search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருமை"

    • தரமான கல்வியை கற்பதற்காக தமிழகத்திற்கு வெளிமாநில மாணவர்கள் வருகிறார்கள்.
    • மாணவ, மாணவிகள் படிக்கும்போது, நல்ல முைறயில் படிக்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண் டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ் ணன்கோவில் வி.பி.எம்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழா வுக்கு கல்லூரி சேர்மன் வி.பி.எம்.சங்கர் தலைமை தாங்கினார். தாளாளர் பழனிசெல்வி சங்கர் முன் னிலை வகித்தார்.

    மாணவிகளுக்கு பட்டம்

    கல்லூரி துணைத்தலை வர் தங்க பிரபு, சிந்துஜா தங்கபிரபு ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றனர். விழாவில் அன்னை ெதரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந் தர் டாக்டர் கலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 1,500 மாணவிக ளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப் போது அவர் பேசியதாவது:-

    பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவிக ளுக்கு பட்டம் வழங்குவத மிகவும் பெருமையாக உள் ளது. மேலும் இந்த கல்லூரி மாணவிகள் பல்கலைக்கழக அளவில் தேர்வில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

    தரமான கல்வி

    இந்தியாவில் உள்ள மாநி லங்களில் தமிழகத்தில் கல் வியின் தரம் சிறப்பாக உள் ளது. எனவே பல்வேறு மாநி லங்களில் இருந்தும், பல் வேறு நாடுகளில் இருந் தும் இந்த தரமான கல்வியை கற்பதற்காக தமிழகத்தை நோக்கி மாணவ, மாணவி கள் வருகிறார்கள்.

    எனவே தரமான கல் வியை ஆசிரியர்கள் மாண–வர்களுக்கு போதிக்க வேண் டும். கல்வி கற்பதன் மூலம் மட்டுமே ஒரு உண்மையான, தெளிவான சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆகவே மாணவ, மாணவிகள் படிக்கும்போது, நல்ல முைறயில் படிக்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண் டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பட்டமளிப்பு விழாவில், கல்லூரி இயக்குனர் நாச்சியார் கண்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து
    கொண்டனர்.

    • மாணவி சுபானு சிவதாண்டவ நடனமாடி பெருமை சேர்த்தார்.
    • உற்சாக வரவேற்பளித்து மாணவியை வெகுவாக பாராட்டினர்.

    சீர்காழி:

    மத்திய அரசு சார்பில் காசியில் தமிழ் சங்கமம் விழா கடந்த நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடைபெற்றது.தமிழ் சங்கமத்தில் தமிழ் இலக்கியம், கல்வி கலாச்சாரம், காசி மற்றும் தமிழ் கலாச்சாரமும், தென்னிந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம், உணவு, கைத்தறி விவசாயம், நாட்டுப்புற கலை ஆகியவற்றை காட்டும் 75 அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது,

    காசி மற்றும் தமிழ் நாட்டிற்கு இடையேயான பழமையான தொடர்பை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் இருந்து 2500 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த யோகா மாணவி சுபானு பங்கேற்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 108 முத்திரைகளை காட்டி சிவதாண்டவம் நடன ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி–சீர்காழிக்கு பெருமை சேர்த்தார்.

    மாணவி சுபானு யோகாவில் உலக அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்து 270க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

    காசி தமிழ் சங்கமம் முடிந்து சொந்த ஊரான சீர்காழி வந்தடைந்த சுபானுவை சீர்காழி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் சார்பாகவும் அவரது உறவினர்கள் மற்றும் சீர்காழி நகர பாஜக சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளித்து மாணவியை வெகுவாக பாராட்டினர்.

    • ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, நடுக்கம்பு போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
    • 27 பேர் கலந்து கொண்டு அதில் 24 தங்கப்பதக்கமும் 3 வெள்ளி பதக்கமும் ெபற்று பெருமை சேர்த்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    திருச்சி மாவட்டம் நேரு நினைவு கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மழலையர், மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் போன்ற பிரிவுகளில் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, நடுக்கம்பு, குத்து வரிசை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

    அதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வீரத்தமிழச்சி சிலம்ப பள்ளி மாணவ-மாணவிகள் 27 பேர் கலந்து கொண்டனர் . அதில் 24 தங்கப்பதக்கமும் 3 வெள்ளி பதக்கமும் வென்று தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் வீரத்தமிழச்சி சிலம்பப் பள்ளி ஆசான் உமா (தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகம், தஞ்சாவூர் மாவட்ட தலைவர்) ஆகியோருக்கு கழகத் தலைவர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    • சதய விழா கொண்டாடப்படும் ஒரே மன்னர் ராஜராஜ சோழனுக்கு மட்டும் தான்.
    • யானைகளில் வலம் வந்த சோழன் இடத்தில் நாம் வசிப்பது பெருமை.

    தஞ்சாவூர்:

    மாமன்னர் ராஜ ராஜ சோழனின் 1037-வது சதய விழா இன்று தஞ்சை பெரிய கோவிலில் தொடங்கியது. நாளை வரை இந்த விழா நடைபெறுகிறது. இன்று முதல் நாள் விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக நடைபெற்ற மேடை நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவை நாம் கொண்டாடி வருகிறோம். எத்தனை மன்னர்கள் ஆண்டிருந்தாலும் சதய விழா கொண்டாடப்படும் ஒரே மன்னர் மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு மட்டும் தான். அவர் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு ஆட்சி நடத்தினார். காலத்தால் அழிக்க முடியாத பல பொக்கிஷங்களை தந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன். இதற்கு தஞ்சை பெருவுடையார் கோவிலே சான்று. 1000 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் மாமன்னர் குதிரை, யானைகளில் வலம் வந்திருப்பார். அந்த இடத்தில் தற்போது நாம் நிற்கிறோம். இது நமக்கெல்லாம் பெருமை. ஒரு மன்னர் போர் தொடுக்கும்போது படைகளுக்கு பின்னால் நிற்க கூடாது. முன் நின்று வழி நடத்த வேண்டும். அப்படித்தான் மாமன்னர் தமது படையை முன்னே நின்று வழி நடத்தியுள்ளார். பல போர்களில் வெற்றி கண்டுள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் இரண்டு பதக்கங்கள் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
    • பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவி மற்றும் மூன்றாம் ஆண்டு பாதுகாப்பியல் மற்றும் போர் திறனியல் துறை சேர்ந்த சி.யு.ஓ சிந்துஜா இந்திய அளவில் நடைபெற்ற ஜிவி மௌலாங்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் இரண்டு பதக்கங்கள் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    இதற்கான பாராட்டுவிழா நடைபெற்றது.

    விழாவிற்கு அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுசி முன்னிலை வகித்தார்.

    அன்னை கல்வி குழுமத்தின் தலைவர் அன்வர் கபீர் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் ஹுமாயூன் கபீர், நிர்வாக அலுவலர் ரவி மற்றும் தலைமை செயல் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் மாணவியை பாராட்டினர்.

    துணை முதல்வர்கள் பேராசிரியர் இளஞ்செழியன் மற்றும் பேராசிரியர் ராஜா ஆகியோர் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இதில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • அரசு பள்ளியில் படிப்பதே பெருமை என்ற நிலை முதல்வரால் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அமைச்சா் பெரியகருப்பன் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    பெருந்தலைவர் காமராஜா் முதலமைச்சராக இருந்தபோது தமிழக மக்கள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக ஓர் ஆசிரியா் பள்ளியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தினார். இருப்பினும், மாண வா்களின் வருகை குறைவாக இருந்த சூழ்நிலையை கண்டறிந்து மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.

    இதன்மூலம் ஏராள மானோா் கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினார். அதன் தொடா்ச்சியாக, முதலமைச்சராக இருந்த அண்ணா ஓர் ஆசிரியா் பள்ளியை ஈராசிரியா் பள்ளியாக தரம் உயா்த்தினார்.

    அவரது வழியில் செயல்பட்ட கருணாநிதி அனைவருக்கும் இலவச கல்வியை வழங்கி புதிய வரலாற்றை உருவாக்கினார்.

