என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "boy death"
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த நல்லூர், கலைஞர் நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் சோனியா, மகன் ஜெயசீலன் (வயது 13). இன்று காலை ஜெயசீலன் மோட்டார் சைக்கிளில் அக்காள் சோனியாவை ஏற்றிக் கொண்டு வந்தார்.
வடகரை ஊராட்சி அலுவலகம் அருகே வந்த போது மாதவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கிசென்ற எண்ணை டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயசீலன் பலியானார். சோனியா லேசான காயத்துடன் தப்பினார். மாதவரம் போக்குவரத்து போலீசார் லாரி டிரைவர் முருகானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் அருண்கோயில். இவரது மகன் ஆதித்யா (9). நேற்று விடுமுறை நாள் என்பதால் அருண்கோயில் அவரது மனைவி ஆகியோர் ஆதித்யாவையும் அழைத்துக் கொண்டு தி.நகருக்கு பொருட்கள் வாங்க வந்தனர்.
பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி செல்வதற்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலுக்காக காத்திருந்தனர். அப்போது சிறுவன் ஆதித்யா பிளாட் பாரத்தில் அங்கும் இங்கும் ஓடியபடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மின்சார ரெயில் வந்ததை கவனிக்காமல் தவறி விழுந்தான். இதில் ரெயிலில் அடிபட்டு உடல் நசுங்கி இறந்தான்.
தங்கள் கண் முன்னாலேயே மகன் இறந்ததை பார்த்து அருண் கோயிலும், அவரது மனைவியும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
தகவல் அறிந்ததும் எழும்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பாரதிநகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. தையல் தொழிலாளி. இவரது மகன் சுடலை. இவர் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். சுடலைக்கு சமீப காலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று கடைக்கு செல்வதாக சிறுவன் சுடலை வீட்டில் கூறி சென்றுள்ளான். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் பாரதிநகர் ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை உடல் சிதறிய நிலையில் சுடலை இறந்துகிடந்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் பலியான சுடலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுடலை தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை தியாகராய நகரில் இருந்து மாநகர பஸ் முகப்பேருக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் சங்கர் ஓட்டிச் சென்றார். தி.நகர் தணிகாசலம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்த 8 வயது சிறுவன் தருண்ரோஷன் பரிதாபமாக உயிர் இழந்தான். மோட்டார் சைக்கிளை ஓட்டிய ஆனந்த விகன் படுகாயம் அடைந்தார். பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சங்கரை கைது செய்தனர்.
போரூர்:
போரூர், கணேஷ் அவின்யூ 8-வது தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. கூலி தொழிலாளி. இவரது மகன் விஷால் (வயது6). அருகில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
ஆசிரியர்கள் போராட்டத்தால் இன்று காலை அவன் பள்ளிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வீட்டின் அருகில் புதிதாக கட்டிய வீட்டில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கேட் மீது ஏறி அவன் விளையாடினான்.
அப்போது திடீரென இரும்பு கேட் சரிந்து சிறுவன் விஷால் மீது விழுந்தது. இதில் விஷால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
போரூர் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் விஷாலின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். சக்கரத்துடன் உள்ள இரும்பு கேட் சரியாக பொருத்தப்படாததால் அது சரிந்து விபத்து ஏற்பட்டது தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
திருவட்டார் அருகே பிலாங்காலை பகுதியைச் சேர்ந்தவர் புல்பாஸ், (வயது 38). இவர் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி மேரி ஜெலஸ்டின் (32). இவர்களது மகள் அக்ஷ்யா (10), மகன் அக்ஷித் (4).
இவர்கள் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றனர். குழித்துறை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் புல்பாஸ், மேரி ஜெலஸ்டின், அக்ஷ்யா, அக்ஷித் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். மேரி ஜெலஸ்டினுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும், களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான மேரி ஜெலஸ்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த மற்ற 3 பேரையும் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அக்ஷித் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 16). இவர் பெரியபாளையம் நோக்கி செல்வதற்காக நடந்து சென்றார்.
