search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bicycle"

    • மாணவ-மாணவிகளுக்கு ரூ.42 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் வழங்கினார்.
    • கிராமப் பகுதியில் இருந்து நகர்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்துசேரமுடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யதுஅம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் தமிழகஅரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்புமற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிவழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.

    ராமநாதபுரம் சட்டமன்றஉறுப்பினர் காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி ரூ.42 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை 850 மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

    அப்ேபாது அவர் பேசியதாவது:-

    தமிழகஅரசின் இத்திட்டம் மிகச்சிறப்பான ஒன்றாகும். இதன் மூலம் கிராமப் பகுதியில் இருந்து நகர்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்துசேரமுடியும். முன்பெல்லாம் நடந்து பள்ளிக்குவந்துசேரும் பொழுதுகாலவிரையம் ஆவதுடன் மனச்சோர்வும் உண்டாகும். இதனால் மனதைஒருநிலைப்படுத்திகல்விகற்பதுஎன்பதுகடினமாக இருந்துவந்தது. இது மட்டு மின்றி இதுபோன்றநிலையில் பலர்படிப்பைதொடர கூட முடியாமல் இருந்து வந்த காலம் அப்பொழுது உண்டு. ஆனால் இப்பொழுது அரசின் எண்ணற்ற திட்டங்களால் பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தால் போதும் உயர்கல்வி வரைபடித்துபயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெ றுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ராமநாதபுரம் நகர்மன்றதலைவர் ஆர்.கே.கார்மேகம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், மாவட்டகல்வி அலுவலர் சுதாகர் மற்றும் பள்ளி தாளாளர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் நகர்மன்ற தலைவி வழங்கினார்
    • சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் திலகவதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    இந்தநிகழ்ச்சியில் திருமங்கலம் தி.மு.க. நகரசெயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், நகராட்சி கவுன்சிலர்கள் ஜஸ்டின் திரவியம், சின்னச்சாமி, வீரக்குமார், ஜமீலாபெளசியா ஆகி யோர் கலந்து கொண்டனர். தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதேபோல் திருமங்கலம் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    • சுற்றுச்சூழல் காக்கப்படுவதோடு உடல்நலத்தையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும்.
    • பொதுமக்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அறிவுறுத்தினார்.

    தஞ்சாவூர்:

    உடல் ஆரோக்கியத்தி ற்காகவும், சுற்றுச்சூழலை காக்கவும் சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் சென்றவர்களுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தலா ஒரு கிலோ தக்காளி விலையில்லாமல் வழங்கப்பட்டது.

    தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை யிலான போக்குவரத்து காவலர்கள் அந்த வழியாக சைக்கிளில் வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அத்தியாவசிய செலவை கட்டுப்படுத்தவும் இது போன்று அன்றாடம் சைக்கிளை தொடர்ந்து உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தி அவர்களுக்கு தலா 1 கிலோ தக்காளி விலையில்லாமல் வழங்கினர்.மேலும் அவர் கூறுகையில், சைக்கிளை பயன்படுத்தாமல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதால் இன்று சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. சைக்கிளை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் காக்கப்படு வதோடு உடல்நலத்தையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

    வரலாறு காணாத அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து வரும் வேளையில் இது போன்ற நூதன விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் பொதுமக்களிடம் விலையில்லாமல் தக்காளி வழங்கப்படுவது தஞ்சை மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது .

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் தலைமையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி,

    மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • 809 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. வழங்கினார்

    அரியலூர்:

    ஜெயங்கொண்டத்தில் 809 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அரியலூர் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர் தண்டலை, பூவாணி பட்டு, வெத்தியார் வெட்டு, கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை அரசு பள்ளிகள் மற்றும் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 809 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா தலைமை தாங்கினார். விழாவில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு 809 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    • கோபால் என்ற வியாபாரி தனக்கு சைக்கிள் வாங்கி தர எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தார்.
    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. விரைவில் சைக்கிள் வாங்கி தருவதாக கோபாலிடம் உறுதி அளித்தார்.

