search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Biggboss"

    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இதில் தற்போது 15 நபர்கள் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 15 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறியுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கேமரா முன்பு தங்களது புகார்களை தெரிவித்து யார் தங்களுக்காக வாதாட வேண்டும் என்பதை தேர்வு செய்துள்ளார். மேலும், இந்த வார நாமினேஷனில் மணிகண்டனை கடுமையான போட்டியாளர் என்று கூறி பலர் நாமினேஷன் செய்தனர்.


    மணிகண்டன் ராஜேஷ்

    இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சகோதரர் மணிகண்டனுக்கு ஆதரவளிக்குமாறு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் அவரால் மட்டுமே அவர் வெற்றி பெற வேண்டும் என்றும் மக்களை தன்னிச்சையாக முடிவெடுக்க விடுங்கள் என்றும் விமர்சித்து வருகின்றனர்.



    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • தற்போது பிக்பாஸ் வீட்டினுள் 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 15 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 44-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இதில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறியுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கேமரா முன்பு தங்களது புகார்களை தெரிவித்து யார் தங்களுக்காக வாதாட வேண்டும் என்பதையும் தெரிவிக்குமாறு கூறப்பட்டது. இதில் தனலட்சுமி தனக்கு வாதாடுவதற்காக ஆயிஷாவை தேர்வு செய்தார். இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், இதற்கு முன்பு 40 நாட்கள் இருந்த வீட்டை நான் வித்தியாசமாக காண்பிக்க வேண்டும் என்று அவ்வளவு ஆர்வமாக இருந்தேன்.


    பிக்பாஸ் சீசன் 6

    ஆனால் அது யாருக்கும் புரியவில்லை என்று தனலட்சுமி, ஆயிஷாவிடம் வருத்தத்துடன் கூறுகிறார். பின்னர் நீதிமன்றத்தில் நந்தினியையும் சிவினையும் விக்டிமாக அசெஸ் பண்றேன் என்று ஆயிஷா கூறுகிறார். இதற்கு பிக்பாஸ் நந்தினி மற்றும் சிவினிடம் சாட்சியாக இருக்க சம்மதமா? என்று கேட்கிறார். அதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால் கோபமடைந்த தனலட்சுமி இனி என் கேம்ம நான் எப்படி விளையாடுறேனு பாரு என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இதற்கு முன்பு நந்தினி மற்றும் சிவினிடம் தனலட்சுமி பிரச்சினையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.



    • பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 41-வது நாட்களை நெருங்கியுள்ளது.
    • இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 16 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 41-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் நடிகர் கமல்ஹாசன்  உப்பு நாட்டையும் மாத்தியிருக்கு வீட்டையும் மாத்தியிருக்கு. பதவிக்கு இருக்கும் ஆசை அதற்கான பொறுப்பை செய்ய வேண்டும் என்பதில் இல்லை. நான் என்ன பேசுவேன் என்பதை யூகிக்க தெரிந்தவர்களுக்கு தாம் என்ன பேசுகிறோம் என்பதை யோசிக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர்களிடம் தான் பேசனும் என்கிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் இன்றுடன் 40 நாட்களை நெருங்கியுள்ளது.
    • பல டாஸ்குகள், சண்டைகள் என நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்கிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 16 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 40-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6 

    இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் இது டாஸ்க் தான் மாஸ்டர் இதுக்குலாம் பீல் பண்ணாதீங்க மாஸ்டர் என்று ராபர்ட் மாஸ்டருக்கு அசீம் ஆறுதல் கூறுகிறார். தொடர்ந்து ரக்‌ஷிதா, மாஸ்டர் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க என்று கூறுகிறார். அதற்கு ராபர்ட் மாஸ்டர் நான் உன்ன நம்புனேன், இவன நம்புனேன் யாரும் என் கிட்ட பேச வேண்டும் என்று சொல்கிறார். இதனால் ரக்‌ஷிதா கோபத்தில் செல்கிறார். இதனுடன் இன்றைய புரோமோ முடிவடைகிறது.

