என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Captain"
- இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
- இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
கேப்டன் போஸ்டர்
"கேப்டன்" திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் "கைலா" பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் யாசின் நிஷார் பாடியுள்ளனர்.
The wave of love and magic coming your way. #Kylaa in @shreyaghoshal & #YazinNizar voices releases tomorrow at 5PM! 💕🎵@arya_offl @ShaktiRajan @Udhaystalin @SimranbaggaOffc #AishwaryaLekshmi @immancomposer @madhankarky @ThinkStudiosInd #TheShowPeople @thinkmusicindia pic.twitter.com/ZxKmdZnZl8
— Red Giant Movies (@RedGiantMovies_) August 10, 2022
- இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
- இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன்
இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது.
இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் ஆர்யா நடிப்பைத் தாண்டி சைக்கிளிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் லண்டனில் நடைபெறவுள்ள சைக்கிள் போட்டியில் ஆர்யா தனது குழுவினருடன் கலந்து கொள்ளவுள்ளார்.
சூர்யா - ஆர்யா
இந்நிலையில் ஆர்யா அணியின் ஜெர்ஸியை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இதனை ஆர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
I am so grateful @Suriya_offl sir for unveiling our team jersey #LEL2022 🤗🤗Thank you so much for your encouragement ,love and support for our #Ryders team as always 😍🤗@BoomCarsChennai @GoedTravels #Heini #Ryders @madraspf pic.twitter.com/QfIERwBMUE
— Arya (@arya_offl) August 4, 2022
- இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
- இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது.
கேப்டன் போஸ்டர்
இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 'கேப்டன்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஜூலை 25-ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
#CaptainFirstSingle releasing on July 25th at 7PM! 👏🥁@arya_offl @ShaktiRajan @Udhaystalin @SimranbaggaOffc #AishwaryaLekshmi @immancomposer @madhankarky @tkishore555 @ThinkStudiosInd #TheShowPeople @thinkmusicindia pic.twitter.com/n1Vy1jOaiI
— Red Giant Movies (@RedGiantMovies_) July 23, 2022
- டெடி படத்தைத் தொடர்ந்து சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகும் படம் கேப்டன்.
- இந்த படத்தில் டி இமானுடன் பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளார்.
நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக்டிக்டிக், டெடி போன்ற படங்களை இயக்கிய சக்திசவுந்தர ராஜன் தற்போது இயக்கியுள்ள படம் 'கேப்டன்'. ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், காவ்யா ஷெட்டி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்கிறார். டி. இமான் இசையமைக்கிறார். 'கேப்டன்' திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில்,'கேப்டன்' திரைப்படத்திற்காக மதன் கார்க்கி எழுதியுள்ள மெலோடி பாடல் ஒன்றை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்று டி.இமான் தனது சமுக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை:
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது இந்திய அணி கேப்டன் வீராட்கோலியை விமர்சனம் செய்து இருந்தார்.
அவர் கூறும்போது, கோலி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வில்லை. ஆனால் அவர் பெங்களூர் அணி கேப்டனாக நீடிப்பது அதிர்ஷ்டம் தான். இதற்காக அவர் அணி நிர்வாகத்துக்கு நன்றி கடன்பட்டுள்ளார் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் காம்பீர் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீராட்கோலி அளித்த பேட்டி வருமாறு:-
ஐ.பி.எல். கோப்பையை வெல்லவில்லை என்பது எனக்கு ஏதோ வெறுப்பை தருகிறது என்று கூறுவது தவறு. நிச்சயம் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே விருப்பம். நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ அதை செய்கிறேன்.
ஐ.பி.எல். கோப்பையை வெல்வது அல்லது வெல்வதில்லை என்பதை வைத்து என்னை எடைபோட்டால் அதுபற்றி கவலையில்லை. அளவு கோல்களை யாரும் நிர்ணயிக்க முடியாது.
எனது வேலை சிறப்பாக ஆடுவது தான். எல்லா கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பல நேரங்களில் அது நடப்பதில்லை.
நாங்கள் ஏன் வெல்லவில்லை என்பதை எதார்த்தமாக யோசித்து பார்க்க வேண்டும். எனக்கு கேப்டன் என்ற பொறுப்பு உள்ளது. ஐ.பி.எல். கோப்பையை வெல்வது எனக்கு பிடித்தமானது தான். அதை சாதிக்க இந்த விமர்சனங்கள் உதவினால் நல்லது.
