search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிதிவண்டிகள்"

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் வழங்கினார்
    • 61 மாணவர்களுக்கும் 111 மாணவிகளுக்கும் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார்

    கன்னியாகுமரி,செப்.8-

    கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ம்வகுப்பில்பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை பிரசன்னா தலைமை தாங்கினார்.உதவி தலைமை ஆசிரியர் ஜான் சுகிலன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 61 மாணவர்களுக்கும் 111 மாணவிகளுக்கும் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் லிங்கேஸ்வரி மணிராஜா, சகாய சர்ஜினாள் பிரைட்டன், இந்திரா, ஆட்லின் சேகர், பூலோக ராஜா, முன்னாள் கவுன்சிலர் தாமஸ், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆனந்த், புனிதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • திருமுல்லைவாசல் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாண வர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    எம்.எல்.ஏ.க்கள் எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி), நிவேதா.எம்.முருகன் (பூம்புகார்), கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா வரவேற்றார்.

    விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யனாதன் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசுகையில், தமிழக முதல்வர் பள்ளி கல்வித்துறைக்கு 40 ஆயிரத்து 299 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022 -23 கல்வி ஆண்டில் 52 அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் கல்விப்பயிலும் மொத்தம் 6536 மாணவ மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 14 லட்சத்து 81 ஆயிரத்து 100 மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.

    தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென பூம்புகார், சீர்காழி சட்டபேரவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் விரைவில் மயிலாடுதுறை மாவட்ட த்திற்கு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதே போல் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் துறைமுகம் அமைக்க வேண்டும் என சட்டபேரவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் கலந்து கொண்டனர்.

    தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
    • அமைச்சர் சிவ வீ. மெய்யநாதன் வழங்கினார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 125 மாணவர்களுக்கும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 231 மாணவிகளுக்கும், ரகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 165 மாணவ மாணவிகளுக்கு என மொத்தம் 521 விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சிவ வீ. மெய்ய நாதன் வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் மாணவ, மாணவியரின் நலனை கருதி பல்வேறு நலத்திட்டங்களையும் பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு வசதிகளை செய்துள்ளதால் அதிக மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இந்த அரிய வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் கல்வி தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    • மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது
    • எம்.எல்‌.ஏ. மொஞ்சனூர் இளங்கோ வழங்கினார்

    கரூர்:

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி , மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழிகாட்டுதல்படி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் இளங்கோ தலைமை வகித்து 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்.

    இதேபோல் உலாமாக்களின் கோரிக்கைகளை ஏற்று பள்ளப்பட்டி சேர்ந்த உலமாக்கள் 20 பேருக்கு விலையில்லா சைக்கிள்களும் வழங்கினார்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள 67 அரசு மாநகராட்சி, நகராட்சி, உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1 பயின்ற 4019 மாணவர்கள், 4458 மாணவியர் என மொத்தம் 8,447 மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுவருகிறது.

    இந்நிகழ்ச்சிகளில் பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் மணியன், பள்ளபட்டி நகர கழகச் செயலாளரும் நகராட்சி துணை தலைவர் தோட்டம்பஷீர், பள்ளபட்டி பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலவாரிய அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    ×