    இந்த புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • இந்தி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஷிவ் தாக்கரேயை அர்ச்சனா கவுதம் முகத்தில் கைகளால் குத்தி கடுமையாக தாக்கி உள்ளார்.
    • இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நடிகர் சல்கான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சி தொடர்ந்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது. 10 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய இயக்குனர் சஜித்கானை பிக்பாசில் போட்டியாளராக சேர்த்ததற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி நடிகை மந்தனா கரிமி சினிமாவை விட்டே விலகுவதாக அறிவித்தார். சஜித்கானை பிக்பாசில் இருந்து நீக்கும்படி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் மத்திய மந்திரி அனுராக் தாக்கூருக்கு கடிதமும் எழுதினார்.

     

    இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது அடிதடி சண்டை நடந்துள்ளது. பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள நடிகை அர்ச்சனா கவுதமுக்கும், இன்னொரு போட்டியாளரான ஷிவ் தாக்கரே என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது. ஷிவ் தாக்கரேயை அர்ச்சனா கவுதம் முகத்தில் கைகளால் குத்தி கடுமையாக தாக்கி உள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு உடல்நிலையும் குன்றியது. இதையடுத்து அர்ச்சனா கவுதமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிக்பாஸ் 6-வது சீசன் பல பிரச்சினைகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இதில் இன்று வெளியான முதல் புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல் வெளியேறினார். கடந்த வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 31-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் இந்த வாரம் பேக்கரி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ரேம்பில் இருந்து வரும் பொருட்களை போட்டியாளர்கள் கைப்பற்ற முயலும் போது தனலட்சுமி கீழே விழுந்து விடுகிறார். இதற்கு மணிகண்டன் தான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டுகிறார். இவருக்கும் இடையில் தகராறு ஏற்படவே மணிகண்டனை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்கின்றனர். இருந்தும் தனலட்சுமி மரியாதை இல்லாமல் பேசுகிறார் என்று மணிகண்டன், தனலட்சுமி கடையில் இருக்கும் பொருளை எடுக்க முயல்கிறார். இதனுடன் புரோமோ முடிவடைகிறது.


    பிக்பாஸ் சீசன் 6

    இதில் யார் குற்றவாளி? இந்த வாரம் கமல்ஹாசன் இந்த பிரச்சினைக்கு குறும்படம் போடுவாரா? என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.



    • பிக்பாஸ் 6-வது சீசன் 29 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியின் புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல் வெளியேறினார். கடந்த வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 30-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் அமுதவாணன், நீங்கள் ஒன்று சொன்னால் அதை ஜாலியாக எடுக்கிறீர்கள் அதே நாங்கள் கூறினால் அதை தவறாக நினைக்கிறீர்கள். எல்லாத்துக்கும் பிரச்சனை பண்ணனும் என்று பண்றீங்க. நேத்து ஒரு விஷயம் நடந்தது அதை கேட்டு சொல்ல சொல்றீங்க அதுதான் எனக்கு வேலையா. உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் கேளுங்கள் நான் எப்படி அடுத்தவரின் தனிப்பட்ட விஷயத்தை கேட்க முடியும் என்று விக்ரமனை பார்த்து கூறுகிறார். இதனுடன் அந்த புரோமோ முடிவடைகிறது. இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.



    • பிக்பாஸ் 6-வது சீசன் தற்போது 25 நாட்களை எட்டியுள்ளது.
    • இதில் இன்று வெளியான இரண்டாவது புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் வெளியேற்றப்பட்டார். இதில் தற்போது 18 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 25-வது நாளை நெருங்கியுள்ளது.


