search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BiggBoss 2"

    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு வட மாநில தொழிலாளர்களே அதிகம் பயன்படுத்தப்படுவதாக புகார் கூறி ‘பெப்சி’ தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். #BiggBossTamil2 #FEFSI
    திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் ‘பிக்பாஸ்’ டி.வி. நிகழ்ச்சியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள்.

    ‘பிக்பாஸ் முதல் பாகத்தின் போதே பெப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கேட்டோம். அப்போது ‘இது வித்தியாசமான நிகழ்ச்சி. தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு பிடிபடாது. எனவே 50 சதவிகிதம் ஆட்களைப் பெஃப்சியிலிருந்தும் மீதிப் பேர் மும்பை ஆட்களுமாக வைத்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த பாகங்களில் நிச்சயம் நூறு சதவிகிதமும் பெப்சியில் இருந்து பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்றார்கள்.



    அந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் கமலின் பங்கும் இருந்தது. ஆனால் 2-ம் பாகத்தில் சொன்னது போல் நடந்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டை விட மோசமாக வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே பெப்சி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதிலும் மும்பை தொழிலாளர்களுக்கு ஒரு மரியாதையும் நம்மூர் ஆட்களுக்கு வேறுவிதமான மரியாதையும் பணியிடத்தில் கிடைப்பதாக தெரிகிறது. கேட்டதற்கு சரியான பதில் தராமல் அடாவடியாகப் பேசுகிறார்கள். எனவேதான் நாங்களும் இதை வெளியில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதிகப்படியாக பெப்சி பணியாளர்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. கோடிக்கணக்கில் பணம் போட்டு தமிழ்நாட்டில் தயாராகிற நிகழ்ச்சியில் நமது மாநில தொழிலாளர்களுக்கு வேலை தருவதில் என்ன பிரச்சினை?. எங்களது கோரிக்கைக்கு அவர்கள் செவி சாய்க்காத பட்சத்தில் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிற கமல் உள்பட அந்த 41 பேரும் (நடிகர் கமல் சம்மேளன உறுப்பினர்) அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறோம்.



    கமல் பல்வேறு காலங்களில் சம்மேளனத்துக்கு ஆதரவு தந்துள்ளார். அவரிடம் நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தினர் பெப்சி ஆட்களையே அதிகம் பயன்படுத்துவதாக தவறான தகவல்களைத் தந்திருக்கிறார்கள். நாங்கள் உண்மை நிலையை அவருக்கு தெரிவித்து விட்டோம். கடந்த முறையை போலவே இப்போதும் தலையிட்டு நல்ல தீர்வைப் பெற்றுத் தருவார் அல்லது எங்கள் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பார் என நம்புகிறோம்.

    குஷ்புவின் வேண்டுகோளுக்கு இணங்க அவகாசம் தந்து இருக்கிறோம்.

    தவறு செய்த நிறுவனம் மீது சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் செய்து இருக்கிறோம். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் 25-ந்தேதி (நாளை) ஒரு நாள் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு வேலை நிறுத்தம் அறிவித்து இருக்கிறோம். அன்று போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருக்கிறோம்’.

    இவ்வாறு அவர் கூறினார். #BiggBossTamil2 #FEFSI 

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் தீவிரம் காட்டிவரும் நிலையில், இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டமிட்டுள்ளாராம். #KamalHaasan #BiggBoss2
    ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள கமல் நேரடி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அத்தனையையும் அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்.

    கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது கமல் கட்சி தொடங்கவில்லை. இருப்பினும் மறைமுகமாக அதில் சில அரசியல் வி‌ஷயங்களை பேசினார். அடுத்த மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-ம் பாகத்தை தொகுத்து வழங்க இருக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியிலும் அரசியலை தீவிரமாக கையில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். நிழச்சியை தொகுத்து வழங்க தன்னை அணுகியவுடன் இதற்கு ஒப்புக்கொண்ட பிறகே சம்மதித்திருக்கிறார்.



    பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று மாதங்கள் நடக்கும். அதன் பிறகு சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் கதையும் நடப்பு அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதை தான். கமல் ஒரு பக்கம் தீவிர அரசியலையும் இன்னொரு பக்கம் மீடியா பணியையும் செய்ய திட்டமிட்டு உள்ளார்.

    தேர்தலில் அறிவித்து போட்டியிடும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க திட்டமிட்டு இருக்கிறார். தன்னுடைய எண்ணங்களை மக்களிடம் கொண்டு செல்ல இதுதான் சரியான வழி என்பதே கமலின் கணக்காக உள்ளது. #KamalHaasan #BiggBoss2 #Indian2 

    பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் யார், யார் பெயர் பட்டியலில் உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #BiggBossTamil2 #KamalHaasan
    கடந்த ஆண்டு பரபரப்புக்குள்ளாகி தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த முறை போலவே இந்த முறையும் கமலே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் டீசரை நடிகர் கமல் கடந்த சனிக்கிழமை வெளியிட்டார். 

    இதில் கலந்துகொள்ள பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த பிரபலங்கள் பட்டியலில் இனியா, ராய்லக்ஷ்மி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சொர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, ஆலியா மானசா, ரகஷிதா, கீர்த்தி சாந்தனு, பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், படவா கோபி, பவர் ஸ்டார் சீனிவாசன், ப்ரேம்ஜி, பாலசரவணன், தாடி பாலாஜி, ஜான் விஜய் ஆகியோர் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது. 



    இதிலிருந்து சிலர் வெளியேறலாம் என்றும் தகவல் வருகிறது. கடந்த முறை பிக்பாசில் கலந்துகொண்டவர்கள், புகழின் உச்சிக்கே சென்றார்கள். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போட்டி ஏற்பட்டுள்ளது. சில இளம் நடிகர், நடிகையர் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் சிலர் யார் தங்களுடன் தங்கப்போகிறார்கள் என்ற விவரம் கேட்கிறார்களாம். இன்னும் ஓரிரு தினங்களில் இறுதி பட்டியல் வெளியாகும் என்கிறார்கள். #BiggBossTamil2 #KamalHaasan

    ×