search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Award"

    • அரசு பள்ளிக்கு ‘புகையிலை இல்லா கல்வி நிறுவனம்’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
    • சான்றிதழை சுகாதார ஆய்வாளர் வழங்கினார்

    கரூர்,

    புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்ப டுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு புகையிலை பொருட்களால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை விளக்கி அவற்றை பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களும் "புகையிலை இல்லா கல்வி நிறுவனம்" என்ற சான்றிதழை பெற அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆய்வு செய்து சான்று கரூர் கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வு செய்யப்பட்டு, "புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி" 'என்ற பதாகைகள் வைக்கப்பட்டன. புகையிலை தடுப்பு சட்டத்தை விளக்கி பள்ளி வளாகத்தில் புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு, மீறி பயன்படுத்தினால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.fileimaஇந்த நடவடிக்கையின் படி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு "புகையிலை இல்லா கல்வி நிறுவனம்" என்ற சான்றிதழை சுகாதார ஆய்வாளர் கோகுல் ராஜ், தலைமை ஆசிரியர் சாகுல் அமீதுவிடம் பள்ளிக்கு நேரில் வந்து வழங்கினார்.

    • புனேயில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு பிறகு மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    புனே:

    சுதந்திர போராட்டத்தில் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர். அவர் திலக் மகராஜ், லோக மான்ய திலகர் என்றும் போற்றப்பட்டார்.

    லோகமான்ய திலகரின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கு திலக் ஸ்மார்க் மந்திர் அறக்கட்டளையால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ந்தேதி திலக் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கரஸ் தலைவருமான சரத்பவார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மோடியுடன் அவர் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தார்.

    இந்த விழாவில் சரத் பவார் கலந்து கொள்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. மகாராஷ்டிராவில் இந்த 3 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சியின் எதிர்ப்பையும் மீறி சரத்பவார் இந்த விழாவில் கலந்து கொண்டார். இதனால் அவர் மீது காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அதிருப்தி அடைந்தன.

    இதற்கிடையே பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

    லோகமான்ய திலகர் தேசிய விருதை பெறுவதற்கு முன்பு பிரதமர் மோடி புனேயில் உள்ள கணேசர் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

    விருது நிகழ்ச்சிக்கு பிறகு மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    • ஒரு ஏக்கர் பரப்பளவில் அங்கக வேளாண்மையில் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
    • தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு வழங்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்த (2023-24)-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி, சக விவசாயிகளையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது.

    விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளத்தில் வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.100 ஆகும்.

    குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில் அங்கக வேளாண்மையில் பயிர் சாகுபடி செய்ய வேண்டும். முழு நேர அங்கக விவசாயியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

    வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை குடியரசு தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

    இதில் முதல் பரிசாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பதக்கம், 2-ம் பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பதக்கம் வழங்கப்படும்.

    மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுச்சேரி முதல் மந்திரியுடன் சகோதரியாக இணைந்து பணியாற்றுகிறேன்.
    • அனைவரும் உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் நடைபெற்ற ஒரு சமுக சேவை விருது வழங்கும் விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது,

    தஞ்சை மண் மிகுந்த சிறப்புக்குரியது. நான் வாழ்க்கை பாடத்தை தஞ்சையில் தான் கற்றுக் கொண்டேன். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்கள் மிகுந்த அன்பு செலுத்துபவர்கள். அவர்களைப் பார்த்துதான் எனக்கு பொது வாழ்வின் மீது பற்றுதல் ஏற்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

    புதுவையிலும் அன்போடு மக்கள் பழகி வருகிறார்கள். பலர் நான் ஆளுநராக இருந்து அரசியல் செய்வதாக சொல்லுகிறார்கள். அதே நேரத்தில் புதுவை முதல்வர் என்னிடம் சகோதர உணர்வோடு பழகி வருகிறார். புதுச்சேரியில் முதல்வருக்கு, நான் சகோதரியாக இருந்து ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறோம்.

    தெலுங்கானாவில் முதல்வர் என்னை எதிரியாக பார்க்கிறார். அனைவரும் உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும். உழைப்பு இருந்தால் எவரும் முன்னுக்கு வரலாம். அதே நேரத்தில் ஏழைகளுக்கும் சேவை செய்ய வேண்டும். ஏழைகளுக்கு சேவை இறைவனுக்கு செய்யும் சேவை.

    இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக மாவட்டச் செயலாளர் இரா.காமராஜ் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களின் கல்வி செயல்பாடு மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் விருது வழங்கப்படுகிறது.
    • போட்டிகள் நடத்தி தேர்வு செய்யப்படும் சிறந்த மாணவர்கள் காமராஜர் விருதுக்கு பரிந்துரைக்க ப்படுகின்றனர்.