நாங்கள் 5 அரை இறுதி ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். நாங்களும் கோப்பைக்கு அருகில் வந்துள்ளோம். கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி தான். நல்ல முடிவுகளை எடுத்தால் அதனை தாண்டியும் செல்லலாம் என்றார். #kohli #Gambhircomment
முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி வருகிற 2-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில் நடைபெறுகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியிலும் உள்நாட்டு வீரர்களுடன் 2 வெளிநாட்டினரும் இடம் பெறுவார்கள்.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பிப்ரவரி 2-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கிலும், பிப்ரவரி 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 லீக் ஆட்டம் மற்றும் அரையிறுதி, இறுதிப்போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கிலும் அரங்கேறுகிறது. தினசரி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி 1, சோனி 2 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
ஒவ்வொரு ஆட்டமும் 5 செட்கள் கொண்டதாகும். முதலில் 15 புள்ளியை எட்டும் அணி செட்டை வெல்லும். 5-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு மொத்தம் 3 வெற்றி புள்ளிகள் கிடைக்கும். தோல்வி அடையும் அணிக்கு புள்ளி எதுவும் கிடைக்காது. 3-2 மற்றும் 4-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு 2 வெற்றி புள்ளிகள் மட்டுமே கிட்டும்.
புரோ கைப்பந்து லீக் போட்டிக்கான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கடந்த 12-ந் தேதி முதல் ஐ.சி.எப். உள்விளையாட்டு அரங்கில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. போட்டி குறித்து சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷெல்டன் மோசஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
புரோ கைப்பந்து லீக் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது. போகப்போக இந்த போட்டி மக்களை நிச்சயம் வெகுவாக கவரும். இந்த போட்டியின் மூலம் பல இளைஞர்கள் கைப்பந்து ஆட்டத்தில் ஈடுபட முற்படுவார்கள். இதுபோன்ற போட்டிகளில் பண பலன் கிடைப்பதால் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கைப்பந்து ஆட்டத்தில் களம் இறக்க ஆர்வம் காட்டுவார்கள். வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து ஆடுவதன் மூலம் நமது வீரர்கள் நல்ல ஆட்ட அனுபவத்தை பெற முடியும். இதன் மூலம் இந்திய கைப்பந்து அணியின் தரம் உயரும். இது இந்திய அணி சர்வதேச போட்டிகளில் வெற்றி வாகை சூட வழிவகுக்கும். போட்டி முழுவதும் டெலிவிஷனில் ஒளிபரப்பப்படுவதால் வீரர்கள் பிரபலம் அடைவதுடன் அவர்களின் வாழ்க்கை ஸ்டைலும் மாறும்.
போட்டியில் பல விதிமுறை மாற்றம் செய்து இருப்பதன் மூலம் இந்த லீக் போட்டி 20 ஓவர் கிரிக்கெட் போல் விறுவிறுப்பாக இருக்கும். போட்டியில் பங்கேற்கும் 6 அணிகளும் சமபலம் வாய்ந்தவை தான். எனவே போட்டி தினத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ? அந்த அணி வெற்றி பெறும். சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியில் நவின் ராஜா ஜேக்கப், ஒலிம்பிக் போட்டியில் ஆடிய கனடாவை சேர்ந்த ரூடி, லாத்வியாவை சேர்ந்த ருஸ்லான் மற்றும் கபில்தேவ், அக்கின் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். செர்வ், அட்டாக்கிங் உள்பட எல்லா துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எனவே இந்த போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு ஷெல்டன் மோசஸ் கூறினார். #ProVolleyballLeague
ரோகித்சர்மா கேப்டன் பொறுப்பில் இந்திய அணி இதுவரை 20 ஓவரில் 11 ஆட்டத்தில் விளையாடி உள்ளது. இதில் 10-ல் வெற்றி பெற்றது. 1 ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. இதன்மூலம் மைக்கேல் கிளார்க், சோயிப் மாலிக்கை அவர் முந்தி சாதனை புரிந்தார்.
20 ஓவர் போட்டியில் 2 முறை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஏற்கனவே 2017 டிசம்பரில் இலங்கைக்கு எதிராக அவரது தலைமையிலான அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-வது முறையாக ஒயிட்வாஷ் செய்துள்ளது.
ரோகித்சர்மா நேற்று 4 ரன்னில்ஆட்டம் இழந்தார். பவுண்டரி மூலம் இந்த ரன்னை அவர் எடுத்தார். 20 ஓவர் சர்வதேச போட்டியில் அவரது 200-வது பவுண்டரியாகும். 200 பவுண்டரி அடித்த 2-வது இந்தியர் ரோகித்சர்மா ஆவார். விராட்கோலி 214 பவுண்டரி அடித்துள்ளார்.
தில்சான் (இலங்கை) 223 பவுண்டரியுடன் முதல் இடத்திலும், முகமது ஷேசாத் (ஆப்கானிஸ்தான்) 218 பவுண்டரியுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். கோலி 3-வது இடத்திலும், குப்திலும், ரோகித்சர்மாவும் இணைந்து 4-வது இடத்திலும் உள்ளனர்.
நேற்றைய ஆட்டத்தில் தவான் 92 ரன்கள் எடுத்து முத்திரை பதித்தார். 20 ஓவர் போட்டியில் அவரது அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக கடந்த ஆண்டு 90 ரன் எடுத்து இருந்தார். ரிசப்பண்ட் 20 ஓவரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். #RohitSharma #INDvWI
14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 16-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் கலந்து கொள்ளும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 2-வது மற்றும் 3 இடத்தை பிடிக்கும் அணிகள் மற்ற பிரிவில் 2-வது அல்லது 3-வது இடம் பிடித்த அணியுடன் ஒரு ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். இந்திய அணி ‘சி’ பிரிவில் பெல்ஜியம், கனடா, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் அங்கம் வகிக்கிறது.
