என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாட்டு தொழுவமாக மாறிய பந்தலூர் பஸ் நிலையம்
- மாடுகள் பஸ் நிலையத்தில் சாணத்தை இட்டு செல்வதால், பயணிகள் அவதியடைந்தனர்.
- தினமும் பஸ் நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊட்டி,
நெல்லியாளம் நகராட்சியின் பந்தலூர் பஸ் நிலையத்துக்கு தினமும் பந்தலூர், உப்பட்டி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, சேரம்பாடி, தாளூர், பாட்டவயல் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் கூடலூரில் இருந்து, பந்தலூர் பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றன.
இங்கு தினமும் ஏராளமான மாடுகள் இரவு முழுவதும் பஸ் நிலையத்தில் ஓய்வு எடுத்து, சாணத்தை இட்டு செல்வதால், பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். போதிய பாதுகாப்பு, பராமரிப்பு இல்லாததால், மாடுகள் சுற்றி வருகின்றன.
எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்துக்குள் மாடுகள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஜார்பகுதி, பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு நெல்லியாளம் நகராட்சி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் பஸ் நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்