்கோரி இந்திய மார்க்யூஸ்டு, கம்யூனி ஸ்டு கட்சியின் ெமாடக்குறிச்சி உறுப்பினர் தங்கவேல் தலைமையில் எழுமாத்தூர் பஸ் நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை அறிந்த சம்பந்தப்பட்ட ஊராட்சியின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்த சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனால் அரைமணி நேரத்தில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    கடந்த 7 வாரங்களாக மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை அரசு ஒதுக்காமல் உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டது என சம்பந்தப் பட்ட ஊராட்சியின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி இது குறித்து தெரிவித்தார்.

    • 2 மாதத்திற்கு முன்பு புதிதாக தார் சாலை போடுவதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன.
    • பிறகு பணிகள் எதுவும் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசல் பாரதி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு புதிதாக தார் சாலை போடுவதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன.

    ஆனால் அதன் பிறகு பணிகள் எதுவும் நடைபெறவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் பரவி கிடக்கும் ஜல்லிக்கற்களால் அடிக்கடி விபத்து நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் இன்று மதியம் கிழக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் பொதுமக்கள் திரண்டனர்.

    திடீரென அந்த வழியாக வந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில்

    • கடைகள் வைத்திருந்தவர்கள் திடீரென சாலையில் அம ர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் புதுப்பாளையம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் திருவிழா தொடங்கி நடை பெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமையுடன் விழா நிறைவடைந்தது.

    ஆனால் அடுத்த நாள் ஞாயிற்று க்கிழமை விடு முறை என்பதால் அன்று கட்டு க்கடங்காத கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் நேற்று திங்கட்கிழ மையும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை அந்தியூர் குருநாத சாமி கோவில் வளாகத்தில் போலீசார் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்க முடி யாது கடைகளை அடைக்கு மாறு கூறியதாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து அந்த பகுதியில் கடைகள் வைத்திருந்தவர்கள் திடீரென சாலையில் அம ர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி யில் பரபரப்பும், போக்கு வரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் கிடை த்ததும் அந்தியூர் இன்ஸ்பெ க்டர் செந்தில்குமார் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்து க்கு வந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் கடை நடத்துபவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் கடந்த 2 நாட்களா க மழை யின் காரணமாக எதிர்பார்த்த அளவு வியா பாரம் இல்லை. குறைந்து காணப்பட்டது. நாளை (புதன்கிழமை) பால் பூஜை நடக்கிறது.

    எனவே நாளை வரை கடை நடத்த எங்க ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். சுதந்திர தின விடுமுறையை யொட்டி எதிர்பார்த்த கூட்டம் வரு வதற்கு வாய்ப்பு இருப்பதால் நாளை வரை அனுமதி வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் ஏ.ஜி. வெங்க டாசலம் எம்.எல்.ஏ.யிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகளிடத்தில் அனுமதி பெற்று புதன்கிழ மை வரை கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    இதையடுத்து வியாபாரிகள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கு இருந்து கலந்து சென்றனர். இதனால் புதுப்பாளையம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.

    • பொது கழிப்பிடத்தில் தண்ணீர் வராததால் ஆத்திரம்
    • போக்குவரத்து பாதிப்பு

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருமாரியம்மன் கோவில் தெரு பகு தியில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு சில தெருக்களில் குடிநீர் சரியாக வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட் டோர் வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் வேப்பூர் பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • சாக்கடை கால்வாய் அமைக்க நெடுஞ்சாலை–த்துறை சார்பில் குழிகள் தோண்ட ப்பட்டுள்ளது.
    • அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் சாலையில் இருபுறமும் சாக்கடை கால்வாய் அமைக்க நெடுஞ்சாலை–த்துறை சார்பில் குழிகள் தோண்ட ப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வீடுகளுக்கு செல்வதற்கு வழி இல்லாமல் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே சாக்கடை அமைக்க குழி தோண்ட இரு கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சாக்கடை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. 15 நாட்களாக பணி நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் திருச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தனர்.இந்த சாலைமறியலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வெங்கமேடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இந்த மறியலால் அவ்வழியே சுமார் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ளது புஞ்சை பாலதொழுவு பஞ்சாயத்து.

    இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலமரம், வெங்க மேடு, ஓலப்பாளையம் உட்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு கொடு முடியில் உள்ள காவேரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக காங்கேயம் வழியாக கடந்த சில ஆண்டுகளாக காவிரி ஆற்று நீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 2 மாத காலமாக காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பம்பிங் நிலையம் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் ஆற்றில் இருந்து முறையாக தண்ணீர் சப்ளை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு வெங்கமேடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த அதிகாரிகள் சில நாட்களில் குடிநீர் சப்ளையை சரி செய்து முறையாக கிடைக்கச் செய்வதாக உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் கடந்த 40 நாட்களாக மீண்டும் முறையாக குடிநீர் சப்ளை செய்யப்படாமல் பல நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை நடைபெற்றதாக பொது–மக்கள் கூறினர். முறையாக குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரி–களிடம் பொது மக்கள் முறையிட்டனர். இருப்பினும் போதுமான அளவு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

    இதையடுத்து வெங்கமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று மதியம் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே ஊத்துக்குளி செல்ல வந்த அரசு டவுன் பஸ் மற்றும் வாகனங்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கவுன்சிலர் செல்வம், புஞ்சை பாலதொழுவு பஞ்சாயத்து தலைவர் தங்கமணி விஜயகுமார், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது 10 நாட்களில் முறையாக குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் அதுவரை லாரி தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். இதனையேற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த மறியலால் அவ்வழியே சுமார் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×