என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bicycle"
- மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
சேலம்:
மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் சிலம்பன் காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32), டிரைவர்.
இவர் கடந்த 8-ந் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.
சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது
இது குறித்த அவர் மல்லூர் போலீசில் புகார் அளித்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சேலம் தாதகாப்பட்டி பங்களா தோட்டம் பகு தியை சேர்ந்த தினேஷ் (23), தாதகாப்பட்டி அம்பாள் ஏரி பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வேறு எங்கும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்றும் விசாரணை நடக்கிறது.
- மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
சேலம்:
மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் சிலம்பன் காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32), டிரைவர்.
இவர் கடந்த 8-ந் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.
சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது
இது குறித்த அவர் மல்லூர் போலீசில் புகார் அளித்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சேலம் தாதகாப்பட்டி பங்களா தோட்டம் பகு தியை சேர்ந்த தினேஷ் (23), தாதகாப்பட்டி அம்பாள் ஏரி பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வேறு எங்கும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்றும் விசாரணை நடக்கிறது.
- தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார்.
- அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார்.
காடையாம்பட்டி:
தர்மபுரி மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் வசித்து வருபவர் முனுசாமி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 42).இவர்கள் கொத்தனார் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் தருமபுரியில் இருந்து சேலத்தை நோக்கி வரும்போது தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார். அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார். முனுசாமி லேசான காயத்துடன் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கடந்த 5 வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.
- இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டுவதற்காக வெளியில் இருந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு வெளியில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை பார்த்தபோது திடீரென காணவில்லை.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (37). இவர் ஜேடர்பாளையம் சரளைமேட்டில் கடந்த 5 வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டுவதற்காக வெளியில் இருந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு வெளியில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை பார்த்தபோது திடீரென காணவில்லை. பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை .இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
- அமைச்சர் சிவ வீ. மெய்யநாதன் வழங்கினார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 125 மாணவர்களுக்கும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 231 மாணவிகளுக்கும், ரகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 165 மாணவ மாணவிகளுக்கு என மொத்தம் 521 விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சிவ வீ. மெய்ய நாதன் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் மாணவ, மாணவியரின் நலனை கருதி பல்வேறு நலத்திட்டங்களையும் பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு வசதிகளை செய்துள்ளதால் அதிக மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இந்த அரிய வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் கல்வி தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
- மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது
- எம்.எல்.ஏ. மொஞ்சனூர் இளங்கோ வழங்கினார்
கரூர்:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி , மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழிகாட்டுதல்படி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் இளங்கோ தலைமை வகித்து 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்.
இதேபோல் உலாமாக்களின் கோரிக்கைகளை ஏற்று பள்ளப்பட்டி சேர்ந்த உலமாக்கள் 20 பேருக்கு விலையில்லா சைக்கிள்களும் வழங்கினார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள 67 அரசு மாநகராட்சி, நகராட்சி, உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1 பயின்ற 4019 மாணவர்கள், 4458 மாணவியர் என மொத்தம் 8,447 மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிகழ்ச்சிகளில் பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் மணியன், பள்ளபட்டி நகர கழகச் செயலாளரும் நகராட்சி துணை தலைவர் தோட்டம்பஷீர், பள்ளபட்டி பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலவாரிய அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
- இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
- அரசு பள்ளியில் படிப்பதே பெருமை என்ற நிலை முதல்வரால் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அமைச்சா் பெரியகருப்பன் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
பெருந்தலைவர் காமராஜா் முதலமைச்சராக இருந்தபோது தமிழக மக்கள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக ஓர் ஆசிரியா் பள்ளியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தினார். இருப்பினும், மாண வா்களின் வருகை குறைவாக இருந்த சூழ்நிலையை கண்டறிந்து மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.
இதன்மூலம் ஏராள மானோா் கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினார். அதன் தொடா்ச்சியாக, முதலமைச்சராக இருந்த அண்ணா ஓர் ஆசிரியா் பள்ளியை ஈராசிரியா் பள்ளியாக தரம் உயா்த்தினார்.
அவரது வழியில் செயல்பட்ட கருணாநிதி அனைவருக்கும் இலவச கல்வியை வழங்கி புதிய வரலாற்றை உருவாக்கினார்.
அதேபோல் மதிய உணவு திட்டத்தில் சத்தான உணவு மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக வாரத்தில் ஒருநாள் முட்டையுடன் உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தி வாரத்திற்கு 5 நாட்கள் முட்டையுடன் உணவு வழங்கி ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தினை ஏற்படுத்தி உள்ளார்.
மேலும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் ஏற்றத்தாழ்வின்றி கல்வி பயிலவும் அனைவரும் சமம் என்ற சூழ்நிலையை உருவாக்கிடவும் பள்ளிச்சீருடையும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தொலைதூரத்தில் இருந்து பள்ளிக்கு வந்து செல்வதற்காக இலவச பஸ் பயண அட்டையும் தமிழக அரசால வழங்கப்படுகிறது.