    நெல்லை:

    களக்காடு நகராட்சி, சிதம்பராபுரம் நாராயண சுவாமி கோவில் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அப்போது அந்த ஊரை சேர்ந்த கோபால் என்பவர், தான் சிறிய அளவில் வியாபாரம் செய்து வருவதாகவும், சைக்கிள் வாங்கி கொடுத்தால் தன்னுடைய வியாபாரத்திற்கு அது பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    புதிய சைக்கிள்

    அதனை ஏற்றுக்கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. விரைவில் சைக்கிள் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். அதன்படி நேற்று கோபாலுக்கு களக்காட்டில் தனது சொந்த செலவில் புதிய சைக்கி வாங்கி கொடுத்தார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் வி.என்.கே. அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர் சந்திர சேகர், களக்காடு நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெ க்ஸ், கவுன்சி லர் மீகா, முன்னாள் மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், காங்கிரஸ் கமிட்டி நிர்வா கிகள் துரை, முகம்மது அலி, பாஸ்கரன், விபின், லீலாவதி மற்றும் களக்காடு நகராட்சி காங்கி ரஸ் கமிட்டி நிர்வாகி களும் கலந்து கொண்டனர்.

    • நேற்று முன்தினம் காலையில், ரமேஷ் அவரது மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் தேங்காய் உரிப்பதற்காக சென்றார்.
    • ஆத்தூர் - ராசிபுரம் சாலையில் ஆயில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சில்லி கடை எதிரில் சென்றபோது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கமாக மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா தாண்டாக்கவுண்டம் பாளையம் அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 31). தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலையில், ரமேஷ் அவரது மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் தேங்காய் உரிப்பதற்காக சென்றார். வேலையை முடித்துவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அவர் ஆத்தூர் - ராசிபுரம் சாலையில் ஆயில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சில்லி கடை எதிரில் சென்றபோது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கமாக மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.

    இதில் ரமேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த ரமேஷின் மனைவி தமிழரசி (28), ரமேஷின் தம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த ரமேஷை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையொட்டி, விபத்தில் இறந்த ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சவக்கிடங்கில் வைத்தனர்.

    விபத்து பற்றி ரமேஷின் மனைவி தமிழரசி ஆயில்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிவா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த ரமேஷுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    • சேலம் கருப்பூர் அருகே உள்ள பறவை காடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் மோட்டார் சைக்கிள், சாலையோரம் மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள பறவை காடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் விஜய் (வயது 30).

    இவர் நேற்றிரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து கருப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.

    கந்தம்பட்டி மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள், சாலையோரம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சூரமங்கலம் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சைக்கிள் ஓட்டிச் சென்ற முதியவர் தவறி விழுந்து பலியானார்.
    • சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மதுரை

    வண்டியூர் சி.எம்.நகர் யமுனா நதி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது75). இவர் சவுராஷ்டிராபுரம் பகுதியில் சைக்கிளை ஓட்டிச்சென்றார். அப்போது திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மனைவி வில்லம்மாள் கொடுத்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • பொருளாதாரத்தால் பின்தங்கிய பெண்களுக்கு தையல் எந்திரம், பாய், போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் சிங்கப்பூர் ஜீவ காருண்யா நண்பர்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், மற்றும் பொருளாதாரத்தால் பின்தங்கிய பெண்களுக்கு தையல் இயந்திரம், பாய், போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எழில்நம்பி தலைமை தாங்கினார். செம்பனார் கோவிலில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட கவுன்சிலர் துளசிரகா ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், கேசவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர், சிங்கப்பூர் ஜீவ காருண்யா மேலாளர் குடந்தை கண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்,

    இதில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ.வும் தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் கலந்து கொண்டு 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், தையல் இயந்திரம் வழங்கினார். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வைத்தியநாதன் நன்றி கூறினார்.