உலக கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இந்த பயிற்சி முகாமில் 34 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் இருந்து 18 பேர் கொண்ட இந்திய அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து விலகிய சுனில், சீனியர் வீரர் ரூபிந்தர் பால்சிங் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணி வருமாறு:- கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதூர் பதாக், பின்களம்: ஹர்மன்பிரீத் சிங், பிரேந்திர லக்ரா, வருண்குமார், கோதாஜித் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங் (துணை கேப்டன்), நீலகண்ட ஷர்மா, ஹர்திக் சிங், சுமித், முன்களம்: ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், தில்பிரீத் சிங், லலித்குமார் உபாத்யாய், சிம்ரன்ஜீத் சிங்.
அணி தேர்வு குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறுகையில் ‘உலக கோப்பை போட்டிக்கு சரியான கலவையிலான சிறந்த அணியை தேர்வு செய்துள்ளோம். அணி தேர்வில் சில கடினமாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 18 பேர் கொண்ட இறுதி அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நடப்பு பார்ம் மற்றும் உடல் தகுதியின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தொடர்ந்து தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். உலக கோப்பை போட்டியிலும் நமது அணி சிறப்பாக செயல்படும்’ என்றார்.
தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குலோத்துங்கன் (வயது 40). கால்பந்து வீரரான இவர் தமிழக கால்பந்து அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையில் தமிழக அணி சந்தோஷ் கோப்பை போட்டியில் பங்கேற்று இருக்கிறது.
குலோத்துங்கன், நேற்று முன்தினம் இரவு தஞ்சை கிட்டு கால்பந்து மைதானத்தில் நடந்த ஐவர் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடிவிட்டு பின்னர் வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை திருச்சி செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
அதிகாலை 2 மணி அளவில் தஞ்சை- வல்லம் இடையே ஆலக்குடி பைபாஸ் சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மோட்டார்சைக்கிள் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் இருந்த இரும்புகம்பி மீது மோதியது. இதில் கீழே விழுந்த குலோத்துங்கன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் இருந்து உருவான மிகச் சிறந்த கால்பந்து வீரரான குலோத்துங்கன், மேற்கு வங்காளத்தில் பிரபலமான மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், முகம்மதன் ஸ்போர்ட்டிங் ஆகிய கிளப்புகளுக்காக விளையாடி இருக்கிறார். 2003-ம் ஆண்டு ஆசிய கிளப் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஈஸ்ட்பெங்கால் வென்ற போது அந்த அணியில் குலோத்துங்கனும் இடம் பிடித்திருந்தார்.
இதே போல் மும்பை சிட்டி எப்.சி., விவா கேரளா, பவானிபோர் எப்.சி. ஆகிய கிளப்புகளுக்காகவும் ஆடியிருக்கிறார். சிறந்த நடுகள வீரரான குலோத்துங்கன் கோல் அடிப்பதிலும், கோல் வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதிலும் கைதேர்ந்தவர்.
அவரது மறைவுக்கு கால்பந்து பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘குலோத்துங்கனின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என்னுடன் இணைந்து விளையாடிய சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர்’ என்று குறிப்பிட்டுள்ளார். #FootballCaptain #tamilnadu #Kulothungan #tamilnews
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தெலுங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த இவர் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் 2014-ம் ஆண்டு தேர்தலில் ராஜஸ்தானின் டோங்-சவாய் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலத்தின் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அசாருதீன் தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
செகந்திராபாத் தொகுதி மக்களுக்கு பணி செய்ய விரும்புகிறேன். இந்த தொகுதியில் நான் கடினமாக உழைத்து வருகிறேன். இங்குள்ள ஏராளமான கிராமங்களுக்கு சென்று விவசாயிகள் மற்றும் பிற மக்களிடம் பேசினேன். அப்போது அவர்கள், தங்கள் தொகுதியில் நான் போட்டியிடுவதை வரவேற்றனர்.
இந்த தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி தலைமையிடமும், மாநில பொறுப்பாளரிடமும் எனது விருப்பத்தை தெரிவித்துள்ளேன். நான் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவதையே கட்சியும் விரும்புவதாக நினைக்கிறேன். எனினும் இங்கு நான் கேப்டன் இல்லை. இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது கட்சிதான்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த முறை போட்டியிட்ட போதும் வெற்றிக்காக கடுமையாக உழைத்தேன். ஆனால் எப்போதும் உங்களால் பாதுகாப்பாக விளையாட முடியாது. எப்போதும் பாதுகாப்பான விளையாட்டை விரும்பும் நபர் நான் இல்லை.
இவ்வாறு அசாருதீன் கூறினார்.
முன்னதாக, தெலுங்கானாவில் இருந்து பாராளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தலில் அசாருதீன் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநிலப்பிரிவு அவருக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது. #MohammadAzharuddin #IndianCricketCaptain #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்