search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
    X

    சேலத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

    • சேலத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • கார் டிரைவராக பணிபுரிந்து வந்த வாலிபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அழகாபுரம் ஏடிசி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38) இவருக்கு ஜீவிதா (வயது 34) என்ற மனைவி உள்ளார்.வினோத்குமார் சேலம் போக்சோ கோர்ட் நீதிபதியின் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த வினோத்குமாருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.பின்னர் கோரிமேடு பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வினோத்குமார் சென்றுவிட்டார்.ஜீவிதா அவரது பெற்றோர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார், பின்னர் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் வினோத்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அருகில் விஷ பாட்டில் இருந்துள்ளது.உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வினோத்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த தகவலின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×