search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிதிவண்டி"

    • நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பள்ளியில் பயிலும் 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் 190 மாணவ, மாணவிகளுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த செலவில் குடைகளை வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில், 179 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டியை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் வழங்கினர்.

    தொடர்ந்து பள்ளியில் பயிலும் 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் 190 மாணவ, மாணவிகளுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த செலவில் குடைகளை வழங்கினர்.

    மழைக்காலம் என்பதால் 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தங்களுடைய சொந்த செலவில் குடைகள் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பொத்தனூர் பேரூராட்சி தலைவரும், பேரூர் கழக செயலாளருமான கருணாநிதி, பேரூராட்சித் துணைத் தலைவர் அன்பரசன், வழக்கறிஞர் இளங்கோ தி.மு.கவைச் சேர்ந்த சாமிநாதன்,தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி நகர் மன்ற தலைவர் வழங்கினார்.
    • அரசு மேல்நிலைப்பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரும ங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் படிக்கும் 100 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்து கொண்டு 100 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.

    அப்போது அரசு மேல்நிலைப்பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆதவன் அதியமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சங்கீதா, முருகன், சரண்யா, ரவி மற்றும் தலைமை ஆசிரியர் பாஸ்கரன்,ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக மிதி வண்டி தினம் நடைபெற்றது.
    • மிதிவண்டி பேரணி கல்லூரி வளாகத்தில் தொடங்கி 7 கிலோ மீட்டர் தூரம் சென்றது.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக மிதி வண்டி தினம் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மனோஜ்குமார் வரவேற்று பேசினார். துணை முதல்வர் பாலமுருகன் மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். அவர் பேசும்போது, தற்காலத்தில் மிதிவண்டியின் உபயோகத்தை அதி கரிப்பதால் ஏற்படும் பயன்கள் பற்றி விளக்கி பேசினார்.இந்த மிதிவண்டி பேரணி கல்லூரி வளாகத்தில் தொடங்கி 7 கிலோ மீட்டர் தூரம் சென்றது. இதில் 35 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×