அப்போது வட மதுரையில் இருந்து வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் ‘லிப்’ கேட்டு ஏறினார்.
வடமதுரை கூட்டுச் சாலை அருகே சென்றபோது எதிரே மற்றொரு வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென பரத்குமார் அமர்ந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் 2 மோட்டார் சைக்கிளில் இருந்தவர்களும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி சாலையில் விழுந்த பரத்குமார் மீது ஏறி இறங்கியது.
சம்பவ இடத்திலேயே பரத்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரிய வில்லை. தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ராமவர்மாபுரத்தில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிப்பவர் ஆயுதப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் அகுள். இவரது மனைவி பிரிதா. இவர்களது மகன் அஜி கிருஷ்ணன் (வயது 7). இதே குடியிருப்பை சேர்ந்த போலீஸ்காரர் அருண். இவரது மகன் அபிமன்யூ (9). குடியிருப்பு வளாகம் பகுதியில் ஒரு குளம் உள்ளது.
நேற்று மாலை சிறுவர்கள் அங்குள்ள குளம் அருகே விளையாடினர். விளையாடி முடிந்ததும் அனைவரும் வீடு திரும்பினர். அஜி கிருஷ்ணன், அபிமன்யூ ஆகியோரை காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவர்களை தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
சிலர் குளத்தை எட்டிப்பார்த்தபோது சிறுவர்கள் 2 பேரும் பிணமாக மிதந்தனர். தகவல் அறிந்ததும் திருச்சூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 சிறுவர்களின் உடல்களையும் மீட்டனர். பெற்றோர் சிறுவர்களின் உடல்களை பார்த்து கதறி துடித்தனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து திருச்சூர் போலீசார் விசாரணை நடத்தினர். விளையாடியபோது குளத்தில் தவறி விழுந்து சிறுவர்கள் பலியானது தெரியவந்தது.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு சூர்யா (வயது 13), ஆறுமுகம் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
சூர்யா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை மல்லிகா மகன் சூர்யாவுடன் 4 வழிச்சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.
தாய்-மகன் 4 வழிச் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக சூர்யா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சூர்யா ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தான். இதைப் பார்த்த மல்லிகா அதிர்ச்சியில் உறைந்தார்.
அங்கிருந்தவர்கள் சூர்யாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சூர்யா பரிதாபமாக இறந்தான்.
புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துச்செல்வம் (28) என்பவரை கைது செய்தனர்.
மதுரை:
விருதுநகர் கருப்பசாமி நகரைச் சேர்ந்தவர் ஆதி குரு. இவரது மகன் ஆதி சங்கர் (வயது12). மன வளர்ச்சி குன்றிய சிறுவன் ஆதிசங்கர் கடந்த 10 நாட் களாக காய்ச்சலால் அவதிப்பட்டான்.
மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அதிசங்கருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ஆதிசங்கர் பரிதாபமாக இறந்தான்.
பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதேபோல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 115 பேருக்கும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Swineflu #Dengue
செங்குன்றம்:
புழலை அடுத்த லட்சுமி புரம் ராஜாஜி தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 7). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில நாட்களாக சரரணனுக்கு காய்ச்சல் இருந்து வந்தது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.
இந்த நிலையில் அவனுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமானது. இதையடுத்து கடந்த 30-ந் தேதி சரவணனை சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தான். அவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து உள்ளது. #Swineflu #Dengue
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் 14 மனை தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 12). மனநிலை பாதிக்கப்பட்டவர்.
இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணமூர்த்தி தாராசுரத்தில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மயிலாடுதுறையில் இருந்து தஞ்சைக்கு வந்து கொண்டிருந்த பாசஞ்சர் ரெயில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ண மூர்த்தி துடிதுடித்து பலியானார்.
இதுபற்றி தகவலறிந்ததும் கும்பகோணம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பலியான கிருஷ்ண மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்