search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் பிணம்"

    • புதிய பஸ் நிலைய பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
    • இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளப்பட்டி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளப்பட்டி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பாரதிபுரம் பாண்டி கோவில் அருகே செங்குளம் உள்ளது. இந்த குளத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் குளத்தில் மிதந்த பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.கைப்பற்றப்பட்ட உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அழகு பாண்டி வழக்குப்பதிவு செய்து முதியவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    • மேம்பாலம் அருகில் ரெயில்வே பாதையில் முதியவரின் பிணம் கிடந்தது.
    • தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் ரெயில்வே மேம்பாலம் அருகில் ரெயில்வே பாதையில் முதியவரின் பிணம் கிடந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த தகவலின்படி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தவருக்கு சுமார் 60 வயது இருக்குமென போலீசார் தெரிவித்தனர்.

    மேலும், இறந்து கிடந்தவரின் சட்டை பையில் இருந்த ஆதார் கார்டில் சிவாஜி, மன்னார்சாமி தெரு, வசந்தபுரம், திண்டிவனம் என்று உள்ளதாக ரெயில்வே போலீசார் கூறினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்து போனவர் மேற்கண்ட விலாசத்தை சேர்ந்தவரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு ரெயில்வே பாதையில் வீசப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
    • மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே சேந்தநாடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இதனையடுத்து இன்று காலை பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் உடலை பார்த்து இதுகுறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 ரோடு பகுதியில் கடந்த 19-ந் தேதி, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார்.
    • பள்ளப் பட்டி போலீசார், முதியவர் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் 4 ரோடு பகுதியில் கடந்த 19-ந் தேதி, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளப் பட்டி போலீசார், முதியவர் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில், அந்த முதியவர் 4 ரோடு பகுதியில் பிச்சை எடுத்து கொண்டிருந்ததும், உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் இறந்தது தெரிய வந்தது. ஆனால், இவரது பெயர், முகவரி தெரியாத நிலை யில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • யார் அவர்? போலீசார் விசாரணை
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே உள்ள பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் சாலையோரமாக சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார்.

    அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    அவர் சுமார் 5 அடி உயரம் இருக்கிறார். கருப்பு நிறம் வேட்டியும் சட்டையும் அணிந்து உள்ளார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிணம் ஒன்று கிடந்தது.
    • இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கொத்தூர் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் மாரனபள்ளி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷூக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர் அங்கு விரைந்து வந்து முதியவரின் உடலை பார்வையிட்டார். இதுகுறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக பிணமாக கிடந்தவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி மோகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே புதுப்பட்டி சடையம்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

    • ஆரணி ஆற்றின் முகத்துவார பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
    • திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு, குளத்து மேடு ஆரணி ஆற்றின் முகத்துவார பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர்யார்? எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 55 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார்.
    • இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் பூமலூர் ஊராட்சி சரஸ்வதி கார்டன் அருகே உள்ள பள்ளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார். பின்னர் அவ்வழியாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிலர் இதனை பார்த்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல் மற்றும் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பூமலூர் கிராம நிர்வாக அதிகாரி மங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த நபர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலாற்றில் முதியவரின் பிணம் மிதப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருக்கழுக்குன்றம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 71). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இந்த நிலையில் இரும்புலிச்சேரி எடையாத்தூர் பாலாற்றில் முதியவரின் பிணம் மிதப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர் மாயமான சந்திரன் என்பது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×