search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாம்பலம்"

    மாம்பலத்தில் ரெயிலில் அடிபட்டு சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் அருண்கோயில். இவரது மகன் ஆதித்யா (9). நேற்று விடுமுறை நாள் என்பதால் அருண்கோயில் அவரது மனைவி ஆகியோர் ஆதித்யாவையும் அழைத்துக் கொண்டு தி.நகருக்கு பொருட்கள் வாங்க வந்தனர்.

    பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி செல்வதற்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலுக்காக காத்திருந்தனர். அப்போது சிறுவன் ஆதித்யா பிளாட் பாரத்தில் அங்கும் இங்கும் ஓடியபடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மின்சார ரெயில் வந்ததை கவனிக்காமல் தவறி விழுந்தான். இதில் ரெயிலில் அடிபட்டு உடல் நசுங்கி இறந்தான்.

    தங்கள் கண் முன்னாலேயே மகன் இறந்ததை பார்த்து அருண் கோயிலும், அவரது மனைவியும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    தகவல் அறிந்ததும் எழும்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேற்கு மாம்பலத்தில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மேற்கு மாம்பலம் பிருந்தாவன் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜூ.

    இவரது மகன் தமிழ்செல்வன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறான். தமிழ்செல்வன் ஏற்கனவே நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 4 பாடங்களில் பெயிலாகி விட்டார்.

    இதனால் தந்தை ராஜூ தமிழ்செல்வனை கண்டித்தார். மேலும் தற்போது அரையாண்டு தேர்வு எழுதியுள்ள தமிழ்செல்வன் கடந்த 2 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் படுக் கையறையில் தமிழ்செல்வன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அரையாண்டு தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமாபுரம் அம்பாள் நகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். பிளாஸ் டிக்கம்பெனி ஊழியர். இவரது மனைவி நதியா(30) இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர்.

    நதியாவுக்கு கணவர் ரமேசுடன் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் படுக்கையறையில் நதியா சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கவுதமன் வழக்குப் பதிவு செய்தார்.

    திருமணம் முடிந்து 6½ ஆண்டுகளே ஆவதால் கிண்டி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானம் இந்த ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த சிறிய விமானத்தை அண்ணா பல்கலை கழக தொழில்நுட்ப குழுவினரிடமிருந்து போலீசார் வாங்கி உள்ளனர். #Drone
    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு இன்றும், நாளையும் கூட்டம் அலைமோதும்.

    இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை வரையில் மாம்பலம், பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் தினமும் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

    ஆண்டுதோறும் தீபாவளி நேரத்தில் தி.நகரில் மக்கள் கூடும் இடங்கள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே போல் பாதுகாப்பு பணிகள் இன்று தொடங்கின.

    தி.நகர் பாண்டிபஜார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். பொருட்களை வாங்க வரும் பொது மக்களின் உடமைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வலம் வரும் இந்த கொள்ளையர்களை பிடிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தி.நகர் ரங்கநாதன் தெரு உஸ்மான் ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் 750 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். மாம்பலம் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த விழாவில் கூடுதல் கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால், தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க மாம்பலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.


    தி.நகர் பஸ் நிலையம், போத்தீஸ் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் சிறிய கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    கூட்டத்தில் புகுந்து திருடும் கொள்ளையர்களின் 50-க்கும் மேற்பட்ட போட்டோக்களை போலீசார் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளனர். பேஸ் டிடெக்டிவ் என்கிற கண்டு பிடிப்பு முறையில் புகைப்படத்தில் இருக்கும் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை காட்டிக் கொடுக்கும் வகையிலும் சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருடும் எண்ணத்தில் எந்த குற்றவாளியாவது மாம்பலம் பகுதியில் ஊடுருவினால் நிச்சயம் போலீசில் சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் தப்ப முடியாது.

    தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானமும் இந்த ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த சிறிய விமானத்தை அண்ணா பல்கலை கழக தொழில்நுட்ப குழுவினரிடமிருந்து போலீசார் வாங்கி உள்ளனர். இதன் மூலம் போலீசார் பணியில் இல்லாத இடங்களிலும் கூட்டத்தை எளிதாக கண்காணிக்க முடியும்.


    தீபாவளி பாதுகாப்பில் இன்னொரு சிறப்பு ஏற்பாடாக போலீசாரின் சீருடையில் கேமரா பொருத்தி கண்காணிக்கும் முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 15 போலீசாரின் சீருடைகளில் கேமராக்களை கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பொருத்திவிட்டார். இந்த போலீசார் பணியில் ஈடுபட்டிருக்கும்போது கேமரா இயங்கிக் கொண்டே இருக்கும். போலீசாரின் எதிரே நின்று பேசுபவர்களின் குரலும், போலீசின் குரலும் அதில் பதிவாகும்.

    ஜி.பி.எஸ். கருவியுடன் கேமரா இணைக்கப்பட்டிருப்பதால் போலீஸ்காரர் எங்கு இருக்கிறார்? என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலம் போலீசார் யாராவது தவறு செய்திருந்தாலும் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

    இது தவிர 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், 8 இடங்களில் கண்காணிப்பு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. #Drone
    கிண்டி, மாம்பலம் ரெயில் நிலையத்தில் இன்று முதல் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #PuducherryExpress #Gundi #Mambalam #SouthernRailway
    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலைய விபத்துக்கு பின்னர் தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் அதிவேக மின்சார ரெயில் சேவையை ரத்து செய்தது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பயணிகளின் தேவைக்காக சென்னை எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை தெற்கு ரெயில்வே நீட்டித்தது.

    இதற்கிடையே தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    * எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்:16115/16116), இன்று(சனிக்கிழமை) முதல் கிண்டி மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×