search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசல்"

    • பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் அசல் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார்.
    • இவர் நிகழ்ச்சியில் பெண்களிடம் அத்துமீறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் அசல் வெளியேற்றப்பட்டார்.

    பிக்பாஸ் சீசன் 6

    இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் அத்துமீறியதால் தான் அசல் வெளியேற்றப்பட்டார் என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பெண்களிடம் அத்துமீறவில்லை என்றும் அப்படி தெரிந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அசல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பிக்பாஸ் சீசன் 6

    அதில், "என் வீட்டில் நான் எப்படி இருப்பேனோ அப்படிதான் நான் பிக்பாஸ் வீட்டிலும் இருந்தேன். சகபோட்டியாளர்களை என் வீட்டில் இருப்பவர்களைப் போலதான் நினைத்தேன். நான் தப்பான பார்வையில் பார்த்திருந்தேன் என்றால் உள்ளே இருப்பவர்களுக்கு அது தெரிந்திருக்கும். ஒருத்தர் எப்படி பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் அளவிற்கு மூளை இருப்பவர்கள் தான் உள்ளே இருக்கிறார்கள்.

    பிக்பாஸ் அசல்

    நான் தவறாக எதும் செய்திருந்தால் கண்டிப்பாக வெளியே வந்திருக்கும். கேமராவுக்கு முன்னாடி இப்படி எல்லாம் செய்வேனா? நான் செய்தது பார்க்கிறவர்களை தொந்தரவு செய்திருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இது என்னுடைய இயற்கையான குணம். இது பொதுவெளியில் பார்க்கிறவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் மாற்றிக்கொள்கிறேன்" என்று கூறினார்.

    • விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
    • கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் (அக்னிபத்) நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பித்தவர்கள் தேர்விற்கு வரும்போது அசல் கல்விச்சான்று (8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு) மற்றும் அதன் நகல், கடந்த ஜூலை மாதத் தில் www.joinindianarmy.nic.in என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளபடி குறிப்பிட்ட படிவத்தில் தயார் செய்யப்பட்ட உறுதிமொழி பத்திரம் (அபிடவிட்) மற்றும் இதர ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும்.

    மேலும் இது தொடர்பான முழு விவரங்களையும் www.joinindianarmy.nic.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×