search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car driver"

    • கடன் தொல்லையும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சேலம் சூரமங்கலம் பெருமாம்பாளையம் ரோடு பகுதிைய சேர்ந்தவர் முருகானந்தம், இவர் சொந்த மாக கார்கள் வைத்து வாடகைக்கு இயக்கி வந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் பெருமாம்பாளையம் ரோடு பகுதிைய சேர்ந்தவர் முருகானந்தம் (40), இவர் சொந்த மாக கார்கள் வைத்து வாடகைக்கு இயக்கி வந்தார்.

    இந்த நிலையில் கடன் தொல்லையும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த மனைவி மற்றும் குழந்தைகள் கதறி துடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராஜேஷ் பொட்டிரெட்டிப்பட்டி வார சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை கை மற்றும் வாய்ப்பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் ராஜேஷ்(24). இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் பொட்டிரெட்டிப்பட்டி வார சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை கை மற்றும் வாய்ப்பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.

    இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ராஜேஷை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரை பெருமாநல்லூர் திருப்பூர் ரோட்டில் பூலுவபட்டி நால்ரோடு அருகே நிறுத்தி உள்ளார்.
    • வாக்குவாதம் ஏற்பட்டு ஆட்டோ டிரைவர்கள் மணிகண்டனை தாக்கி உள்ளனர்.

    அவினாசி:

    அவினாசியை அடுத்து வாரணாசி பாளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவர் டாக்சி டிரைவராக உள்ளார். தனது காரை பெருமாநல்லூர் திருப்பூர் ரோட்டில் பூலுவபட்டி நால்ரோடு அருகே நிறுத்தி உள்ளார். அப்போது அதே பகுதியில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மணிகண்டனிடம் இந்த பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது .

    காரை நிறுத்தக்கூடாது என கூறியதாக தெரிகிறது .அதற்கு மணிகண்டன், பயணிகள் மொபைல் போன் மூலம் புக் செய்து தான் செல்கிறார்கள். எல்லோரையும் ஏற்றி செல்வதில்லை. எதற்காக இங்கு நிறுத்த வேண்டாம் என்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

    இதில் வாக்குவாதம் ஏற்பட்டு ஆட்டோ டிரைவர்கள் மணிகண்டனை தாக்கி உள்ளனர். இதனை கண்டித்தும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவினாசி தாசில்தாரிடம் டாக்சி டிரைவர்கள் மனு கொடுத்தனர். 

    • பணம் கையாடல் செய்ததாக கார் டிரைவருக்கும், அ.தி.மு.க பிரமுகருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • இந்நிலையில் சுரேஷ் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை எரித்தனர். புகாரின் பேரில் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அம்பிளிக்கை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சுரேஷ்(29). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் அதேபகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான நடராஜன் என்பவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 17-ந்தேதி நடராஜனின் நெய் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாக சுரேசை தனது வீட்டிற்கு வரவழைத்தார். அதன்பிறகு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதில் சுரேஷ் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை வீட்டில் கொண்டு சேர்த்தனர். அவரது தாயார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவித்து சுரேஷ் உடலை எரித்துவிட்டார். இந்நிலையில் சுரேஷ் அடித்து கொலை செய்யப்பட்டதாகவும், இது வெளியில் தெரியாமல் இருக்க அவரது உடலை எரித்து விட்டதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து அம்பிளிக்கை போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    இதனைதொடர்ந்து எரிக்கப்பட்ட சுரேஷ் சாம்பலை போலீசார் எடுத்துச்சென்றனர். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமணம் ஆகாத விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
    • வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

    உடுமலை :

    உடுமலை அடுத்த சேரன் நகரை சேர்ந்த சீரங்கன் என்பவரது மகன் சுதாகர் ( வயது 29), கார் டிரைவர்.

    திருமணம் ஆகாத விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனால் இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிலேயே தனக்குத்தானே தூக்கு போட்டுக் கொண்டு தொங்கியுள்ளார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

    • கார் டிரைவரிடம் நூதனமாக பேசி ரூ. 2.50 லட்சம் கொள்ளை நடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நகரி காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் அருள் அன்பரசு (வயது 39). இவர் கோவையில் சொந்த மாக கார் வைத்து தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று அங்குள்ள காந்தி நகர் விடுதியில் இருந்து பேசிய வாலிபர் சென்னைக்கு செல்ல வேண்டுமென்று கூறி யுள்ளார். அதன்படி ரூ. 8000 வாடகை பேசி அருள் அன்பரசு அந்த வாலிபரை சென்னை ஆலந்தூரில் இறக்கிவிட்டுள்ளார்.

    அப்போது அந்த வாலிபர் தான் காரைக்குடி கழனி வாசலை சேர்ந்த சங்கர் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் பேசிய வாடகை பணத்தை விட கூடுதலாக ஆயிரத்தை சங்கர் கொடுத்ததாக தெரிகிறது.