    • நள்ளிரவில் சைக்கிளில் சென்று போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
    • பொங்கல் விழா பாதுகாப்புப் பணிக்காக சென்றிருப்பதாக காவலர் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நேற்று நள்ளிரவில் சாதாரண உடையில் சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது திடீரென அவர் மேற்கு காவல் நிலையத்தில் உள்ளே சென்றார் அங்கு ஒரே ஒரு காவலர் பணியில் இருந்தார் அவரிடம் தான் யார் என கூறாமல் மனு கொடுக்க வந்திருப்பதாக சூப்பிரண்டு கூறினார்.

    அவரை அடையாளம் கண்டு கொள்ளாத காவலர், இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வெளியே சென்றிருப்பதாகவும், வந்தவுடன் அவர்களிடம் மனு கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டரின் இருக்கையில் அமர்ந்த சூப்பிரண்டு அங்கிருந்த கோப்புகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் பணியில் இருந்த காவலருக்கு யாரோ உயர் அதிகாரி வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் எங்கு சென்றிருக்கிறார்கள் என காவலரிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரித்தார்.

    அவர்கள் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா பாதுகாப்புப் பணிக்காக சென்றிருப்பதாக காவலர் தெரிவித்தார். மேலும் காவலரிடம் தன்னை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா என்று போலீஸ் சூப்பிரண்டு கேட்டுள்ளார். அப்போது அவரைப் பார்த்ததில்லை என்று காவலர் கூறியுள்ளார். அவரிடம் தான் தான் போலீஸ் சூப்பிரண்டு என்பதை தெரிவித்துவிட்டு மீண்டும் தான் வந்த சைக்கிளில் ஏறி அவர் அங்கிருந்து சென்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாதாரண உடையில் சைக்கிளில் வந்து போலீஸ் ஸ்டேசனில் ஆய்வு செய்தது விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தபால் பொருட்களுடன் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • கீழமுத்துப்பட்டி வீரமுடையான் தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் மதன்குமாரை (22) கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பசுமலையை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் திவ்யா (27). மத்திய அரசு அலுவலகத்தில் தபால் டெலிவரி ஊழியராக உள்ளார். சம்பவத்தன்று மதியம் இவர் சைக்கிளில், தபால் பொருட்களுடன் சென்றார். திருப்பரங்குன்றம் ரோட்டில் ஒரு வீட்டுக்கு தபால் கொடுக்க வேண்டி இருந்தது. அங்குள்ள போலீஸ் பூத் அருகே, சைக்கிளை நிறுத்தினார்.

    திரும்பி வந்து பார்த்த போது தபால் பொருட்களுடன் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் பைக்காரா முத்துராமலிங்கபுரம் மேட்டு தெருவை சேர்ந்த பாண்டியை (46) கைது செய்தனர்.

    மதுரை புதுராமநாதபுரம் ரோடு ஜவகர் சாலையை சேர்ந்தவர் டார்ஜான் ராஜா(வயது35). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு மதுரை-ராமேசுவரம் ரிங் ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை தாக்கி செல்போனை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பசுமலை ராயப்பன் நகரை சேர்ந்த சுரேந்திரன் மகன் ராஜசேகர் (21). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தியிருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பைக்கை திருடிய கீழமுத்துப்பட்டி வீரமுடையான் தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் மதன்குமாரை (22) கைது செய்தனர்.

    • தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நெருப்பாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் உறவினரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்தவர்.
    • உள்ளே சென்று உறவினரை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் மாற்றுச் சாவி மூலம் திறந்து கொண்டிருந்தார்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நெருப்பாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 33). இவர் நேற்று மாலை உறவினரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்தவர்.

    அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று உறவினரை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் மாற்றுச் சாவி மூலம் திறந்து கொண்டிருந்தார்.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராமஜெயம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து, அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தேக்கலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நந்தகுமார் (26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×