சம்பளம் வழங்கக்கோரி திடீர் சாலை மறியல்

சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனால் அரைமணி நேரத்தில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
சம்பளம் வழங்கக்கோரி திடீர் சாலை மறியல்
Published on

மொடக்குறிச்சி:

எழுமாத்தூர் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து வரும் பயனாளிகளுக்கு கடந்த 7 வாரங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

இதனால் பயனாளிகள் தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனக்கோரி இந்திய மார்க்யூஸ்டு, கம்யூனி ஸ்டு கட்சியின் ெமாடக்குறிச்சி உறுப்பினர் தங்கவேல் தலைமையில் எழுமாத்தூர் பஸ் நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த சம்பந்தப்பட்ட ஊராட்சியின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்த சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனால் அரைமணி நேரத்தில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

கடந்த 7 வாரங்களாக மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை அரசு ஒதுக்காமல் உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டது என சம்பந்தப் பட்ட ஊராட்சியின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி இது குறித்து தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com