என் மலர்
நீங்கள் தேடியது "train Collide"
- பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே செல்போனில் பேசிக்கொண்டே கல்லூரி மாணவர்கள் தண்டவாளத்தை கடந்தனர்.
- எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்ற ரெயில் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே செல்போனில் பேசிக்கொண்டே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்ற ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது நபூல் (20), சபீர் அகமது (20) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலா என்கிற பார்த்தசாரதி (வயது 30), சுகுமார் (26) கூலி தொழிலாளர்கள்.
நேற்று இரவு இவர்கள் தக்கோலம் அருகே உள்ள சேர்ந்தமங்கலம் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். சுகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
படுகாயமடைந்த பார்த்தசாரதியை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பார்த்தசாரதி பரிதாபமாக இறந்தார்.
ரெயில்வே போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜோலார்பேட்டை:
ஆம்பூர் அருகே உள்ள பச்சக்குப்பம் மேல்பட்டி இடையேயான தண்டவாளத்தில் 55 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சங்ககிரியை அடுத்த வீரபாண்டிய ரெயில் நிலையத்திற்கும் மகுடஞ்சாவடி ரெயல் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் சம்பவத்தன்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரெயில் மோதி இறந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.
அவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ஓடும் ரெயிலிருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்றும் தெரியவில்லை.
தாம்பரம்:
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் தினேஷ்செல்வம். இவர் தாம்பரத்தில் தங்கி இருந்து சிறுசேரியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை குரோம்பேட்டை- பல்லாவரம் இடையே தண்டவாளத்தில் தினேஷ்செல்வம் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றினர். தினேஷ்செல்வம் ரெயில் மோதி இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் கமீர்பூர் மாவட்டத்தில் ரகோல் ரெயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பசு மாடுகள் மீது அந்த வழியாக வந்த ரெயில் ஒன்று வேகமாக மோதியது. இதில் 25 பசு மாடுகள் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானது.
போலீசார் நடத்திய விசாரணையில், சில மர்ம நபர்கள் திட்டமிட்டு தண்டவாளத்தில் மாடுகளை நிறுத்தி விட்டு சென்றதாக தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். #cowskilled
மேட்டுப்பாளையம்:
கோவை காரமடை சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40).
இன்று காலை காரமடை- மேட்டுப்பாளையம் இடையே உள்ள பெரியார் நகர் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் ராஜேஷ் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலயே பலியானார். இது குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், ஏட்டு பரமேஷ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ராஜேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அப்துல்பஷித் (வயது 76). இவர் சம்பவத்தன்று புதூர் ரெயில்வே கேட்டினை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரெயில் அப்துல்பஷித் மீது மோதியது. இதில் அவர் பலத்தகாயமடைந்தார்.
இதனை கண்ட பொதுமக்கள் படுகாயமடைந்தவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அப்துல் பஷித் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஜேலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் 14 மனை தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 12). மனநிலை பாதிக்கப்பட்டவர்.
இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணமூர்த்தி தாராசுரத்தில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மயிலாடுதுறையில் இருந்து தஞ்சைக்கு வந்து கொண்டிருந்த பாசஞ்சர் ரெயில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ண மூர்த்தி துடிதுடித்து பலியானார்.
இதுபற்றி தகவலறிந்ததும் கும்பகோணம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பலியான கிருஷ்ண மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சியை சேர்ந்தவர் சர்புதீன் (வயது 46). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் போத்தனூர்- கிணத்துக்கடவு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சர்புதீன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து ரெயிலில் அடிபட்டு இறந்த சர்புதீனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள வீசாரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 32). தச்சு தொழிலாளியான இவர் நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியில் சென்றார். பின்னர் மாயமானதால் அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை சின்ன திருப்பதி அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் அவர் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவர் ரெயில் மோதி இறந்திருக்கலாம் என்று கூறினர்.
மேலும் அவரது உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.