    சில நாட்களுக்கு பின் மீண்டும் தொடர்பு கொண்ட சங்கர் 11 பவுன் ரூ. 2 லட்சத்து 62 ஆயிரத்திற்கு ஏலம் வருவதாகவும், அதனை வாங்கிக் கொள்ளு மாறும் அருள் அன்பரசு விடம் கூறியுள்ளார். அவரும் கூடுதல் லாபம் கிடைக்கும் என கருதி மனைவியின் நகைகளை அடகு வைத்து பணத்தை திரட்டி உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருமாறு அருள் அன்பரசு விடம் சங்கர் கூறியுள்ளார். அங்கு 2 பேரும் சந்தித்து பேசினர். அப்போது விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 2-வது மாடி அறையில் ஏலம் நடப்பதாகவும், தான் மட்டும் சென்று நகைகளை வாங்கி வருவதாக பணத்துடன் சங்கர் சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருள் அன்பரசு மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஏலம் நடைபெறவில்லை என தெரியவந்தது.

    உடனே கலெக்டர் அலுவலக வளாகத்தில் வந்து பார்த்தபோது சங்கர் ஒரு ஆட்டோவில் ஏறி தப்பிச் செல்வது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருள் அன்பரசு 2 லட்சத்து 62 ஆயிரம் திருடு போனது தொடர்பாக சூலக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.

    • உடல் நல பிரச்சினைகள் குறித்து பில்சுமியேல் கார் டிரைவருடன் உரையாடி உள்ளார்.
    • அறுவை சிகிச்சை கடந்த வருடம் வெற்றிகரமாக நடந்தது. தற்போது சுமியேல் நன்றாக இருக்கிறார்.

    மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் சம்பவங்களை பார்க்கும் போதும், படிக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த டிம் லெட்ஸ் என்ற ஊபர் டிரைவர் ஒருவர் தனது காரில் பயணித்த பில்சுமியேல் என்ற பயணிக்கு சிறுநீரக தானம் செய்தது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பில்சுமியேல் ஒருமுறை டயாலிசிஸ் மையத்திற்கு டிம்லெட்ஸ்சின் காரில் சென்றுள்ளார்.

    அப்போது தனது உடல் நல பிரச்சினைகள் குறித்து அவர் டிரைவருடன் உரையாடி உள்ளார். அதை கேட்ட டிம்லெட்ஸ் மனமுருகி தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன் வந்துள்ளார்.

    அதன்படி அவர் சுமியலுக்கு சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார். இதற்கான அறுவை சிகிச்சை கடந்த வருடம் வெற்றிகரமாக நடந்தது. தற்போது சுமியேல் நன்றாக இருக்கிறார். அவர் டிரைவர் டிம்லெட்சுடன் ஆஸ்பத்திரியில் இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது வாழ்க்கை கதையை கூறி இருந்தார். அவரது இந்த பதிவு 1 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

    • வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கேத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டியபாளையத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் தினேஷ் (வயது 22 ). கார்டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தினேஷ் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் வாரிய அதிகாரி தங்கை வீட்டில் 12 பவுன் நகை திருடு போனது.
    • இந்த சம்பவம் தொடர்பாக மதுரை கார் டிரைவரை போலீசார் கைது செய்யப்பட்டார்.

    மதுரை

    மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகப்பாண்டியன் மின்வாரிய அதிகாரி. இவரது தங்கை செல்வநயகி. இவர் மதுரை பரசுராமன்பட்டியை சேர்ந்த பாலாஜி என்பவரது காரில் வீட்டுக்கு பொருட்களை ஏற்றி சென்றுள்ளார். வீட்டில் சென்று பார்த்தபோது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகையை காணவில்லை.

    இதுபற்றி திருத்தங்கல் போலீசில் சண்முகப்பாண்டியன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்தான் நகையை திருடியது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.

    • ரெயில் நிலையம் அருகில் காரை நிறுத்தி காத்திருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் பழைய தபால் அலுவலக தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 41). வாடகை கார் டிரைவர். இவருக்கு ஏற்கனவே 2 முறை மாரடைப்பு ஏற்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியிலும், பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    மேலும் இதற்கான மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தார். இந்தநிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வாடிக்கையாளர்களை அழைத்து செல்வதற்காக சத்தியமங்கலத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஈரோட்டுக்கு வடிவேல் வந்தார்.

    அவர் ரெயில் நிலையம் அருகில் காரை நிறுத்தி காத்திருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் தாய் இறந்து போனதால் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமணமாகி அவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்

    புதுச்சேரி:

    மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் தாய் இறந்து போனதால் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்திமுருகன் (வயது54). கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி அவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் சக்திமுருகன் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சக்தி முருகனின் தாயார் கடந்த ஆண்டு இறந்து விட்டார். ஏற்கனவே மனைவி பிரிந்து சென்று விட்ட வேதனையில் இருந்த சக்திமுருகன் தாய் இறந்து போனது பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக எண்ணி மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இதனை மறக்க தினமும் சக்திமுருகன் மது குடித்து வந்தார். ஆனாலும் தாயின் மரணத்தால் சக்திமுருகன் விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சக்திமுருகன் வீட்டில் தாயின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • கார் டிரைவராக பணிபுரிந்து வந்த வாலிபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அழகாபுரம் ஏடிசி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38) இவருக்கு ஜீவிதா (வயது 34) என்ற மனைவி உள்ளார்.வினோத்குமார் சேலம் போக்சோ கோர்ட் நீதிபதியின் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த வினோத்குமாருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.பின்னர் கோரிமேடு பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வினோத்குமார் சென்றுவிட்டார்.ஜீவிதா அவரது பெற்றோர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார், பின்னர் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் வினோத்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அருகில் விஷ பாட்டில் இருந்துள்ளது.உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வினோத்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த தகவலின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×