    அதேபோல் மதிய உணவு திட்டத்தில் சத்தான உணவு மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக வாரத்தில் ஒருநாள் முட்டையுடன் உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தி வாரத்திற்கு 5 நாட்கள் முட்டையுடன் உணவு வழங்கி ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தினை ஏற்படுத்தி உள்ளார்.

    மேலும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் ஏற்றத்தாழ்வின்றி கல்வி பயிலவும் அனைவரும் சமம் என்ற சூழ்நிலையை உருவாக்கிடவும் பள்ளிச்சீருடையும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தொலைதூரத்தில் இருந்து பள்ளிக்கு வந்து செல்வதற்காக இலவச பஸ் பயண அட்டையும் தமிழக அரசால வழங்கப்படுகிறது.

    அதன்படி, அவா்கள் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

    தற்போது அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு உயா்கல்வி கற்பதிலும் வேலைவாய்ப்புக்களிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளியில் படிப்பதே ஒரு பெருமை என்ற சூழ்நிலை முதலமைச்சரால் உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை கல்வி கற்பது பெருமை என்ற தவறான எண்ணத்தை களைந்து அரசுப்பள்ளியில் குழந்தைகள் கல்வி கற்கச்செய்ய முன்வர வேண்டும்.

    பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்த ப்பட்டு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனா். இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு நல்லமுறையில் படித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சோ்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுவாமிநாதன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவா் சண்முகவடிவேல், ஊராட்சி மன்றத்தலைவா் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராஜேஸ்வாி, சுருளிமூர்த்தி, சகாதேவன், பெற்றோர், ஆசிரியா் கழகத்தலைவா் சக்கரவா்த்தி, வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    • காவிரித்தாய், மற்றும் விவசாயிகளை பெருமைப்படுத்தும் விதமாக ‘பசுமையும் பரதமும் 2022’ நிகழ்ச்சி கல்லணையில் நடைபெற்றது.
    • நாட்டிய கலைஞர்கள் பச்சை ஆடையில் அணிவகித்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தினர்.

    பூதலூர்:

    காவிரி டெல்டா மாவட்ட த்தில் தலையாய அணையாக விளங்கும் கல்லணையில் உலக சாதனைக்காகவும் கல்லணையைக் கட்டிய கரிகால் பெருவளத்தான், காவிரித்தாய், மற்றும் விவசாயிகளை பெருமை ப்படுத்தும் விதமாக தஞ்சை கலை பண்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் 'பசுமையும் பரதமும் 2022' நிகழ்ச்சி இன்று காலை கல்லணையில் நடைபெற்றது.

    கல்லணையில் உள்ள மாமன்னன் கரிகாலன் சிலையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று பாலங்களின் மேல்சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு நாட்டிய கலைஞர்கள் பச்சை ஆடையில் அணிவகித்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் திருச்சி மேயர் அன்பழகன், தஞ்சை மேயர் சண்.ராமநாதன் மற்றும் சிவசக்தி அகாடமி, ஆடல் வல்லான் இசை நாட்டியாலயா, காவிரி கலை அரண் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சுற்றுவட்டார பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கலந்து கொண்ட 1000 பரத கலைஞர்கள் அனைவரும் பசுமை உடை அணிந்து நாட்டிய அபிநயம் பிடித்து ஆடினார்கள்.

    இதை காலை நேரத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் பாலங்களில் வழியாக கடந்து சென்ற மக்கள் பார்த்து ரசித்தனர்.

    • மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
    • அரிமளம் அரசு பள்ளியில் ரூ.10 லட்சத்தில் புதிய வகுப்பறை திறப்பு விழா

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டிடத்தினை, அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும் போது,

    தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தனியாரின் பங்களிப்புடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

    மாணவ, மாணவியர்கள் தற்பொழுது அரசுப் பள்ளிகளில் பயில்வதற்கு அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இதன்மூலம் நடப்பாண்டில் சுமார் 5 லட்சம் மாணவி, மாணவியர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.

    அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உயர்கல்வி பெறும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர் கல்விகளில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தனி இட ஒதுக்கீடும் வழங்கப்படுவதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர்.

