search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
    X

    கவர்னர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

    • சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
    • விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    சேலம்:

    தமிழக கவர்னர் மாளிகை சார்பில் சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. தேர்வு செய்யப்படுவோருக்கு 2024 குடியரசு தினத்தன்று கவர்னர் மாளிகையில் பாராட்டு சான்று மற்றும் ரொக்கம் பரிசு வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நிறுவனம் மற்றும் 3 தனி நபர் தேர்வு செய்யப்படுவர். நிறுவனத்துக்கு விருதுடன் ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். தனி நபருக்கு விருதுடன் 2 லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    தனி நபர்கள், அரசு சாரா நிறுவனங்கள், மற்றும் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு செயலர் அல்லது அதற்கு கீழ் உள்ள அதிகாரி, மத்திய அரசு இணை செயலர் அல்லது அதற்கு மேல் நிலையில் உள்ள அதிகாரி, அதே நிலையில் ஓய்வு பெற்றவர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள் மாவட்ட கலெக்டர்கள் பரிந்துரைக்கலாம்.

    விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்ய விண்ணப்பப் படி வத்தை வருகிற 31-ந்தே திக்குள் கவர்னரின் துணை செயலர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர், கவர்னர் செய லகம் சென்னை -600022 என்ற முக வரிக்கு அனு ப்ப வேண்டும்.

    Next Story
    ×