    பிக்பாச் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் ஏ.டி.கே. இந்த வீட்டில் யார் யார் எப்படி மாறுவாங்கனு தெரில. சத்தியமா சொல்றேன். ஆயிஷா, ஷெரினா, மணி அந்த வேஸ்ட்ட கொட்டுறதுல என்ன கஷ்டம். ஒரு அடி தான் இருக்கும் அந்த குப்ப தொட்டில கொட்டிட்டு வைக்கிறதுல என்ன கஷ்டம். ஒரு பிளேட்டே கழுவ முடியாதவங்க எப்படி ஒரு விஷயத்த முன்னோக்கி போவாங்க என்று ராமிடம் கூறுகிறார். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இதனை கமல்ஹாசன் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.



    • பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் அசல் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார்.
    • இவர் நிகழ்ச்சியில் பெண்களிடம் அத்துமீறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் அசல் வெளியேற்றப்பட்டார்.

    பிக்பாஸ் சீசன் 6

    இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் அத்துமீறியதால் தான் அசல் வெளியேற்றப்பட்டார் என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பெண்களிடம் அத்துமீறவில்லை என்றும் அப்படி தெரிந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அசல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பிக்பாஸ் சீசன் 6

    அதில், "என் வீட்டில் நான் எப்படி இருப்பேனோ அப்படிதான் நான் பிக்பாஸ் வீட்டிலும் இருந்தேன். சகபோட்டியாளர்களை என் வீட்டில் இருப்பவர்களைப் போலதான் நினைத்தேன். நான் தப்பான பார்வையில் பார்த்திருந்தேன் என்றால் உள்ளே இருப்பவர்களுக்கு அது தெரிந்திருக்கும். ஒருத்தர் எப்படி பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் அளவிற்கு மூளை இருப்பவர்கள் தான் உள்ளே இருக்கிறார்கள்.

    பிக்பாஸ் அசல்

    நான் தவறாக எதும் செய்திருந்தால் கண்டிப்பாக வெளியே வந்திருக்கும். கேமராவுக்கு முன்னாடி இப்படி எல்லாம் செய்வேனா? நான் செய்தது பார்க்கிறவர்களை தொந்தரவு செய்திருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இது என்னுடைய இயற்கையான குணம். இது பொதுவெளியில் பார்க்கிறவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் மாற்றிக்கொள்கிறேன்" என்று கூறினார்.

    • பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • புதிய வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருக்கிறார்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி பல டாஸ்க்குகள் பல்வேறு திருப்பங்கள் என பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். பின்னர் ஜி.பி.முத்து தாமாக முன் வந்து வெளியேறினார். தொடர்ந்து இரண்டாவது நபராக கடந்த வாரம் அசல் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது 18 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். இப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் இன்றுடன் 22 நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ்

    இதனிடையே சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வந்தது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன். அப்படி கலந்துக் கொள்வதாக இருந்தால், 'நான் தான் பிக்பாஸாக இருப்பேன்' என நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால், 'விவசாயத்திற்கு முக்கியத்துவம்' கொடுக்கும் நிகழ்ச்சியாக, தான் பிக்பாஸை இருந்து நடத்துவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


    மன்சூர் அலிகான்

    இந்த நிலையில், புதிய வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருப்பது பிக்பாஸ் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது உண்மையா?, புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி சாத்தியமா? என்பது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது, "இந்த போட்டியில் உள்ளூர் போட்டியாளர்கள் மட்டும் அல்ல வெளிநாட்டில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளலாம். இதன் மூலம் வெளிநாட்டினரின் அதிநவீன விவசாய கருவிகள் நம் நாட்டுக்கு வரும். மரம் ஏறுவதற்கு சரியான கருவி இல்லாமல் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு போட்டி நடத்தினால் நமக்கு பல அதிநவீன கருவிகளும், கண்டுபிடிப்பாளர்களும் கிடைப்பார்கள்.


