search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian2"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இந்தியன் 2'.
    • இந்த படத்தின் அறிமுக வீடியோ நேற்று வெளியானது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து 'இந்தியன் 2' படத்தின் அறிமுக வீடியோவை திரைப்பிரபலங்கள் பலர் நேற்று பல மொழிகளில் வெளியிட்டனர்.


    இந்தியன் 2போஸ்டர்

    இந்நிலையில், இந்த வீடியோ வெளியான ஒரே நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • கடந்த 2014-ம் ஆண்டு சுபாஷ்கரன் அல்லிராஜா சென்னையில் லைகா பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
    • லைகா பட நிறுவன அலுவலகங்களில் நேற்று (செவ்வாய்க் கிழமை) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு சுபாஷ்கரன் அல்லிராஜா சென்னையில் லைகா பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். முதலில் அவர் நடிகர் விஜய் நடித்த "கத்தி" படத்தை தயாரித்தார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்களை தயாரித்து வருகிறார். எந்திரன், கோலமாவு கோகிலா, 2.0, தர்பார் படங்கள் தயாரிப்பு மூலம் லைகா நிறுவனம் மிகப் பெரிய லாபத்தை ஈட்டியது.

    கடந்த ஆண்டு வெளியான "பொன்னியின் செல்வன்" படத்தையும் லைகா நிறுவனம்தான் தயாரித்து இருந்தது. பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தையும் இந்த நிறுவனமே தயாரித்து வெளியிட்டது. பொன்னியின் செல்வன் படம் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

    இதையடுத்து சினிமா படங்கள் தயாரிப்பதற்கு இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று முதலீடு செய்து இருப்பதாக கூறப்பட்டது. அந்த பண பரிவர்த்தனையில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இருந்தனர். அப்போது லைகா பட நிறுவனத்தின் பண பரிவர்த்தனைகளில் உரிய கணக்கு இல்லை என்று அதிகாரிகள் கருதியதாக கூறப்படுகிறது.

    லைகா பட நிறுவன அலுவலகங்களில் நேற்று (செவ்வாய்க் கிழமை) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் தி.நகர், அடையார், காரப்பாக்கம் உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் 10 அதிகாரிகள் குழு சோதனையை மேற்கொண்டது. பட தயாரிப்புக்கு செலவிட்ட தொகை, முதலீடு செய்த தொகை போன்றவை தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    லைகா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்கி வரும் லைகா பட நிறுவனம் இதுவரை இந்தியாவில் சுமார் 20 படங்களை தயாரித்து உள்ளது. அடுத்து கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தை தயாரித்து வருகிறது. இது தொடர்பாக முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டதால் அதிரடி சோதனை நடத்தப்பட்டு உள்ளது. சோதனை நடை பெற்ற 8 இடங்களில் இருந்த லைகா பட நிறுவன ஊழியர்களிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், இந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. சோதனை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
    • தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை இயக்குனர் ஷங்கர் கொடுத்துள்ளார்.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    தைவானில் ஷங்கர்

    இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியன் -2 படப்பிடிப்பு தைவான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதனை இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.


    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘இந்தியன் -2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

    கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் பகுதியில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள நானூறு ஆண்டு பழமையான டச்சுக்கோட்டை வளாகத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுகிறது. முதல்நாள் படப்பிடிப்பான நேற்று சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையர்களுடன் சண்டை போடுவது போன்ற காட்சியில் நடிப்பதற்காக கமல்ஹாசன் வந்திருந்தார். தகவலரிந்து அப்பகுதி மக்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கோட்டை முன் கமல்ஹாசனை பார்க்க குவிந்தனர்.


    ரசிகர்களை பார்த்து கையசைத்த கமல்ஹாசன்

    கோட்டை வாசல் பகுதியில் காவலுக்கு இருந்த போலீசாரும், தனியார் பவுண்சர்களும் யாரையும் ஷூட்டிங் பார்க்க அனுமதிக்கவில்லை.பொதுமக்கள் கூடியிருப்பதை அறிந்த கமல்ஹாசன் வளாகத்திற்கு வந்து அங்கிருந்த மேஜை மீது நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து கும்பிட்டார். பின்னர் ரசிகர்களும், பொதுமக்களும் அங்கிருந்து சென்றனர். இதையடுத்து நேற்று இரவு 10 மணிக்கு துவங்கிய படப்பிடிப்பு இன்று காலை 5 மணி வரை நடந்தது. இதேபோல் இன்றும், நாளையும் சதுரங்கபட்டினம் டச்சுக்கோட்டையில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. பின்னர் பனையூர் பகுதியில் இது போன்ற செட் போடப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருப்பதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர்.

    • கமல்ஹாசன் தற்போது இந்தியன் -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


    இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் தற்போது மீண்டும் இந்தியன் -2 படப்பிடிப்பில் இறங்கியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இவர் ராம் சரண் நடிக்கும் ஆர்.சி.15 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் -2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • மகேஷ் நாராயணன் - கமல்ஹாசன் இணைய இருந்த படம் தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது.

    நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் -2' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 25 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், 'இந்தியன் -2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    கமல்ஹாசன்

    இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று அறிவிப்பு வெளியானது. இப்படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் எனவும் பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது.


    மகேஷ் நாராயணன்

    சமீபத்தில் மகேஷ் நாராயணன் - கமல்ஹாசன் இணைய இருந்த படம் தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த தகவல் தொடர்பாக இயக்குனர் மகேஷ் நாராயணன், நானும் கமல் சாரும் இணையும் படம் கைவிடப்படவில்லை என்றும் அவர் தற்போது வேறு படங்களில் பிசியாக உள்ளதால் அப்படங்களை முடித்த பின்னர் தொடங்குவோம் என்றும் கூறியுள்ளார்.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் தீவிரம் காட்டிவரும் நிலையில், இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டமிட்டுள்ளாராம். #KamalHaasan #BiggBoss2
    ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள கமல் நேரடி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அத்தனையையும் அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்.

    கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது கமல் கட்சி தொடங்கவில்லை. இருப்பினும் மறைமுகமாக அதில் சில அரசியல் வி‌ஷயங்களை பேசினார். அடுத்த மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-ம் பாகத்தை தொகுத்து வழங்க இருக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியிலும் அரசியலை தீவிரமாக கையில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். நிழச்சியை தொகுத்து வழங்க தன்னை அணுகியவுடன் இதற்கு ஒப்புக்கொண்ட பிறகே சம்மதித்திருக்கிறார்.



    பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று மாதங்கள் நடக்கும். அதன் பிறகு சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் கதையும் நடப்பு அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதை தான். கமல் ஒரு பக்கம் தீவிர அரசியலையும் இன்னொரு பக்கம் மீடியா பணியையும் செய்ய திட்டமிட்டு உள்ளார்.

    தேர்தலில் அறிவித்து போட்டியிடும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க திட்டமிட்டு இருக்கிறார். தன்னுடைய எண்ணங்களை மக்களிடம் கொண்டு செல்ல இதுதான் சரியான வழி என்பதே கமலின் கணக்காக உள்ளது. #KamalHaasan #BiggBoss2 #Indian2 

    ×