search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
    X

    கோவை அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

    கோவை அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சியை சேர்ந்தவர் சர்புதீன் (வயது 46). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் போத்தனூர்- கிணத்துக்கடவு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சர்புதீன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து ரெயிலில் அடிபட்டு இறந்த சர்புதீனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×