கடலூரில் அருகே கெடிலம் ஆற்றில் முதியவர் பிணம்

ஆற்றில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் இறந்த நிலையில் நீரில் மிதந்து வந்தது.உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூரில் அருகே கெடிலம் ஆற்றில் முதியவர் பிணம்
Published on

கடலூர்:

கடலூரில் அருகே திருவந்திபுரத்தில் கெடிலம் ஆறு உள்ளது. இன்று காலை இந்த ஆற்றில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் இறந்த நிலையில் நீரில் மிதந்து வந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மிதந்து வந்த மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com