search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே தாய் கண் முன்பு மகன் விபத்தில் பலி
    X

    திருமங்கலம் அருகே தாய் கண் முன்பு மகன் விபத்தில் பலி

    திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் தாய் கண் முன்பு மகன் பரிதாபமாக இறந்தான்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு சூர்யா (வயது 13), ஆறுமுகம் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    சூர்யா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை மல்லிகா மகன் சூர்யாவுடன் 4 வழிச்சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.

    தாய்-மகன் 4 வழிச் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக சூர்யா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சூர்யா ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தான். இதைப் பார்த்த மல்லிகா அதிர்ச்சியில் உறைந்தார்.

    அங்கிருந்தவர்கள் சூர்யாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சூர்யா பரிதாபமாக இறந்தான்.

    புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துச்செல்வம் (28) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×