search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளீஸ்வரி கல்லூரியில் மிதிவண்டி தின பேரணி
    X

    காளீஸ்வரி கல்லூரியில் மிதிவண்டி தின பேரணி நடந்த போது எடுத்த படம்.

    காளீஸ்வரி கல்லூரியில் மிதிவண்டி தின பேரணி

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக மிதி வண்டி தினம் நடைபெற்றது.
    • மிதிவண்டி பேரணி கல்லூரி வளாகத்தில் தொடங்கி 7 கிலோ மீட்டர் தூரம் சென்றது.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக மிதி வண்டி தினம் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மனோஜ்குமார் வரவேற்று பேசினார். துணை முதல்வர் பாலமுருகன் மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். அவர் பேசும்போது, தற்காலத்தில் மிதிவண்டியின் உபயோகத்தை அதி கரிப்பதால் ஏற்படும் பயன்கள் பற்றி விளக்கி பேசினார்.இந்த மிதிவண்டி பேரணி கல்லூரி வளாகத்தில் தொடங்கி 7 கிலோ மீட்டர் தூரம் சென்றது. இதில் 35 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×