search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus Stand"

    • மேம்பாலம் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைஅடிவாரம் வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது.
    • திருப்பதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கிறோம்.

    திருப்பதி:

    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக அளவில் வாகனங்கள் வருவதால் நகரப் பகுதியில் குறிப்பாக பஸ் நிலையத்தில் இருந்து மலை அடிவாரம் வரை நெரிசல் ஏற்படுகிறது.

    இதனை தடுக்க திருப்பதி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.650 கோடி செலவில் ஸ்ரீனிவாச சேது என்ற பெயரில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டன. அதன் பிறகு ஆட்சி மாறியதும் மறு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியது.

    தற்போது ரூ.650 கோடி செலவில் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட உள்ளது. இதனை ஆந்திர முதல்- அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மாலை திறந்து வைக்கிறார்.

    நாளை முதல் பொதுமக்கள் மேம்பாலத்தை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர். திருப்பதி பஸ் நிலையத்தில் தொடங்கும் இந்த மேம்பாலம் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைஅடிவாரம் வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    இதன் மூலம் பக்தர்கள் எளிதில் கோவிலுக்கு சென்று வரலாம் இது குறித்து திருப்பதி மாநகராட்சி மேயர் சிரிஷா கூறுகையில்

    தினமும் ஒரு லட்சம் பக்தர்களும் உள்ளூர்வாசிகளும் இந்த மேம்பாலத்தை பயன்படுத்த உள்ளனர். இதன் மூலம் திருப்பதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கிறோம்.

    இந்த மேம்பாலம் திருப்பதி நகருக்கே பெருமையை தேடி தரப் போகிறது என்றார். 

    • போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பொதுமக்கள் அவதிபடுவதாகவும் கூறப்படுகிறது.
    • பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்திற்குள் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பொதுமக்கள் அவதிபடுவதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஓட்டுநர்கள் கூறியதாவது:- பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் அதிக அளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும். இந்த நிலையில் திங்கட்கிழமை பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை, நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது.

    எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர்.

    பல்லடம், ஆக.22-

    பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் இரவு மற்றும் காலை நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் பஸ் நிலையத்தின் முன்பு ரோட்டில் இறக்கி விடப்படுவதால் பயணிகள் அவதிபடுகின்றனர். இதனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:- இரவு மற்றும் காலை நேரங்களில், திருச்சி, மதுரை போன்ற வெளியூர் செல்லும் பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை.

    பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர். இது ஒரு புறம் பயணிகளுக்கு வீண் அலைச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.

    • மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
    • முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா சத்யநாராயணன் நன்றி கூறினார்.

    கூடுவாஞ்சேரி:

    வண்டலூர் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பிரதான சாலையை ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கவும், வண்டலூர்- வாலாஜாபாத் நோக்கி செல்லும் மேம்பாலம் கீழ்பகுதியில் காஞ்சிபுரம் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைப்ப தற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா காட்டாங் கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான வி.எஸ்.ஆராமுதன் தலைமையில் நடைபெற்றது. வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி விஜயராஜ், தி.மு.க. கிளை செயலாளர்கள் சத்ய நாராயணன், வாசு, காசி, லோகநாதன், குணசேகரன், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் செல்வம் எம்.பி., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக பூமி பூஜை போட்டு, அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினர்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ட ராகவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கெஜலட்சுமி சண்முகம், நெடுங்குன்றம் வனிதா ஸ்ரீசீனிவாசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வண்டலூர் குணசேகரன், காரணைப் புதுச்சேரி பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா சத்யநாராயணன் நன்றி கூறினார்.

    • மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது.
    • ஆம்னி பஸ் நிலையமும் சீரமைக்கப்படுகிறது.

    மதுரை

    மதுரை மட்டுமல்லாது தென் தமிழகத்தின் முக்கிய பஸ் நிலையமாகவும், சந்திப்பு மையமாகவும் மாட்டுத்தாவணி ஒருங்கி ணைந்த எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த பஸ் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

    மதுரை நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், 3 இடங்களில் செயல்பட்டு வந்த பேருந்து முனையங்களுக்கு மாற்றாக மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மதுரை மாநராட்சி சார்பில் ரூ.10 கோடி செலவில், சுமார் 10 ஏக்கர் பரப்பில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 1999-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது ஐஎஸ்ஓ 9001:2000 தரச் சான்று பெற்ற பஸ் நிலையமாகும்.

    தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது எட்டு பகுதிகளாக இந்த பஸ் நிலையம் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் தடத்தில் சென்னை, கடலூர், நெய்வேலி , சிதம்பரம், பெங்களூரு, மைசூர், திருப்பதி, எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பிற மாநிலங்களுக்கான பஸ்களும், 2-வது தடத்தில் திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர், 3-வது தடத்தில் சிவகங்கை, தோண்டி, கொட்டைபட்டினம், தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கர்நாடக பஸ்களும், 4-வது தடத்தில் காரைக்குடி, வேதாரண்யம், வேளாங்கண்ணி, தேவகோட்டை, மேலூர், அறந்தாங்கி, பட்டுகோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புணரி பஸ்களும், 5-வது தடத்தில் ராமநாதபுரம், ஏர்வாடி, ராமேஸ்வரம், பரமக்குடி, சாயல்குடி, கமுதி, கீழக்கரை பஸ்களும், 6-வது தடத்தில் ராசபாளையம், தென்காசி, செங்கோட்டை, ஸ்ரீவில்லி புத்தூர், சங்கரன்கோவில், பாபநாசம் மற்றும் கடைய நல்லூர் பஸ்களும், 7-வது தடத்தில் அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மற்றும் விளாத்திகுளம் பஸ்களும், 8-வது தடத்தில் திருநெல் வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கோவில்பட்டி, களியக்காவிளை, வள்ளியூர் மற்றும் கேரள மாநில பஸ்களும் இயக்கப்படு கின்றன.

    போலீஸ் அவுட் போஸ்ட், தாய்மார்கள் ஓய்வறை, டிக்கெட் முன்பதிவு மையங்களும் இங்கு உள்ளது.

    தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதையடுத்து ஆம்னி பஸ்களுக்கென 2014-ம் ஆண்டு தனி பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து சென்னை, பெங்களூர், திருப்பதி, மங்களூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும், முக்கிய நகரங்களுக்கும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் தற்போதைய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 24 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த நிலையில் பஸ் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு சேத மைடந்து அடிக்கடி உதிர தொடங்கியது. இதனால் பயணிகளுக்கும், வியாபாரி களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. தாய்மார்கள் ஓய்வறை பராமரிப்பின்றி இருந்ததால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்க தொடங்கினர்.

    மேலும் கழிவறைகள் பழுதடைந்து காணப்பட்டன.இதையடுத்து பஸ் நிலையத்தை முழுமையாக புனரமைப்பு செய்ய திட்ட மிடப்பட்டது. பயணி களுக்கான இருக்கைகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, கழிவறை, வாகன நிறுத்துமிட வசதிகளை மேம்படுத்தவும் மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் புதுப்பிப்பு, ஆம்னி பஸ் நிலையம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக டெண்டர் விடும் பணிகளை மாநகராட்சி ெதாடங்கி உள்ளது. டெண்டர் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்ற னர்.

    சேதமடைந்த மேற்கூரை கள், பைப் லைன்கள், மின் இணைப்புகளை முழுமை யாக புனரமைப்பு செய்ய வும், காத்திருப்போர் மற்றும் பயணிகள் அமருவதற்கான வசதிகளை மேம்படுத்தவும், சுகாதார வசதிகளை மேம்படுத்தவும், தாய்மார் கள் பாலூட்டும் அறையை முழுமையாக புதுப்பிக்கவும், பஸ் நிலையத்திற்குள்ள ரோடுகளை செப்பனிட்டு சீரமைக்கவும் திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பஸ்நிலைய நிழற்குடைகள் அகற்றப்பட்டு சாலையோரத்தில் ஒரு சிறிய இடம் மட்டுமே பஸ்சுக்காக காத்திருக்கும் இடமாக மாறி உள்ளன.
    • தேவையான முன்னேற்பாடுகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி 116.1 கிலோமீட்டர் நீளத்திற்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீட்டர், சென்னை கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி பணிமனை வரை26.1 கி.மீட்டர், மாதவரம்- சோழிங்க நல்லூர் வரை 44.6 கி.மீட்டர் தூரத்திற்கு பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகின்றன. சுரங்கம் தோண்டும் பணியும் நடந்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் பணிக்காக பல்வேறு இடங்களில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்கு வரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் மெட்ரோ ரெயில் பணி காரணமாக பல்வேறு பகுதிகளில் பஸ் நிறுத்தங்களில் பயணிகளின் தலைக்கு மேல் உள்ள நிழற்கூரை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    ராயப்பேட்டை, வளசரவாக்கம், விருகம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள பஸ்நிலைய நிழற்குடைகள் அகற்றப் பட்டு சாலையோரத்தில் ஒரு சிறிய இடம் மட்டுமே பஸ்சுக்காக காத்திருக்கும் இடமாக மாறி உள்ளன.

