என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரும்புலிச்சேரி பாலாற்றில் முதியவர் பிணம்
- பாலாற்றில் முதியவரின் பிணம் மிதப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 71). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் இரும்புலிச்சேரி எடையாத்தூர் பாலாற்றில் முதியவரின் பிணம் மிதப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர் மாயமான சந்திரன் என்பது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






