search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Biggboss"

    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இதிலிருந்து ஜி.பி.முத்து தாமாக முன் வந்து வெளியேறினார்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.


    ஜி.பி.முத்து

    இது அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிக்பாஸ் 6-வது சீசனின் வெற்றியாளர் ஜி.பி.முத்து தான் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவர் வீட்டை விட்டு வெளியேறியது அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருந்தும் ஜி.பி.முத்து வைல்டு கார்டு மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


    சீனுராமசாமி

    இந்நிலையில், போட்டியாளர் ஜி.பி.முத்து வெளியேறியது குறித்து இயக்குனர் சீனுராமசாமி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில் உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாஸ் சீசன் ஆறிலிருந்து விடைபெற்ற தமிழ்மகன் ஜிபி முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்" என பதிவிட்டுள்ளார்.தற்போது பிக்பாஸ்  வீட்டினுள் 19 நபர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் இருந்து சாந்தி வெளியேறினார்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி, கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் வீட்டின் உள்ளே சென்றனர். கடந்த வாரம் நடிகை மைனா வீட்டினுள் நுழைந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று இன்றுடன் 15 நாட்களை நெருங்கியுள்ளது.


    கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்களிடம் வரிசையாக கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளை நடிகை மைனா கேட்கிறார்.


    அப்போது இந்த வீட்டுக்கு தோரணம் மாதிரி இருப்பது யார் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு அமுதவாணன் என்று மகேஸ்வரி பதிலளிக்கிறார். பின்னர் தொடர்ந்து பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. கடைசியாக தீப்பெட்டி மாதிரி கொளுத்தி போடுவது யாரு என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதோடு இந்த புரோமோ முடிவடைகிறது. இதற்கு பதிலளித்தால் வீட்டில் பல பிரச்சினைகள் வெடிக்கும் என்று ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • பிக்பாஸ் தமிழ் சீசன்-6 சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக தொடங்கியது.
    • விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசன் இன்று 14 நாட்களை நெருங்கியுள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி, கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் வீட்டின் உள்ளே சென்றனர். கடந்த வாரம் நடிகை மைனா வீட்டினுள் நுழைந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று இன்றுடன் 14 நாட்களை நெருங்கியுள்ளது.

     

    ஜிபி முத்து

    ஜிபி முத்து

    இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், தனது மகனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை எனக்கூறியும் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இவரின் இந்த திடீர் முடிவால் அவருடைய ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    • பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் ரம்யா பாண்டியன்.
    • தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புதிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

    தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது.

    ரம்யா பாண்டியன்

    ரம்யா பாண்டியன்

    இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ரம்யா பாண்டியனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

    ரம்யா பாண்டியன்

    ரம்யா பாண்டியன்

    அவ்வப்போது ரம்யா பாண்டியன் தனது புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிற கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது.


    அனிதா உதுப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகி வரும் 90 எம்.எல் படத்திற்கு சிம்பு இசையமைக்கும் நிலையில், அந்த படத்தில் இருந்து சிங்கிள் ஒன்றை படக்குழு புத்தாண்டு விருந்தாக வெளியிடுகிறது. #STR #Oviya #90ML
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா `காஞ்னா-3', `களவாணி-2', `90 எம்.எல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `90 எம்.எல்' படத்தை அனிதா உதுப் இயக்குகிறார். சிம்பு இசையமைக்கிறார். 

    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு படத்தில் இருந்து பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட இருக்கிறது. `பீர் பிரியாணி' என தொடங்கும் இந்த பாடல் இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. #STR #Oviya #90ML #BeerBiryani

    `பியார் பிரேமா காதல்' படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், படம் பற்றி பேசிய ஹரிஷ் கல்யாண், சிம்புவுடனான நட்பு பற்றி பகிர்ந்து கொண்டார். #PyaarPremaKaadhal #HarishKalyan
    இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `பியார் பிரேமா காதல்' படக்குழு அளித்த சிறப்பு பேட்டி அளித்தனர். அப்போது, ஹரிஷ் கல்யாண் பேசும் போது,

    பிக்பாஸ் முடித்து வெளியே வந்த பிறகு நானும், ரைசாவும் ஒரு செல்ஃபி எடுத்தோம். அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியது. எங்கள் இருவரையும் சேர்ந்து `ஹரைசா' என்று ட்ரெண்டாக்கினர். அதுபற்றி நாங்கள் பேசினோம். அப்போது தான் ரசிகர்கள் எங்களை திரையில் சேர்ந்து பார்க்க விரும்புகின்றனர் என்பது புரிந்தது. அதுதான் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க காரணம். 

    இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளன. இயக்குநர் இளனும் பாடல்களை எழுதியிருக்கிறார், ஆனால் எனக்கு தான் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை. யுவன், அவரது அடுத்த படத்தில் என்னை பாட வைப்பதாக சொல்லியிருக்கிறார். 



    பியார் பிரேமா காதல் படத்தின் தலைப்புக்கு சிம்பு தான் காரணம். அவரது வரிகள் என்பதால், அவரிடம் படத்தின் தலைப்பு வேண்டும் என்று கேட்டேன். அவர், என்னிடம் இருந்து என் சம்பந்தமாக உனக்கு ஏதாவது உதவும்படியாக இருந்தால், எனக்கு சந்தோஷம் தான் என்றார். சிம்பு தான் என் தலைவர். அரசியலுக்கு வர அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கிறார். பிரச்சனை வந்தால் தான் தோள்கொடுக்க வேண்டும் என்று அவர் நினைக்க மாட்டார். எந்த நேரத்திலும் வருவார். நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவர். அதை தான் செய்யவும் விரும்புவார். 

    படத்தில் முனிஸ்காந்த்தும், நானும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும். காதல், பாடல் என அனைத்தும் கலந்த இளைஞர்களுக்கான படமாக பியார் பிரேமா காதல் இருக்கும் என்றார். #PyaarPremaKaadhal #HarishKalyan

    பியார்  பிரேமா காதல் படக்குழு சந்திப்பு வீடியோ:


    இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் காதலில் உருவாகி இருக்கும் `பியார் பிரேமா காதல்' படத்தின் முன்னோட்டம். #PyaarPremaKaadhal #HarishKalyan #RaizaWilson
    யுவன் ஷங்கர் ராஜாவின் `ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ்' மற்றும் ராஜராஜனின் 'கே புரொடக்‌ஷன்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள படம் `பியார் பிரேமா காதல்'.

    ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், ரைசா வில்சன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் ரேகா, ஆனந்த் பாபு, ராஜாராணி பாண்டியன், பொற்கொடி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு - எஸ்.மணிக்குமரன், ஒளிப்பதிவு - ராஜா பட்டாசார்ஜி, நடன இயக்குநர் - சல்சா மணி, ஆட வடிவமைப்பு - மகேஷ்வரி சாணக்கியன், சஃப்ரூன் நிசார், கலை இயக்குனர் - இ.தியாகராஜன், தயாரிப்பு மேற்பார்வை - கே.சிவசங்கர், வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ், துணை இயக்குநர் - விக்னேஷ் சரவணன், எழுத்து, இயக்கம் - இளன்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது,

    நான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் இருந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம். 

    ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார். என்றார். 

    படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. #PyaarPremaKaadhal #HarishKalyan #YuvanShankarRaja

    இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் `பியார் பிரேமா காதல்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #PyaarPremaKaadhal #HarishKalyan
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் படம் `பியார் பிரேமா காதல்'. புதுமுக இயக்குநர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்தை `ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ்' சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், 'கே புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ளனர். 

    சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. நல்லவைக்காக காத்திருக்க முடியாது என்று கூறியுள்ள படக்குழு படம் ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 9-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவித்துள்ளது.
    காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். யுவன் இசையில் சமீபத்தில் வெளியாகிய காதல் கனியும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #PyaarPremaKaadhal #HarishKalyan #RaizaWilson

    ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் `பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன் என்றார். #PyaarPremaKaadhal
    இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ப்ட் `பியார் பிரேமா காதல்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. 

    இதில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், தயாரிப்பாளர் ராஜராஜன், இர்ஃபான் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பேசும் போது,

    எல்லா கலைஞனுக்குமே காதல் தான் ஒரு உந்துசக்தி, காதல் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே இல்லை. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களின்போது நானும், செல்வராகவனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது யுவன் இசை தான் எங்கள் படங்களுக்கு அடையாளமாக இருந்தது. நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், யுவன் என் குடும்பத்தில் ஒருவர். அவர் அழைத்தால் எங்கிருந்தாலும் வருவேன் என்றார்.



    சிம்பு பேசும் போது, 

    இது இசை வெளியீடு மாதிரி இல்லாமல் சினிமா பிரபலங்களின் கெட் டூ கெதர் மாதிரி இருக்கிறது. நானும், யுவனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி தான். யுவன் எனக்கு அப்பா மாதிரி, அப்பா மாதிரி என்னை பார்த்துக் கொள்வார். எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன். அவருக்காக சேர்ந்த கூட்டம் தான் இது என்றார்.