    போரூர் முதல் வடபழனி வரை ஆற்காடு சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத தூண்கள் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இதனால் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு ஆற்காடு சாலை ஆங்காங்கே குறுகிய நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    போரூர் தொடங்கி காரம்பாக்கம், லட்சுமி நகர், வளசரவாக்கம், கேசவர்த்தினி, விருகம்பாக்கம், ஆவிச்சி பள்ளி, வடபழனி பஸ் நிலையம் என அடுத்தடுத்து ஆற்காடு சாலையில் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில் வளசரவாக்கம் மற்றும் ஆழ்வார்திருநகர் ஆகிய இடங்களில் இருந்த பஸ் நிறுத்தம் மெட்ரோ ரெயில் பணிக்காக அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அருகில் தற்காலிக பஸ் நிறுத்தம் என்ற பெயரில் பயணிகள் அமர்வதற்கு கூட வசதி இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். பாதுகாப்பு கேள்விக்குறி

    கடந்த மாதம் மழை பெய்த போது பயணிகள் கடும் இன்னல்களை சந்தித்தனர். சாலையோரம் பயணிகள் நிற்கும் இடம் மிகவும் குறுகி உள்ளதால் பஸ்சுக்கு காத்து நிற்கும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

    மேலும் ஆற்காடு சாலையில் உள்ள மற்ற பஸ் நிறுத்தங்களிலும் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்று வதற்கும் பயணிகள் இறங்கி செல்வதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி அருகே பஸ்நிலைய மேற்கூரை இல்லாததால் பயணிகள் மழையின் போது அருகில் உள்ள மரத்தடியில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. தற்போது வெயிலில் தவித்து வருகிறார்கள்.

    புரசைவாக்கம் கெல்லீஸ் சந்திப்பு பகுதியில் மெட்ரோ ரெயில் பணிக்காக ஏற்கனவே போக்குவரத்து மாற்றி விடப்பட்டு உள்ளது. அயனாவரத்தில் இருந்து புரசைவாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் பால்பர் சாலை வழியாக சுற்றி சென்று வருகின்றன. இதனால் எப்போதும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தற்போது கெல்லீஸ் சந்திப்பு பகுதியில் நடுரோட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் புரசைவாக்கத்தில் இருந்து கெல்லீஸ் நோக்கி ஒருவழிப்பாதையில் வரும் வாகனங்களுக்கு அமைக்கப்பட்ட சாலை குண்டும்,குழியுமாக மாறி உள்ளன. சீரமைக்கப்படாத இந்த சாலையில் வாகனங்கள் செல்லவே தடுமாறி வருகின்றன. மேலும் அங்குள்ள பஸ்நிறுத்தமும் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    எனவே மெட்ரோ ரெயில் பணியின் போது போக்குவரத்துக்கும், பஸ் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான முன்னேற்பாடுகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • முக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
    • 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

    முக்கூடல்:

    முக்கூடல் பேரூராட்சிக்கு ட்பட்ட பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்ப ட்டுள்ளது. இந்த மின்விளக்கு திறப்புவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.

    ஆனால் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனு அளித்தும் பதில் இல்லை. வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்பும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது.

    இந்நிலையில் நேற்று உயர் மின்கோபுரத்திற்கு முன்பாக அரிக்கேன் விளக்கு மற்றும் ஒளி விளக்குகளை ஏற்றி வைத்து பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் முக்கூடல் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் வேன் ஸ்டாண்ட் ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி அளவிலான காற்று மாசுபாடு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தை ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் மாசு கட்டுபாடு வாரியம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றுத்துறை, மாநகராட்சி மற்றும் தேசிய தூய்மை காற்று திட்டம் ஆகியோர் இணைந்து நடத்திய தூத்துக்குடி மாநகராட்சி அளவிலான காற்று மாசுபாடு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். இதில் கமிஷனர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா, துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படும் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தை மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், தற்பொழுது நடைபெற்று வரும் பணிகளானது நிறைவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி திறக்கப்படும் என்று கூறினார். ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் புழுதி பறக்கும் பழைய பஸ் நிலையத்தால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
    • இதனால் பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ்ஸ்டாண்டிலிருந்து வெளி மாவட்டங்கள், உள் ளூர் பகுதிகளுக்கு தினமும் 300-க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற் பட்ட பயணிகள் வந்து சென்றனர். தற்போது ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டா ண்ட் வாரச்சந்தை திடல் வரை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது.

    ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணியால் தற்போது சந்தை திடல், பழைய பஸ் ஸ்டா ண்ட் ஆகிய இடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு குவிந்துள்ள மண லால் காற்றில் புழுதி பறந்து மூச்சுவிட முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்ற னர். இலவச கழிப்பறை, குடிநீர் வசதியின்றி பயணி கள் சிரமப்படுகின்றனர்.

    கட்டண கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப் பதாகவும் புகார் எழுந் துள்ளது. இதையடுத்து சந்தை திடல் வளாகம், பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்விடங்களில் மண் அதி களவில் குவிந்துள்ளதால் காற்றில் புழுதி பறந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக் கிறது.

    இதனால் பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் டூவீலர்களை கண்டபடி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் நிறுத்துவதால் பஸ்கள் வெளியே செல்வதில் சிக் கல் ஏற்படுகிறது.

    சந்தை திடல், பழை பஸ் ஸ்டாண்டில் புழுதி பறக்காத வகையில் தரைத்தளத்தை செப்பனிட வேண்டும். இலவச கழிப்பறை, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். பிற வாகனங்கள் உள்ளே வந்து செல்வதற்கு தடை விதிக்கவும் நகராட்சி, போலீ சார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர்.

    • அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
    • மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே சேந்தநாடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இதனையடுத்து இன்று காலை பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் உடலை பார்த்து இதுகுறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்கள் வரும் நேரத்தை காண்பிப்பது பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.
    • பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் அறிவிப்புகள் வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ்கள் எந்தெந்த பஸ் நிறுத்தத்துக்கு எப்போது வரும். அங்கிருந்து எப்போது புறப்படும் என்ற தகவலை வழங்குவதற்காக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இந்த தகவல்களை செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள 7 போக்குவரத்து கழகங்கள் டெண்டர் விட்டுள்ளன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி, சேலம், கோவை, மதுரை ஆகிய 7 போக்குவரத்து கழகங்களில் பஸ் நிறுத்தத்துக்கு பஸ்கள் வரும் நேரம், அங்கிருந்து புறப்படும் நேரம் ஆகியவை செல்போன் செயலி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்ப டும். இது அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள், பஸ் வழித் தடங்களில் பஸ்களின் வருகை, புறப்படும் நேரம் பற்றிய தற்போதைய போக்குவரத்து தகவல்களை வழங்கும்.

    இந்த டெண்டரில் 7 போக்குவரத்து கழகங்களுக்கான வடிவமைப்பு, மேம்பாடு, செயல்படுத்தும், ஒருங்கிணைப்பு, வாகன திட்டமிடல் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

    இந்த வசதி 2213 புதிய டீசல் பஸ்கள், 500 மின்சார பஸ்களில் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பஸ்களின் வருகை, புறப்பாடு குறித்த தகவல் அமைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். பஸ்கள் வரும் நேரத்தை காண்பிப்பது பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.

    மேலும் பஸ்கள் வரும்போது பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் அறிவிப்புகள் வழங்க வேண்டும் என்றனர்.

    • மாடுகள் பஸ் நிலையத்தில் சாணத்தை இட்டு செல்வதால், பயணிகள் அவதியடைந்தனர்.
    • தினமும் பஸ் நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஊட்டி,

    நெல்லியாளம் நகராட்சியின் பந்தலூர் பஸ் நிலையத்துக்கு தினமும் பந்தலூர், உப்பட்டி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, சேரம்பாடி, தாளூர், பாட்டவயல் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் கூடலூரில் இருந்து, பந்தலூர் பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றன.

    இங்கு தினமும் ஏராளமான மாடுகள் இரவு முழுவதும் பஸ் நிலையத்தில் ஓய்வு எடுத்து, சாணத்தை இட்டு செல்வதால், பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். போதிய பாதுகாப்பு, பராமரிப்பு இல்லாததால், மாடுகள் சுற்றி வருகின்றன.

    எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்துக்குள் மாடுகள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஜார்பகுதி, பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு நெல்லியாளம் நகராட்சி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் பஸ் நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×