    மன்சூர் அலிகான்

    மேலும், விவசாயத்தின் மீது தற்போதைய தலைமுறைக்கு ஆர்வம் ஏற்படுவதோடு, இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட ஒரு வழியாகவும் இந்த போட்டி அமையும். இதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய இயற்கை விவசாய புரட்சி ஏற்படும். இன்று விற்கப்படும் காய்கறிகள் அனைத்தும் செயற்கைத்தன்மை வாய்ந்ததாகவும், ஹைப்ரீட் வகைகளாகவும் இருக்கிறது. இதனால் சிறுவயதில் பல நோய்களுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.


    மன்சூர் அலிகான்

    எனவே, இப்படி ஒரு போட்டி மூலம் இயற்கை முறையில் காய்கறி வளர்த்தலையும், இயற்கை உணவு சமைத்தல் போன்றவற்றை கொண்டு புதிய வகையிலான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால், அது வியாபார அளவில் மட்டும் இன்றி மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்." என்றார்.

    மேலும், இந்த போட்டியை என்னை வைத்து நடத்த எந்த தொலைக்காட்சி முன் வந்தாலும் அவர்களுக்காக நான் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

    • பிக்பாஸ் 6-வது சீசனின் நேற்றைய நிகழ்ச்சியில் தனலட்சுமி எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டது.
    • இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்ற பதற்றத்துடன் போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதையடுத்து பிக்பாசில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் போது ஷெரினாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்கு தனலட்சுமி தான் காரணம் என்று பலரும் குற்றம்சாட்டினர். இதையடுத்து நேற்று இது போட்டினால் ஏற்பட்ட காயம் இதற்கு தனலட்சுமி காரணம் இல்லை என்று கமல்ஹாசன் குறும்படத்தின் மூலம் நிரூபித்தார்.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் அசீம், அசல், மகேஸ்வரி ஆகிய மூன்று பேரில் யார் காப்பாற்றாப்படுவார்கள் என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு மகேஸ்வரி நான் வெளியில் போக மாட்டேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது கூறுகிறார். நான் தான் தப்பு பண்ணிருக்கேன் அப்படினா மக்களுடைய தீர்ப்பு என்னவோ அதை நான் ஏத்துக்குறேன் என்று அசீம் கூறினார்.


    பிக்பாஸ் சீசன் 6

    நான் என்ன பண்ணிட்டேனு என்னைய இந்த இடத்துல உட்கார வச்சிருக்காங்கனு தெரியல அப்படி அசல் சொல்கிறார். இறுதியாக நிவாஷினியிடம் யார் காப்பாற்றப்படுவார்கள் என்று கமல்ஹாசன் கேட்கிறார் அதற்கு அசல் இருப்பாரு இருக்கனும் என்று நிவாஷினி கூறுகிறார். எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என்று இந்த புரோமோ முடிவடைகிறது.




    • பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
    • இதில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க்கால் பல பிரச்சினைகள் வெடித்துள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதையடுத்து பிக்பாசில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் மொத்தம் 19 பொம்மைகள் இடம்பெற்றிருக்கும் ஆனால் 18 பொம்மைகளை மட்டுமே போட்டியாளர்களால் எடுக்கப்பட்டு அந்த அறையில் வைக்கப்படும். மீதம் உள்ள ஒரு நபரின் பெயர் இடம்பெற்றிருக்கும் பொம்மை எடுக்க தவறினால் அந்த பொம்மையில் இருக்கும் நபர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றபடுவார் என்று அறிவிக்கப்பட்டது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்த டாஸ்க்கினால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பிரச்சினைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் அசீம், ஷிவின் இவரும் வெளியில் இருக்கும் சிறைச்சாலைக்கு செல்கின்றனர். அப்போது அசீம் சிறைச்சாலை ஒரு பூஞ்சோலை. அடுத்த முறையிலிருந்து நோ வொர்க் தான் என சொல்கிறார். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இதற்கு முன்பு பொம்மை டாஸ்க்கினால் அசீமிற்கும் தனலட்சுமிக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



    ×