    ஜி.வி.பிரகாஷ் குமார் பேசும் போது,

    முதல் முறையாக யுவன் ஒரு படம் தயாரித்திருக்கிறார். நான் ஏற்கனவே படம் தயாரித்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் அவருக்கு ஆதரவாக இங்கு வந்திருக்கிறேன். அவரின் சர்வம் ஆல்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். பின்னணி இசையில் யுவன் ஒரு ராஜா. சமீபத்தில் கூட பேரன்பு பின்னணி இசை மிகச்சிறப்பாக இருந்தது என்றார். #PyaarPremaKaadhal #STR #Dhanush #GVPrakashKUmar

    ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யுவன், என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான் என்று கூறியிருக்கிறார். #PyaarPremaKaadhal
    இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 

    இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், தயாரிப்பாளர் ராஜராஜன், இர்ஃபான் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



    விழாவில் இசையமைப்பாளரும், படத்தின் தயாரிப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா பேசும் போது, 

    நான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் இருந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம். 

    ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல், நிலவே நான் எங்கிருந்தேன் என்ற பாடல் தான் என்றார். #PyaarPremaKaadhal #HarishKalyan #YuvanShankarRaja

    இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் `பியார் பிரேமா காதல்' படக்குழு அடுத்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. #PyaarPremaKaadhal #HarishKalyan
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் படம் `பியார் பிரேமா காதல்'. இளன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், 'கே புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரிக்கின்றனர். 

    காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 29-ஆம் தேதி நடைபெறஇருப்பதாக படக்கழு அறிவித்துள்ளது. 

    சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #PyaarPremaKaadhal #HarishKalyan

    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு வட மாநில தொழிலாளர்களே அதிகம் பயன்படுத்தப்படுவதாக புகார் கூறி ‘பெப்சி’ தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். #BiggBossTamil2 #FEFSI
    திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் ‘பிக்பாஸ்’ டி.வி. நிகழ்ச்சியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள்.

    ‘பிக்பாஸ் முதல் பாகத்தின் போதே பெப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கேட்டோம். அப்போது ‘இது வித்தியாசமான நிகழ்ச்சி. தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு பிடிபடாது. எனவே 50 சதவிகிதம் ஆட்களைப் பெஃப்சியிலிருந்தும் மீதிப் பேர் மும்பை ஆட்களுமாக வைத்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த பாகங்களில் நிச்சயம் நூறு சதவிகிதமும் பெப்சியில் இருந்து பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்றார்கள்.



    அந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் கமலின் பங்கும் இருந்தது. ஆனால் 2-ம் பாகத்தில் சொன்னது போல் நடந்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டை விட மோசமாக வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே பெப்சி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதிலும் மும்பை தொழிலாளர்களுக்கு ஒரு மரியாதையும் நம்மூர் ஆட்களுக்கு வேறுவிதமான மரியாதையும் பணியிடத்தில் கிடைப்பதாக தெரிகிறது. கேட்டதற்கு சரியான பதில் தராமல் அடாவடியாகப் பேசுகிறார்கள். எனவேதான் நாங்களும் இதை வெளியில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதிகப்படியாக பெப்சி பணியாளர்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. கோடிக்கணக்கில் பணம் போட்டு தமிழ்நாட்டில் தயாராகிற நிகழ்ச்சியில் நமது மாநில தொழிலாளர்களுக்கு வேலை தருவதில் என்ன பிரச்சினை?. எங்களது கோரிக்கைக்கு அவர்கள் செவி சாய்க்காத பட்சத்தில் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிற கமல் உள்பட அந்த 41 பேரும் (நடிகர் கமல் சம்மேளன உறுப்பினர்) அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறோம்.



    கமல் பல்வேறு காலங்களில் சம்மேளனத்துக்கு ஆதரவு தந்துள்ளார். அவரிடம் நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தினர் பெப்சி ஆட்களையே அதிகம் பயன்படுத்துவதாக தவறான தகவல்களைத் தந்திருக்கிறார்கள். நாங்கள் உண்மை நிலையை அவருக்கு தெரிவித்து விட்டோம். கடந்த முறையை போலவே இப்போதும் தலையிட்டு நல்ல தீர்வைப் பெற்றுத் தருவார் அல்லது எங்கள் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பார் என நம்புகிறோம்.

    குஷ்புவின் வேண்டுகோளுக்கு இணங்க அவகாசம் தந்து இருக்கிறோம்.

    தவறு செய்த நிறுவனம் மீது சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் செய்து இருக்கிறோம். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் 25-ந்தேதி (நாளை) ஒரு நாள் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு வேலை நிறுத்தம் அறிவித்து இருக்கிறோம். அன்று போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருக்கிறோம்’.

    இவ்வாறு அவர் கூறினார். #BiggBossTamil2 #FEFSI 

    ×