    எனவே மாணவ, மாணவியர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • 2 மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றுவது தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் பெருமை என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
    • கம்பன் கழக நிறைவு விழாவில் பேசினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் 47-ம் ஆண்டு கம்பன் பெருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நேற்று வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று நிறைவு நாள் மற்றும் பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக இசைவாணி மைதிலியின் வீணை இசை அரங்கேறியது.

    கம்பன் கழக தலைவரும், தொழிலதிபருமான முத்துப்பட்டிணம் ச.ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கம்பன் கழகம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், வெளிநாட்டில் 50 நாடுகளில் செயல்படுகிறது. இருப்பினும் புதுக்கோட்டை கம்பன் கழகம்தான் 10 நாட்கள் விழாவை நடத்துவது சிறப்பாகும். இரு மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றும் தமிழிசை சௌந்தரராஜனை புகுந்த வீட்டில் இருந்தாலும் பிறந்த வீட்டிற்கு அழைத்தன்பேரில் கலந்து கொண்டவரை வரவேற்கிறேன்.

    தமிழ், தமிழ் இலக்கியங்கள், அறம் கலந்த விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவே நான் தலைவர் பதவி ஏற்றுள்ளேன். இந்தமுறை வேகமாக பணிகள் மேற்க்கொண்டதால் சிலரை 10 நாட்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலை. அடுத்த வருடம் இக்குறை போக்கப்பட்டு அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றார். மேலும் நான் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டதால்தான் சிறப்பாக அமைந்தது என சிலர் சொன்னாலும் அதில் சிறு அளவு உண்மை இருந்தாலும் கம்பன் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உழைப்பு உள்ளது என்றார்.

    நிறைவு நாள் விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:-

    கம்பன் விழா ராமனுக்கான விழா. அதை தலைவர் ராமச்சந்திரன் நடத்துவது சிறப்பு. 10 மாதம் சுமந்தால்தான் நல்ல குழந்தையை பெற்றெடுக்கமுடியும். அதனால்தான் கம்பன் விழா புதுக்கோட்டையில் 10 நாட்கள் நடக்கின்றன. நான் மிகவும் சிரமப்பட்டே இவ்விழாவிற்கு வந்துள்ளேன். புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்க வந்துள்ளேன். நான்கு நிகழ்ச்சிகள் ஒத்துக் கொண்டதில் மூன்று நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளேன்.

    இதை தவிர்க்க முடியாமல் கலந்துக் கொண்டுள்ளேன். எனக்கு இரண்டு மாநிலங்களில் ஆளுராக பணியாற்ற பிரதமர் வாய்ப்பு கொடுத்துள்ளார். இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. தமிழர் என்பதால் கூடுதல் பணி கிடைத்துள்ளது. தமிழ் ஒலிக்கும் இடத்தில் தமிழிசை இருப்பாள். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்ற மொழிக்குகேற்ப எனது தந்தை பேச்சை கேட்டு இங்கு பேசுகிறேன் என்றார்.

    கம்பன் இன்னொரு மொழியை கற்றுக்கொண்டு தமிழில் பாடல்களை கொடுத்தார். இதை வலியுறுத்திதான் புதிய கல்வி கொள்கையில் தேசிய கல்வி முறையில் இன்னொரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன். இதில் தாய்மொழி தமிழ் முதல் மொழியாக இருக்கவேண்டும் என கூறியதை சிலர் திருத்தி கூறி வருகின்றனர். தமிழை வளர்க்கும் கம்பன் கழகத்தை பாராட்டுகிறேன். இளைஞர்கள் அதிகளவில் கம்ப ராமாயணம் படிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    விழாவில் தென்னக ெரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் புரட்சிகவிதாசன், சுப்பிரமணியன், முன்னிலை வகித்தனர். காடுவெட்டி குமார் நன்றி கூறினார். அதனை தொடர்ந்து பட்டிமன்றம் நடைபெற்றது. ரேவதி செல்லத்துரை வரவேற்றார். ஸ்ரீ புவனேஸ்வரி தங்கமாளிகை நடராஜன் முன்னிலை வகித்தார். கம்பனை கவிச்சக்கரவர்த்தியாக்கியது நேர்மறைப் பாத்திரங்களா? எதிர்மறை பாத்திரங்களா? என்ற தலைப்பில் நடைபெற்றது. திருச்சி மாது நடுவராக இருக்க ரவிக்குமார், பத்மா மோகன் ஆகியோர் நேர்மறை பாத்திரங்கள் என்றும், எதிர்மறை பாத்திரங்கள் என்ற தலைப்பில் எழிலரசி, சரவணன் ஆகியோரும் பேசினர்.

    • செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டில் ஏ பிளஸ் தரச்சான்று அளித்துள்ளது.
    • அந்த வரிசையில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும் அந்த பெருமையை பெற்றுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரிக்கு ஏ பிளஸ் தரச்சான்று தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம் அளித்துள்ளது.

    சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிர்லாஸ்பூரில் அமைந்துள்ள குரு காசி தாஸ் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். அலோக் சக்கரவால் தலை மையில் வந்த குழுவினர் கல்லூரியின் உள்கட்ட மைப்பு வசதிகள், பேராசிரி யர்களின் தரம், மாணவ ர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகள் மற்றும் தேர்ச்சி விகிதம் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் மதிப்பெண் 4-க்கு 3.32 அளித்து ஏ பிளஸ் தரச்சான்றிதழ் வழங்கப்ப ட்டுள்ளது.

    இது குறித்து கல்லூரியின் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கூறியதாவது:-

    எங்கள் கல்லூரி 25-ம் ஆண்டில் எடுத்து வைக்கும் இந்த தருணத்தில் ஏ பிளஸ் தரச்சான்று கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பின் தங்கிய மாவட்டமென அழைக்கப்படும் ராமநாத புரம் மாவட்டத்தில் பெரு நகரங்களுக்கு இணையான வசதிகளை நம் பகுதியிலும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்து உள்ளது,

    ராமநாதபுரம் மாவ ட்டத்தில் முதல் பொறியியல் கல்லூரியாகவும், தமிழ கத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 17 கல்லூரிகள் தான் இந்த ஏ பிளஸ் சான்றிதழை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும் அந்த பெருமை யை பெற்றுள்ளது. கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், அலுவலக ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மவுண்ட்பர்க் மேல்நிலைப்பள்ளியில் 616 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.
    • மாவட்ட அளவில் கணிதப் பாடத்தில் 12 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர்.

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மவுண்ட்பர்க் மேல்நிலைப்பள்ளியில் 616 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர். இதில் 613 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.51 ஆகும். தேர்வில் மாணவி ஜான்சிராணி 589 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் 98, ஆங்கிலம் 94, இயற்பியல் 99, உயிரியல் 98 வேதியியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவர் ராம்குமார் 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் 98, ஆங்கிலம் 94, இயற்பியல் மற்றும் வேதியியல் 98, உயிரியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவர் சாய் கணேஷ் 587 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் மற்றும் ஆங்கிலம் 95, இயற்பியல் மற்றும் கணக்கு 100, வேதியியல் 98, உயிரியல் 99 ஆகிய மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மதன்மோகன் 587 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் 98, ஆங்கிலம் 95, இயற்பியல் 99, வேதியியல் 100, உயிரியல் 98, கணக்கு 97 ஆகிய மதிப்பெண்கள் பெற்று மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மாவட்ட அளவில் கணிதப் பாடத்தில் 12 பேரும், வேதியியல் பாடத்தில் 17 பேரும், இயற்பியல் பாடத்தில் 4 பேரும், உயிரியலில் 2 பேரும், கணினி அறிவியலில் 8 பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் ஒருவரும், கணக்குப்பதிவியலில் 2 பேரும் ஆக மொத்தம் 46 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.

    மேலும் 580 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 32 பேரும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 55 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 88 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 246 பேரும் மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு மாணவ, மாணவிகள் சிறந்த மதிப்பெண்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் இரா.மணிமாறன், முதல்வர் கலைச்செல்வி ஆகியோர் பாராட்டினர்.

    ×