search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவிலில் ரெயிலில் சிக்கி சிறுவன் பலி
    X

    சங்கரன்கோவிலில் ரெயிலில் சிக்கி சிறுவன் பலி

    சங்கரன்கோவிலில் ரெயிலில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் பாரதிநகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. தையல் தொழிலாளி. இவரது மகன் சுடலை. இவர் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். சுடலைக்கு சமீப காலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று கடைக்கு செல்வதாக சிறுவன் சுடலை வீட்டில் கூறி சென்றுள்ளான். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் பாரதிநகர் ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை உடல் சிதறிய நிலையில் சுடலை இறந்துகிடந்தார்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் பலியான சுடலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுடலை தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×