அதன்படி, அவா்கள் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
தற்போது அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு உயா்கல்வி கற்பதிலும் வேலைவாய்ப்புக்களிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளியில் படிப்பதே ஒரு பெருமை என்ற சூழ்நிலை முதலமைச்சரால் உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை கல்வி கற்பது பெருமை என்ற தவறான எண்ணத்தை களைந்து அரசுப்பள்ளியில் குழந்தைகள் கல்வி கற்கச்செய்ய முன்வர வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்த ப்பட்டு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனா். இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு நல்லமுறையில் படித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சோ்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுவாமிநாதன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவா் சண்முகவடிவேல், ஊராட்சி மன்றத்தலைவா் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராஜேஸ்வாி, சுருளிமூர்த்தி, சகாதேவன், பெற்றோர், ஆசிரியா் கழகத்தலைவா் சக்கரவா்த்தி, வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
- நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பள்ளியில் பயிலும் 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் 190 மாணவ, மாணவிகளுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த செலவில் குடைகளை வழங்கினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில், 179 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டியை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து பள்ளியில் பயிலும் 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் 190 மாணவ, மாணவிகளுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த செலவில் குடைகளை வழங்கினர்.
மழைக்காலம் என்பதால் 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தங்களுடைய சொந்த செலவில் குடைகள் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
- தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் விழா நடைபெற்றது.
- வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு 198 மிதிவண்டிகளையும் வழங்கினார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம், வெள்ளகோவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு உத்தமபாளையம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 101 மிதிவண்டிகளும், வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு 198 மிதிவண்டிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நகர் மன்ற தலைவி மு.கனியரசி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சேடன்குட்டை பழனிச்சாமி, கவிதா, திமுக ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே. சந்திரசேகரன், நகரச் செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், ஒன்றிய அவைத் தலைவர் தண்டபாணி. சிவக்குமார். அன்பரசன்.ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன், பள்ளி தலைமையாசிரியர்கள் குணசேகரன், மனோன்மணி உட்பட நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ஏற்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
- இதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
ஏற்காடு:
ஏற்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.சித்ரா மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு அழைப்புகள் வழங்கப்பட்டது.
இரு தரப்பினரும் விழாவிற்கு வந்ததால் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? யார் சைக்கிள் வழங்குவது? என வாக்குவாதம் ஏற்பட் டது. மேலும் மேடையில் தி.மு.க. மாவட்ட கவுன் சிலர் புஷ்பராணிக்கு பொன் னாடை அணிவித்தனர்.
மேலும் ஏற்காடு டவுன் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்திக்கு பொன்னாடை அணிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அ.தி.மு.க.வினர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தி.மு.க. வினரும் அவர்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கவே இருதரப்புக்கும் காரசார விவாதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக சைக்கிள் பெற மாணவ-மாணவிகள் வெயிலிலேயே காத்திருந்து அவதிப்பட்டனர். இதை தொடர்ந்து சித்ரா எம்.எல்.ஏ. எங்களை ஒரு மணிநேரம் காக்கவைத்து அவமானப்படுத்தும் வகையில் நடப்பதா என பள்ளி தலைமை ஆசிரியை மாலதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் உடனடியாக அங்கிருந்த மாணவர்களை அழைத்து சைக்கிளை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் தாங்கள் இல்லாமலேயே விழாவை நடத்தி இருக்க லாம் எனவும், தங்களுக்கு அழைப்பு விடுத்து அவமான ப்படுத்தி யதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுப ட்டனர்.
இதனால் பள்ளி வளாகத் தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இருதரப்பினர் பிரச்சினை காரணமாக பள்ளி மாணவர்கள் அவதிக் குள்ளாகினர்.
- குமாரபாளையம் அடுத்த காடையாம்பட்டி பகுதியில் புதிய மோட்டார் சைக்கிள் வாங்க 3 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்கள்.
- 5 ஆண்டுகளாக இவர் பத்து ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அடுத்த காடையாம்பட்டி பகுதியை சார்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டய படிப்பு முடித்து தற்போது விளையாட்டு இயக்குனருக்கான மேல்படிப்பை கோவையில் தங்கி படித்து வருகிறார் வீட்டில் இருந்து வரும் காலகட்டத்தில் பறவைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர் பந்தயப் புறாக்கள், மற்றும் லவ் பேர்ட்ஸ் பறவைகள் வளர்ப்புக்கான கூண்டுகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மேலும் விடுமுறை நாட்களில் பறவைகளுக்கான கூண்டு தயாரிப்பிலேயே ஈடுபட்டு வருகிறார் அதிகமான வெளிவட்டார பழக்க வழக்கங்களை தவிர்த்து கிடைக்கும் நேரங்களில் பறவைகளோடு மகிழ்ந்து விளையாடுவது அவருக்கு வாடிக்கையாகும்
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இவர் பத்து ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார் இந்த நாணயங்களின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தொட்டதை தொடர்ந்து அந்த முழு தொகையையும் கொண்டு ஈரோட்டில் பெருந்துறை சாலையில் உள்ள ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக 775 கிலோ கொண்ட 10 ரூபாய் நாணயங்களை தனது நண்பர்கள் மூலம் இரண்டு காரில் ஏற்றிக்கொண்டு கடைக்குச் சென்று புதிய மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார்
இதுகுறித்து இளைஞர் சந்தோஷ் குமார் நிருபர்களிடம் தெரிவித்த போது, பத்து ரூபாய் நாணயங்களை சில கடைக்காரர்கள் வாங்க மறுப்பதை தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வாகனம் பெற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் சந்தோஷ் குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
- நான்கு பள்ளிகளுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
- 806 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருந்தொழுவு, கொடுவாய், கேத்தனூர் மற்றும் பொ.வெ.க அரசு உதவி பெறும் பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வாசுகி வரவேற்றார். திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், துணைத் தலைவர் அபிராமி அசோகன், கேத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ஹரி கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ.சாமிநாதன், மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். விழாவின்போது மொத்தம் 806 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், பிரியா புருஷோத்தமன் ,லோகு பிரசாந்த் மற்றும் உகாயனூர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்