என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கார் டிரைவர் தற்கொலை
- மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் தாய் இறந்து போனதால் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- திருமணமாகி அவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்
புதுச்சேரி:
மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் தாய் இறந்து போனதால் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்திமுருகன் (வயது54). கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி அவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் சக்திமுருகன் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சக்தி முருகனின் தாயார் கடந்த ஆண்டு இறந்து விட்டார். ஏற்கனவே மனைவி பிரிந்து சென்று விட்ட வேதனையில் இருந்த சக்திமுருகன் தாய் இறந்து போனது பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக எண்ணி மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இதனை மறக்க தினமும் சக்திமுருகன் மது குடித்து வந்தார். ஆனாலும் தாயின் மரணத்தால் சக்திமுருகன் விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சக்திமுருகன் வீட்டில் தாயின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது சகோதரர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்