    திருப்பூர்:

    அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் கல்வி செயல்பாடு மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 15 சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 10 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ், பிளஸ் 2 பயிலும் சிறந்த 15 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 20 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    போட்டிகள் நடத்தி தேர்வு செய்யப்படும் சிறந்த மாணவர்கள் காமராஜர் விருதுக்கு பரிந்துரைக்க ப்படுகின்றனர். நடப்பாண்டுக்கான காமராஜர் விருது குறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் தரப்பில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி விருதுக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் பட்டியலை பள்ளி கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • உலக சுற்றுலா தினத்தன்று விருதுகள் வழங்கப்பட உள்ளது.
    • விருது வழங்கும் விழா நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    சுற்றுலாத்துறை அமைச்சர் 2021-2022 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவித்தி ருந்தார்.

    தமிழ்நாட்டின் சுற்றுலாத்து றையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான அறிவிப்பும் ஒன்றாகும்.

    அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சம்மந்தமான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்ளூர்-வெளியூர் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண, விமான பங்களிப்பாளர், சிறந்த தங்கும் விடுதி, உணவகம், சிறந்த வழிகாட்டி சாகச சுற்றுலா நிகழ்த்தியவர், சுற்றுலா தொடர்பான கூட்டம் மற்றும் மாநாடு அமைப்பாளர், சுற்றுலாவில் சமூக ஊடக தாக்கம் ஏற்படுத்தியவர், தமிழக சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் விளம்பர கருத்து சுற்றுலா விருந்தோம்பல், சுற்றுலா தொடர்பான சிறந்த கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் மற்றும் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து உலக சுற்றுலா தினமான 27.9.2023 அன்று விருது வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் விழா நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்மு னைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து 15.8.2023 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

    மேலும் இதுதொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள 04362-230984 மற்றும் 9176995873 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கபடவுள்ளது
    • விவசாயிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங் களை மாவட்டம் அல்லது வட்டார அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

    கரூர்,

    பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்களுடன் விருது வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் இணையதளம் மூலமோ அல்லது மாவட்ட அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பங்களை பூர்த்திசெய்து மாவட்ட அல்லது வட்டார அலுவல கங்களில் சமர்ப்பிக்கவேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவில் பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டரால் அரசு நிகழ்வு அல்லது விழாக்களின் போது சான்றிதழ்களுடன் விருது வழங்கப்படவுள்ளது.

    முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம். பாரம்பரிய காய்க றிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கான விருதுக்கு சொந்த அல்லது குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடிசெய்யும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம். அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டு எடுத்தல், பிறவிவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், நீர்மேலாண்மை, முறையான மண்வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் ஆகிய கார ணிகளின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மாவட்ட கலெக்டர் தலைமையில் தோட்டக்கலை இணை, துணை இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியா ளர் (வேளாண்மை) ஆகியோர் அடங் கிய மாவட்ட அளவிலானதேர்வுக்குழு மாவட்ட அளவிலான விருது பெறும் இரண்டு விவசாயிகளை ஆய்வு செய்து தேர்ந்தெடுப்பார்கள். விண்ணப்பம் https://www.tnhorticulture.tn.gov.in/ என்ற இணையதளம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் கிடைக்கும். விவசாயிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங் களை மாவட்டம் அல்லது வட்டார அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
    • விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    சேலம்:

    தமிழக கவர்னர் மாளிகை சார்பில் சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. தேர்வு செய்யப்படுவோருக்கு 2024 குடியரசு தினத்தன்று கவர்னர் மாளிகையில் பாராட்டு சான்று மற்றும் ரொக்கம் பரிசு வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நிறுவனம் மற்றும் 3 தனி நபர் தேர்வு செய்யப்படுவர். நிறுவனத்துக்கு விருதுடன் ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். தனி நபருக்கு விருதுடன் 2 லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    தனி நபர்கள், அரசு சாரா நிறுவனங்கள், மற்றும் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு செயலர் அல்லது அதற்கு கீழ் உள்ள அதிகாரி, மத்திய அரசு இணை செயலர் அல்லது அதற்கு மேல் நிலையில் உள்ள அதிகாரி, அதே நிலையில் ஓய்வு பெற்றவர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள் மாவட்ட கலெக்டர்கள் பரிந்துரைக்கலாம்.

    விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்ய விண்ணப்பப் படி வத்தை வருகிற 31-ந்தே திக்குள் கவர்னரின் துணை செயலர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர், கவர்னர் செய லகம் சென்னை -600022 என்ற முக வரிக்கு அனு ப்ப வேண்டும்.

    • விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
    • ஆறுமுக நேரி ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் மக்கள் நுகர்வோர் பேரவையின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    பேரவையின் மாநில தலைவர் செல்வன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கொம்பையா, அமைப்புச் செயலாளர் தியாகராஜன், பொருளாளர் லட்சுமணன், அலுவலக முதன்மை செயலாளர் செல்வகுமார், துணைச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் லட்சுமணன் வரவேற்று பேசினார்.

    மாநில செயலாளர் கல்லை சிந்தா அறிமுக உரையாற்றினார். சாகுபுரம் டி.சி.டபுள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன், ஆழ்வை ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கொம்மடிக்கோட்டை கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை, சென்னை பேராசிரியர் வனஜா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தென்திருப்பேரை பேரூராட்சி துணைத் தலைவர் அமுதவல்லி, தனியார் நிறுவன மேலாண்மை இயக்குனர் பாக்கியராஜ் ஆகியோரும் பேசினர்.

    விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதன்படி டி.சி.டபுள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன், ஆழ்வை ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர், ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணை தலைவர் கல்யாணசுந்தரம், ஏ.கே.எல். கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வெங்கடேஷ், சமூக சேவகர் அமிர்தராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் மகராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர்களான ஆழ்வார்திருநகரி சாரதா பொன்இசக்கி, தென் திருப்பேரை மணிமேகலை ஆனந்த், வரண்டியவேல் வசந்தி ஜெயக்கொடி ஆகியோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

    ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைத்து போக்குவரத்தை சீர் செய்யக் கோரியும், ஆறுமுக நேரி ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வலியுறுத்தியும், காயல்பட்டினம் வடபாக வருவாய் எல்லையில் உள்ள ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளை ஆறுமுகநேரி கிராம வருவாய் என அரசாணை வெளியிட வலியுறுத்துவது. இது தொடர்பாக உண்ணாவிரதம் இருப்பது என்றும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரியும் மூடப்பட்ட தொழிற்சாலைகளை விரைவில் திறக்க வலியு றுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அப்துல்லா சாகிபு நன்றி கூறினார்.

    • கல்பனா சாவ்லா விருது, இந்த ஆண்டுக்கு வருகிற சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட உள்ளது.
    • ஏதேனும் ஒரு வகையில் துணிச்சலான முறையில் ஈடுபட்டு செயலாற்றிய தமிழகத்தை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்பனா சாவ்லா விருது, இந்த ஆண்டுக்கு வருகிற சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பாராட்டத்தக்க வகையில் வீர, தீர செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு வகையில் துணிச்சலான முறையில் ஈடுபட்டு செயலாற்றிய தமிழகத்தை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://award.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக வருகிற 5-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நல அலுவலகத்தில் 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 0421 2971168 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • சிறந்த கலைஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பித்த கலைஞர்கள் தற்போது புதிதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

    பெரம்பலூர்:

    தமிழக அரசு மாவட்ட கலை மன்றங்களின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002-03 முதல் ஆண்டு தோறும் வயது மற்றும் கலை பழமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞா்களுக்கு விருதுகள் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளனர். 2022-23 மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 30 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு விரைவில் கூட்டப்பட உள்ளது.

    ஆகவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், பாவைக்கூத்து, தோல் பாவை, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல் கால் ஆட்டம், கலியல் ஆட்டம், கனியான் கூத்து, புலி ஆட்டம், காளை ஆட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைசிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக்கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புற கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    18 வயது மற்றும் அதற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு 'கலை இளமணி' விருதும், 19 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு 'கலை வளர்மணி' விருதும், 36 முதல் 50 வயதிற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு 'கலைச் சுடர்மணி' விருதும், 51 முதல் 65 வயதிற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு 'கலை நன்மணி' விருதும், 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு 'கலை முதுமணி' விருதும் வழங்கப்படவுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயது சான்று மற்றும் கலை தொடர்பான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய விருது, மாநில விருது (கலை மாமணி) மற்றும் மாவட்ட கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கக்கூடாது. கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பித்த கலைஞர்கள், தற்போது புதிதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இம்மாவட்ட விருது பெற தகுதி வாய்ந்த கலைஞர்களிடம் இருந்து வருகிற 15-ந்தேதிக்குள் உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், நைட் சாய்ல் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி-06 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • சாசக விருது 2022-க்கான விண்ணப்பங்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது.
    • இதற்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in என்ற இணையப்பக்கத்தின் மூலம் வருகிற ஜூலை 14 -ந்தேதி வரை வரவேற்கப்படு கின்றன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். இதைத்தவிர சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவில் விளையாடி வருகின்றனர். மேலும் பலர் சமூக சேவை புரிந்து வருகின்றனர்.

    தேசிய விருது

    இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சாசகத்துடன் தொடர்புடையவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், இளைஞர்களிடையே கூட்டாக செயல்படும் உணர்வை மேம்படுத்தவும், சவாலான சூழ்நிலைகளில் விரைந்து செயல்படுவதை ஊக்கப்படுத்தவும், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் டென்சிங் நார்கே தேசிய சாசக விருதினை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக டென்சிங் நார்கே தேசிய சாசக விருது 2022-க்கான விண்ணப்பங்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது.

    இதற்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in என்ற இணையப்பக்கத்தின் மூலம் வருகிற ஜூலை 14 -ந்தேதி வரை வரவேற்கப்படு கின்றன. இந்த விருதுக்கான விதிமுறைகளை இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுக்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் அறியலாம்.

    ரூ.15 லட்சம்

    இந்த விருது ரூ.15 லட்சம் ரொக்கப்பரிசையும், வெண்கல பதக்கம், சான்றிதழையும் கொண்டது. வழக்கமாக இந்த விருது 4 வகைகளில் வழங்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக நிலம், கடல், வான் சாகசங்களுக்கு விருது வழங்கப்படுவதோடு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.

    ×